இந்த வார ராசிபலன் 21-06-2021 முதல் 27-06-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணப் பற்றாக் குறையே இருக்காது. வருமானம் அதிகரிக்கும். நீங்களே எதிர்பாராத லாபம் தொழிலில் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆனால் எல்லாம் இருந்தும், உங்களுடைய மனம் மட்டும் எதையோ இழந்தது போல தவித்துக் கொண்டே இருக்கும். அவை அனைத்தும் பிரம்மை. உங்களுக்கு இந்த வாரம் நிச்சயம் நல்லது மட்டுமே நடக்கும். புதிய முயற்சிகளை விடா பிடியோடு மேற்கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே. இந்த வாரத்தின் ஆரம்ப கட்டத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமை அனைத்துமே வெளிப்பட போகின்றது. நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அது வெற்றி தான். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு பாராட்டு மழையை பொழிந்து கொண்டே தான் இருக்கப் போகிறார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க போகின்றது. ஆனால் வேலை செய்யும் இடத்தில் மட்டும் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். சொந்தத் தொழிலில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நிறைந்த வாரமாக தான் இருக்கப்போகின்றது. அரசு சம்பந்தப்பட்ட ஏதாவது வேலைகள் இருந்தால் அதை இந்த வாரம் தொடங்குங்கள். வீடு நிலம் வண்டி வாங்கும் யோகம் உண்டு. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் அனாவசியமாக வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான நாளாகத் தான் இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மதிப்பு கூடும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தோடு கோயில்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். உறவினர்களிடையே இருந்த மனக்கசப்பு விலகி, சுமுகமான சூழ்நிலை ஏற்படும். ஆனால் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் வர தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. வீண் விரயங்கள் ஏற்படும். பணம் சமந்த பரிமாற்றங்களில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். யாரையும் நம்பி சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் உஷாராக தான் இருக்க வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் போய் உங்கள் மூக்கை நுழைக்காதீர்கள். அனாவசியமாக மூன்றாவது மனிதர்களுடைய பிரச்சினையில் தலையிட்டால், அந்த பிரச்சனை உங்களை வந்து தொற்றிக் கொள்ளும். முடிந்தால் இந்த வாரம் முழுவதும் மௌன விரதம் இருப்பது நல்லது. அதாவது தேவையற்ற விவகாரங்களில் தலையிட்டு வாயைத் திறக்காமல் இருக்க வேண்டும். யார் எப்போது எதை சொன்னாலும், தலையை மட்டும் ஆட்டி கொள்ளுங்கள் போதும். பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் பல பிரச்சனைகளில் இருந்து வெளிவர போகிறீர்கள். உங்களை துரத்தி வந்த கடன் பிரச்சனை, பணப்பிரச்சனை, ஆரோக்கிய பிரச்சனை அனைத்திலிருந்தும் விடுபட்டு விடலாம். இந்த வாரம் மனது நிறைய சந்தோஷம் நிறைந்து இருக்க போகின்றது. ஆனால் வேலை செய்யும் இடத்திலும், உங்கள் வேலையிலும் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். உங்களுடைய விடா முயற்சியின் மூலம் அதையும் நீங்கள் சரி செய்து விடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைபட்டிருந்த சுப காரியங்கள் நடக்க தொடங்கும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிகள் வெற்றி தரும். உங்களுடைய வேலைகளை, எதிர்பாராத நேரத்தில் சரியாக நடத்தி முடிப்பீர்கள். யாருமே நினைத்திருக்க மாட்டார்கள் நீங்கள் அந்த வேலையை முடித்து வைப்பீர்கள் என்று. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சின்ன பிரச்சனை வந்தால் கூட உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. முடிந்தவரை வெளியிடங்களுக்குப் பயணம் செய்வதை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி இந்த வாரம் முழுவதும் பெரிய பிரச்சினைகள் இருக்காது. தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். வேலையில் அலைச்சல், தொழில் செய்யும் இடத்தில் அலைச்சல், வீட்டில் அலைச்சல் என்று கொஞ்சம் உடல் அசதி ஏற்படத்தான் செய்யும். கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். மன குழப்பம் ஏற்படும். இருப்பினும் எந்த விஷயத்திலும் பதட்டப்படாமல் செயல்பட்டால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி உண்டு. தினமும் காலையில் எழுந்து 5 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும். முடிந்தால் சூரியநமஸ்காரம் செய்வது நன்மையை தரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடின உழைப்பு கட்டாயம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் மேலும் மேலும் முயற்சி செய்தால்தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சோம்பேறித்தனப்பட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டால், சில தோல்விகள் வரும். வாழ்க்கையில் பின்னடைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. சுறுசுறுப்போடு செயல்பட்டு எல்லா விஷயத்தையும் கொஞ்சம் முன்கூட்டியே முடித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் முன்னேற்றத்திற்கு சுறுசுறுப்பு மட்டுமே மூலதனம். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும். அதேபோல் செலவும் அதிகரிக்கப் போகின்றது. முடிந்த வரை சிக்கனமாக செலவு செய்ய பாருங்கள். நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நினைத்த நேரத்தில் நிச்சயமாக நடந்து முடியும். மன கவலை தேவையில்லை. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே அன்யோன்யம் உண்டாகும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில சங்கடங்கள் உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மன குழப்பம்  இருக்கும்போது, அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். கொஞ்சம் தள்ளிப் போடுங்கள். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். திருமண பேச்சு வார்த்தைகளை நடத்தலாம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு அனுகூலமான பலன்களை கொடுக்கும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு கடந்த வாரம் இருந்து வந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் இந்த வாரம் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். பிரச்சினை இல்லை என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கு பிரச்சனை இல்லை. பிரச்சனை இருப்பது போல உணர்ந்தால் அது கட்டாயம் பிரச்சனைதான். மனக்குழப்பத்தை விட்டுவிடுங்கள். தியானத்தில் ஈடுபடுங்கள். சந்தோஷம் உங்களை தேடி வரும். கொஞ்சம் கோபத்தை குறைத்துக் கொண்டு அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் கிடையாது. தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -