நீங்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றமே இருக்க கூடாது என்று உங்களுடைய எதிரிகள் செய்வினை வைத்து விட்டார்களா? இதோ உங்களுக்கான பரிகாரம்.

vinayagar-compressed-1
- Advertisement -

ஒருவருடைய தோல்வியில் தான் மற்றவருடைய வெற்றி அடங்கி இருக்கின்றது. ஆகவே நாம் தோற்று விட்டோம் என்ற காரணத்தினால், நம்மை தோற்கடித்த நபரை ஜெயிக்க விடாமல் தடுக்க தவறான பாதைக்கு நாம் என்றுமே செல்லக்கூடாது. நேருக்கு நேராக நின்று முட்டி மோதி ஜெயிக்க வேண்டுமே தவிர, எதிராளி நிறைய லாபம் சம்பாதிக்க கூடாது. நம்மை தோற்கடித்த நம்முடைய எதிரி நல்லாவே வாழக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் நாம் எந்த ஒரு தவறான பாதைக்கும் செல்லக் கூடாது.

குறிப்பாக இன்று தொழில் ரீதியான போட்டி பொறாமைகளில் அடுத்தவர்களை கெடுப்பதற்காக நிறையபேர் பில்லி ஏவல் சூனியம் செய்வினை போன்ற கெட்ட செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இது மிகப் பெரிய தவறு. நமக்கு பிடிக்காத எதிராளிக்கு இப்படிப்பட்ட கெட்ட சக்திகளை ஏவி விடுகின்றோம். அடுத்தவர்களுக்காக நாம் செய்யக்கூடிய கெடுதல், ஒரு சில நாட்களிலேயே நம்மக்கு திரும்பும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. நாம் எதை விதைக்கிறோமோ, அதை நிச்சயம் அறுவடை செய்தே ஆகவேண்டும். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சரி, உங்களுக்கு செய்யும் தொழிலில் முடக்கம். யார் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. நன்றாக லாபத்தை கொடுத்திருந்த தொழில் திடீரென்று நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் ஆகிறது என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நல்ல வேலையில் நல்ல பதவியில் இருந்தவர்கள் திடீரென்று வேலையை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

அதாவது நமக்கே தெரியும். நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு யாரோ ஒருவர் சதி செய்து விட்டார்கள் என்று. அந்த சதியை உடைக்க ஆன்மீக ரீதியாக ஒரு சிறிய பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களை எதிர்த்து நிற்கும் எதிரிக்கு உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் வராது. உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வட்டம் கிடைத்துவிடும் அவ்வளவுதான்.

- Advertisement -

ஒரு அகலமான பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி விடுங்கள். அந்த தண்ணீரில் துளசி இலைகள், வில்வ இலைகள், மஞ்சள் பொடி, செந்தூரம், வேப்ப இலைகள், இவைகளை போட்டு நன்றாக கலந்து விடுங்கள். (இந்த பொருட்களுக்கெல்லாம் அளவு என்பது கிடையாது கொஞ்சம் கொஞ்சம் எல்லா பொருட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.) இந்த தண்ணீரில் ஒரு முழு தேங்காயை போடவேண்டும். தேங்காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காயை இந்த தண்ணீரில் போடுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர் இந்த தேங்காயை கையில் வைத்துக்கொண்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

என்னுடைய வாழ்வில் முன்னேற்றத்தை தடுக்கக் கூடிய எந்த எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும் அது சுக்குநூறாக உடைந்து போக வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமென்று குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு பிரார்த்தனை செய்த பின்பு கையிலிருக்கும் தேங்காயை அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள். அந்த தண்ணீரிலேயே இரண்டு மணி  நேரம் போல தேங்காய் அப்படியே இருக்கட்டும்.

பிறகு குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு தண்ணீரில் இருக்கும் தேங்காயைக் கொண்டு போய் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலில் சிதறு தேங்காய் உடைத்து விட்டால், உங்களை பிடித்த எதிர்மறை ஆற்றல் அனைத்தும் சுக்கு நூறாக சிதறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேங்காயை ஊறவைத்து அந்த தண்ணீரை கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள். வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்வதன் சிறப்பு. தொடர்ந்து 5 ஞாயிற்றுக் கிழமைகள் இந்த பரிகாரத்தை செய்யும் பட்சத்தில் வாழ்வில் நல்ல மாற்றத்தைப் பார்க்கலாம். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -