தொழிலில் திடீரென நஷ்டம் வந்து , குடும்பத்திலும் தொடர்ந்து பிரச்சினை வந்தால் கண்டிப்பாக இந்த தவறை நீங்கள் செய்திருப்பீர்கள். அதனால் மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உடனே இதை செய்து விடுங்கள்.

- Advertisement -

சிலருக்கு நன்றாக தான் அவர்களின் தொழில் நடந்து கொண்டிருக்கும், நன்றாகவே சம்பாதித்துக் கொண்டிருந்திருப்பார்கள் திடீரென அனைத்துமே முடக்கமாகி போயிருக்கும். எதைத் தொட்டாலும் ராசியாக இருந்த நிலைமை மாறி, எதை தொட்டாலும் நஷ்டம் என்று கட்டத்திற்கு சென்று விடுவார்கள். வீட்டிலும் சண்டை சச்சரவு என்று வந்து கொண்டே இருக்கும். நல்ல தானே இருந்தோம் ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாமல் தவிக்கும் நிலைமைக்கு போய்விடுவோம். இப்படியானவர்களுக்கு இந்த பிரபஞ்சத்திற்குமான தொடர்பில் பாதிப்பு இருக்கும். அதற்குக் காரணமும் நாமாக தான் இருப்போம். இதை சரி செய்யும் பரிகார முறையை தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இதற்கு காரணம் நாம் சில நேரங்களில் தெரியாமல் எதையாவது வாங்கியோ அல்லது தொட்டோ இருப்போம், இதனால் எதை செய்தாலும் ராசியாக இருந்த நம் கையில் அதிர்ஷ்டம் தடைப்பட்டு போய் விடும். நம் சாஸ்திரத்தில் சில பொருட்களை நாம் பிறர் கையால் வாங்கவே கூடாது என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இதனால் தான் நம் முன்னோர்கள் யாரை சந்தித்தாலும் கை கொடுக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளாமல் வணக்கம் சொல்லும் முறையை கடைப்பிடித்தார்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு இரண்டு பொருள் தேவை ஒன்று கல் உப்பு, மற்றொன்று பச்சை கற்பூரம். இதை ஞாயிற்றுக்கிழமை காலையில் தான் செய்ய வேண்டும். விடியற்காலையில் எழுந்து செய்ய வேண்டும் என்பது இல்லை நீங்கள் எப்பொழுது எழுந்து கொள்கிறீர்களோ, அப்போது இந்த பரிகாரத்தை செய்தால் போதும்.

இந்த பரிகாரம் செய்வதற்கு முன்பு ஒரு பக்கெட்டியில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே வைத்து விடுங்கள். கல் உப்பு, பச்சைக் கற்பூரம் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு உங்கள் வீட்டில் வெளியே இடமிருந்தால் அங்கு இந்த பரிகாரத்தை செய்தால் நல்லது, இடமில்லாதவர்கள் ஹாலில் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் உங்கள் கைகளை சுத்தமாக கழுவிய பிறகு கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு முதலில் வலது கையால் கல் உப்பை எடுத்து, இடது கையில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இடது கையால் கொஞ்சம் பச்சை கற்பூரம் எடுத்து அதை கல் உப்பு மீது வைத்து, அதன் பிறகு உங்கள் இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து இந்த கல் உப்பை இரண்டு கைகளிலும் முழுவதுமாக இருக்கும் படி சரி செய்து கொள்ளுங்கள். அதாவது உங்கள் கை நிறைய உப்பு இருக்க வேண்டும், அதற்கு மேல் இந்த பச்சை கற்பூரம் இருக்க வேண்டும். இதை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு ஐந்து நிமிடம் கண்களை மூடி அப்படியே அமர்ந்து இருங்கள். உங்கள் உடலில் இருக்கும் அனைத்து எதிர்மறை சிந்தனைகளும், ஆற்றலும் இந்த கல்லுப்பில் வந்து சேர்ந்து விடும். அதன் பிறகு உங்கள் வீட்டில் யாரேனும் ஒருவரை அழைத்து அந்த பச்சைக் கற்பூரம், உப்பு எதையும் தொடாமல் பச்சை கற்பூரத்தை ஏற்ற சொல்லுங்கள். கற்பூரம் கொஞ்ச நேரம் உங்கள் கையில் இருக்கும் கல்லுப்பின் மீது எரிய வேண்டும் (உப்பு அடியில் இருப்பதால் சூடு ஏறாது கொஞ்ச நேரம் எரிந்தால் போதும்). அதன் பிறகு கையில் இருக்கும் கல்லுப்பை அப்படியே அந்த பக்கெட் தண்ணீரில் கொட்டி விடுங்கள். உப்பு தண்ணீரில் கரைந்தவுடன் அதை கால் படாத இடத்தில் அல்லது செடியில் ஊற்றி விடுங்கள். மற்றவர் நடமாடும் இடத்தில் இதை ஊற்றக் கூடாது. இதை ஊற்றிய பிறகு உடனே தலைக்கு குளித்து விட வேண்டும்.

இந்தப் பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் செய்யலாம். முடியாதவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது இந்த பரிகாரத்தை செய்து கொள்ளும்போது, நம் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் நம்மை சுற்றி இருக்கும் வேண்டாதவர்களின் தீய கண் திருஷ்டி, இப்படி எதுவெல்லாம் நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறதோ அத்தனையும் எரித்து கரைத்து விடும்.

இதையும் படிக்கலாமே: இந்த கோவிலுக்கு போய் வேண்டுதல் வைத்தால், உங்களுடைய வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும். என்ன வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும்.

வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களையும் அதிசயங்களையும் அனுபவித்து முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள்.

- Advertisement -