வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்டிருக்கும் தடைகள் நீங்க பரிகாரம்.

thozhil thadai neenga
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அவர் தேர்ந்தெடுக்கும் வேலை அல்லது தொழில் சிறப்பாக இருக்க வேண்டும். சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தொழிலையோ அல்லது வியாபாரத்தையோ தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலில் பல தடைகளும், தடங்கல்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட தடைகளையும் தடங்கல்களையும் தகர்த்தெறிந்து முன்னுக்கு வருவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கும். அப்படிப்பட்ட அற்புதத்தை நிகழ்த்தக்கூடிய பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒருவர் செய்கின்ற தொழிலிலோ அல்லது வியாபாரத்திலோ ஏதாவது ஒரு ரூபத்தில் தடைகள் ஏற்பட்டாலும், தடங்கல்கள் ஏற்பட்டாலும் அல்லது நஷ்டத்தில் சென்றாலும் கீழ் சொல்லப்பட்ட பரிகாரங்களில் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையுமே பின்பற்றி தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிய முடியும்.

- Advertisement -

வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்டிருக்கும் தடைகள் நீங்குவதற்கு கோவில்களில் ஆன்மீக புத்தகங்களை அச்சிட்டு பக்தர்களுக்கு தானமாக தரவேண்டும். சிவபுராணம், கந்த சஷ்டி கவசம், கோளாறு பதிகங்கள், துதி பாடல்கள், 108 போற்றிகள் என்று நம்மால் எதை அச்சடித்து தர முடியுமோ அதை அச்சடித்து 100, 200 என்ற வகையில் அச்சடித்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தரவேண்டும். இவ்வாறு தருவதன் மூலம் வியாபாரம் மற்றும் தொழிலில் இருக்கும் தடைகள் நீங்கும்.

சில தொழில்களில் அரசாங்கத்தால் தடைகள் ஏற்பட்டு அந்த தொழிலை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் சிவ ஆலயங்களில் சிவ தொண்டு செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் சிவாலயங்களில் உழவாரப்பணி என்று கூறப்படும் கோயிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். அதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தங்களால் இயன்ற அளவு கோவிலை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் கோவிலுக்குரிய பணிகள் இருந்தால் அந்த பணிகளை எடுத்து செய்வதன் மூலமும் அரசாங்கத்தால் ஏற்பட்ட தடைகள் விலகும்.

- Advertisement -

நவகிரகங்களின் பாதிப்பால் வியாபாரம் மற்றும் தொழிலில் தடைகள் ஏற்பட்டு இருந்தால் நாட்டு மருந்து கடைகளில் நவ தானியங்கள் விற்கப்படும். அந்த நவதானியங்களை மஞ்சள் நிற துணியில் மூட்டையாக கட்டி வியாபாரம் அல்லது தொழில் நடக்கும் இடங்களில் நுழைவாயிலில் கட்ட வேண்டும். மேலும் மற்றொரு மூட்டையை பணம் வைத்திருக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கி, நஷ்டங்கள் விலகி லாபம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: பூர்வீக சொத்து கிடைக்க முருகன் வழிபாடு.

இந்த எளிமையான பரிகாரங்களில் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையுமே செய்து வியாபாரத்திலும் தொழிலிலும் ஏற்பட்ட தடைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து தொழிலையும், வியாபாரத்தையும் லாபகரமாக நடத்தலாம்.

- Advertisement -