நினைத்தது நடக்க சபல ஏகாதேசி தாந்த்ரீக பரிகாரம்

sabala yegadasi
- Advertisement -

தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் சிறந்ததாக திகழக்கூடியது மார்கழி மாதம். மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியிருப்பதால் மார்கழி மாதம் என்பது பெருமாளுக்குரிய மாதமாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதேசியை வைகுண்ட ஏகாதேசி என்று விரதம் இருந்து வழிபட்டு சொர்க்கவாசல் பார்ப்பதும் உண்டு. அதே போல் தேய்பிறை ஏகாதேசியும் சிறப்புக்குரியதாகவே கருதப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாளை வரக்கூடிய தேய்பிறை ஏகாதேசி அன்று எந்த தாந்திரீக பரிகாரத்தை மேற்கொண்டால் நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

மார்கழி மாதம் வரக்கூடிய தேய்பிறை ஏகாதேசியை சபல ஏகாதசி என்று கூறுவோம். இந்த ஏகாதசியானது இன்று இரவு 9:56 மணிக்கு தொடங்கி நாளை இரவு 10:10 மணிக்கு முடிகிறது. ஆதலால் நாளை முழுவதும் ஏகாதசி இருப்பதாக கருதப்படுகிறது. ஏகாதசி இருக்கும் இந்த நாளில் ஒரு கைப்பிடி அரிசியை பயன்படுத்தி எப்படி நாம் கேட்ட வரத்தை பெற முடியும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இது ஒரு தாந்திரீக பரிகாரம் என்பதால் இதற்கு எந்தவித விதிவிலக்கும் இல்லை. பெருமாளை மனதார நினைத்துக் கொண்டு ஏகாதசி திதி இருக்கும் நேரத்தில் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்தால் போதும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி தேவைப்படும். பிறகு பிரியாணி இலை தேவைப்படும். இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக பிரம்ம முகூர்த்த வேலையில் குளித்து முடித்து விட்டு பெருமாளை மனதார வழிபட்டு பிறகு செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

ஒரு பச்சை நிற அல்லது நீல நிற பேனாவை பயன்படுத்தி இந்த பிரிஞ்சி இலையில் நம்முடைய வேண்டுதலை நாம் எழுத வேண்டும். அவ்வாறு எழுதுவதற்கு முன்பாக “ஓம் நமோ நாராயணாய” என்னும் பெருமாளின் நாமத்தை எழுதி விட்டு அதற்கு கீழ் நேர்மறை சொற்களை பயன்படுத்தி மூன்று வார்த்தைகளுக்கு மிகாமல் வேண்டுதலை எழுத வேண்டும். பணம் வேண்டும், குழந்தை பாக்கியம், திருமண வரம், உயர் பதவி, அரசாங்க வேலை, நிறைந்த செல்வம், நல்ல அறிவு, நல்ல படிப்பு இப்படி நம்முடைய தேவை என்னவோ அந்த தேவையை நேர்மறையான சொற்களைப் பயன்படுத்தி மூன்று சொற்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு மூடி போட்ட டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டப்பாவில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை போட்டு அதற்கு மேல் நாம் எழுதி வைத்திருக்கும் பிரியாணி இலையை வைக்க வேண்டும். ஒரு இலையில் ஒரு வேண்டுதலை மட்டும்தான் எழுத வேண்டும். ஒன்றிற்கும் மேற்பட்ட வேண்டுதல் இருந்தால் மற்றொரு பிரியாணி இலையில் எழுதிக் கொள்ளலாம். குறைந்தபட்ச வேண்டுதலை வைப்பதே நல்லது.

இப்பொழுது அந்த டப்பாவை மூடி போட்டு நன்றாக மூடி ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். எப்பொழுது இந்த வேண்டுதல் நிறைவேறுகிறதோ அப்பொழுது அந்த பிரியாணி இலையை எரித்து விட வேண்டும். அத்தனை வேண்டுதலும் நிறைவேறிய பிறகு பச்சரிசியை எறும்பிற்கு தானமாக வழங்கி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப வர வழிபாடு

இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை பெருமாளை முழு மனதோடு நம்பி செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -