விதியே என துயரங்களை தாங்கி கொண்டு துன்பக் கடலில் உழன்று கொண்டிருப்பவர்கள் இந்த தெய்வத்தை வழிபட்டால் போதும். உங்கள் தலைவிதியே மாற்றி விடும் சக்தி வாய்ந்த தெய்வ வழிபாடு

bramma jathagam
- Advertisement -

ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை அனைத்திற்கும் நம்முடைய விதி பலன் தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை தான். இதிலும் ஒரு சிலரின் நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும் எதைத் தொட்டாலும் தோல்வியில் முடியும். எந்த ஒரு சுபகாரியங்களும் அவ்வளவு எளிதில் நடந்து விடாது. பிறர் சாதாரணமாக செய்யக் கூடிய ஒரு வேலை கூட அவர்களிடம் வரும் போது அது கடுமையானதாக மாறி விடும்.

இப்படி எதைத் தொட்டாலும் நஷ்டம் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று ஒரு மனிதனுடைய வாழ்க்கை இருந்தால் அந்த வாழ்க்கை எப்படி நிம்மதியானதாக இருக்கும். நம்முடைய பூர்வ ஜென்மத்தின் பலனாகவே இருந்தாலும் கூட, இந்த பிறவியில் அதை அனுபவிக்கும் போது  நாம் என்ன செய்தோம் எதற்கு இவ்வளவு துன்பம் என்ற எண்ணம் எழத்தானே செய்யும். அப்படியான விதியின் பலனைக் கூட மாற்றி உங்கள் வாழ்வில் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக மாற்றித் தரக் கூடிய அற்புதமான தெய்வமாக விளங்குபவர் தான் பிரம்மா. இப்போது இவரின் ஆலயத்தை குறித்த தகவலையும் அந்த ஆலயத்தில் நம்முடைய குறை தீர எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றியும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

துன்பம் தீர பிரம்மா ஆலய வழிபாடு
இந்த ஆலயம் திருச்சி சென்னை இரண்டிற்கும் இடையில் உள்ள திருப்பட்டூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள பிரம்மாவை தான் நம்முடைய ஊழ் வினைகள் தீர வணங்க வேண்டும். இந்த வழிபாட்டை வாழ்க்கையில் ஒரு முறை செய்தாலே  நம்முடைய விதி பலன் அனைத்தும் மாறி விடும் என்று சொல்லப்படுகிறது.

இந்த ஆலயத்திற்கு செல்லும் பொழுது நம்முடைய ஜாதகத்தை கொண்டு செல்ல வேண்டும். அந்த ஜாதகத்தை நீங்கள் கணினியில் நகல் எடுத்ததாக இருக்கக் கூடாது. பழைய முறைப்படி நோட்டில் ஜாதகத்தை எழுதி கொடுக்கக் கூடியவர்களிடம்  உங்கள் ஜாதகத்தை கொடுத்து எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களிடம் இருக்கும் ஜாதகமே இது போல கட்டம் போட்டு நோட்டில் எழுதிய பழைய முறைப்படியான ஜாதகம் தான் என்றால் அதையே எடுத்துக் கொள்ளலாம். இது இல்லாதவர்கள் மட்டும் புதிதாக எழுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த ஜாதகத்தை உங்களுடைய பிறந்த நாள் அல்லது உங்களுடைய பிறந்த நட்சத்திரம் வரும் நாள், இரண்டு ஏதேனும் ஒரு நாளில் தான் அந்த ஆலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு சென்று இந்த ஜாதகத்தை பிரம்மாவின் பாதங்களில் வைத்த பிறகு உங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய சொல்லி உங்களுடைய விதி பலனை மாற்றி தரும் படி வேண்டிக் கொண்டு அதன் பின் அந்த ஜாதகத்தை நீங்கள் கையில் வாங்கிக் கொண்டு ஆலயத்தை சுற்றி வாருங்கள்.

இந்த வழிபாட்டை முடித்த பிறகு ஆலயத்தில் நீங்கள் அமைதியாக மூன்று மணி நேரம் வரை உங்கள் ஜாதகத்தை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் யாரிடம் பேசக் கூடாது எனவே அமைதியாக தியான முறையில் அமர்ந்திருங்கள் அந்த நேரத்தில் அலைபேசி எல்லாம் அணைத்து விடுங்கள். இந்த நேரத்தில் உங்கள் எண்ணம் சிந்தனை அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை மாற்றி தர வேண்டிய வேண்டுதலாக மட்டுமே இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் ஒரே ஒரு வசம்பு இருந்தால் போதும். வாங்கிய கடனை எல்லாம் சீக்கிரம் திருப்பி கொடுத்து விடலாம்.

அது மட்டும் இன்றி இந்த ஆலயத்தில் 3 மணி நேரம் அமர்ந்திருக்கும் பொழுது உங்களுடைய உடம்பில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்க ஆலயத்தில் உள்ள நல்ல நேர்மறையான ஆற்றல்கள் உங்களுக்கு கிடைக்கும். இதுவே உங்களுடைய பிரச்சனைகளை பாதிக்குமே சரி செய்து விடும். அத்துடன் நம்முடைய தலையெழுத்தை எழுதிய பிரம்மாவிடம் நம் குறைகளை சொல்லி முறையிட்டுள்ளோம். இந்த வேண்டுதலுக்கு நிச்சயமாக அவர் செவி சாய்ப்பார்.

- Advertisement -