எவ்வளவு உழைத்தாலும் தொழிலில் பெரிதாக லாபமே இல்லை என்று எண்ணுபவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். விரைவில் செல்வம் உங்களை தேடி தானாக வரும்.

Thozil sirakka
- Advertisement -

கடந்த சில மாதங்களாக உலக அளவில் ஏற்பட்ட ஒரு அசாதாரணமான சூழ்நிலையால் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் பல விதங்களில் மாறிவிட்டது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பலருக்கும் வேலை வாய்ப்பு பறிபோனது. எனினும் அவர்களில் பலர் மனம் தளராமல் தங்களின் சொந்த திறமை மற்றும் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, தங்களுக்கு தெரிந்த தொழில், வியாபாரம் செய்யும் முயற்சிகளில் இறங்கி கடுமையாக உழைப்பதை நாம் பார்த்திருப்போம். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் தங்கள் தொழில், வியாபாரங்களில் அதிகளவு லாபம் ஏற்பட செய்ய வேண்டிய சூட்சுமமான ரகசிய “லால் கிதாப்” பரிகார முறை குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

நம் இந்திய நாட்டை பொருத்தவரை தென்னிந்தியர்களை காட்டிலும் வட இந்தியர்களே சொந்த தொழில், வியாபாரங்களில் கொடி கட்டி பறக்கின்றனர். அதிலும் குறிப்பாக மார்வாடி இன மக்கள் தொழில், வியாபாரங்களில் பெருமளவு லாபம் ஈட்ட அவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் திறமை மட்டும் இல்லாமல் வட இந்தியாவில் வாழ்ந்த மகான்கள் அருளிய லால் கிதாப் ரகசிய பரிகாரங்களை அவர்கள் நம்பிக்கையுடன் செய்து பெருமளவு லாபம் சம்பாதிக்கின்றனர்.

- Advertisement -

“லால் கிதாப்” என்றால் வடமொழியில் “சிவப்பு புத்தகம்” என்று பொருள். சிவப்பு என்பது வட இந்தியர்களை பொருத்தவரை மகிழ்ச்சி, வளமையை குறிக்கும் நிறம் ஆகும். அத்தகைய சிவப்பு நிற துணியில் இந்த தாந்திரீக பரிகார புத்தகங்கள் பாதுகாக்கப்பட்ட காரணத்தால் “லால் கிதாப்” என பெயர் உண்டானது. இத்தகைய சிறப்பு வாய்ந்த லால் கிதாப் பரிகார முறைகளில் தங்களுக்கு அதிகளவு வாடிக்கையாளர்களை ஈர்க்க கூடிய ஒரு ரகசிய பரிகார முறையை குறித்து இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

தங்களின் தொழில், வியாபார இடங்களில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் வந்து வியாபாரம் நடக்க வேண்டு என்று விரும்புபவர்கள், சிறிய அளவிலான 4 மண் குடுவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த நான்கு மண் குடுவைகள் ஒவ்வொன்றிலும் சிறிதளவு கருப்பு எள், சிறிதளவு பயத்தம் பருப்பு, சிறிதளவு பார்லி தானியம், சிறிதளவு கடுகு ஆகியவற்றை போட்டு கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த நான்கு மண் குடுவைகளை ஒரு வெள்ளை அல்லது சிவப்பு நிற துணியை கொண்டு மூடி, மஞ்சள் நிற நூலை கொண்டு கட்டி, உங்கள் தொழில் வியாபார கட்டிடங்களின் பிரதான வாயிலில் இருந்து பார்த்தால் இந்த மண் குடுவைகள் 4 கும் தெரியும் வகையில் வைக்க வேண்டும். இப்படி இந்த நான்கு குடுவைகளையும் மேற்சொன்ன முறையில் வைத்த பிறகு உங்கள் தொழில், வியாபார தலங்களுக்கு அதிகளவு வாடிக்கையாளர்கள் வந்து, உங்களுக்கு தனலாபம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

இந்த நான்கு மண் குடுவைகளையும் உங்கள் கடையில் வைத்த தினத்திலிருந்து, ஒரு வருடம் கழித்து அந்த நான்கு மண் குடுவைகளையும் ஓடை, ஆறு போன்ற ஓடும் நீர் நிலைகளில் வீசிவிட வேண்டும். பிறகு புதிதாக 4 மண் குடுவைகளை வாங்கி மேற்சொன்ன கருப்பு எள்ளு, பயத்தம் பருப்பு, பார்லி, வெண்கடுகு ஆகிய பொருட்களை போட்டு, மீண்டும் உங்கள் கடையில் பிரதான நுழைவாயிலில் இருந்து பார்த்தால் தெரியும் வகையில் வைத்து விட வேண்டும். ஒவ்வொரு வருடமும் இப்படி தொடர்ந்து செய்ய வேண்டும்.

- Advertisement -