புதன்கிழமையில் விநாயகருக்கு இந்த ஒரு பொருளை வைத்து வழிபட்டால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் நீங்கி லாபம் அதிகரித்து பெரிய தொழிலதிபர் ஆகக்கூடிய யோகத்தை பெறலாம்.

vinayagar man
- Advertisement -

தொழில் நஷ்டம் ஏற்படுவது என்பது சாதாரண விஷயம் வாழ்வாதாரத்தையே திருப்பி போட்டு விடக் கூடியது. பெரிய அளவில் தொழில் நடந்துபவர்கள் ஓரளவிற்கு தங்களுடைய வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கும் முன்னேற்றத்திற்கும் பலவிதமான வாய்ப்புகளை கொண்டு இருப்பார்கள். ஆனால் சின்ன சின்னதாக தொழில் தொடங்கி எப்படியாவது முன்னுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் தொழிலில் முடக்கம் ஏற்பட்டால் அதிலிருந்து அவர்கள் மீள்வது என்பது மிகவும் சிரமம். இந்த நிலைமையில் உள்ளவர்கள் தங்களுடைய வியாபாரத்தில் விருத்தி செய்து கொள்ள இந்த ஒரு எளிய பரிகார முறை உதவியாக இருக்கும். அதை பற்றிய ஒரு தகவலை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தொழிலில் முன்னேற்றம் அடைய
எந்த ஒரு செயலையோ, எந்த ஒரு வழிபாட்டையோ தொடங்குவதற்கு முன்பாக நாம் முதலில் வழங்குவது விநாயகரை தான். இந்த விநாயகர் நமக்கு மட்டும் முழுமுதற்கடவுள் கிடையாது. இவர் கடவுள்களுக்கே முதற்கடவுள் என்று பல புராணக் கதைகள் சொல்கிறது. அப்படியான இந்த விநாயகரை வழிபட்டு தான் இந்த வியாபாரம் முடக்கத்தில் இருந்து வெளி வருவதற்கான வழியினை நாம் தேடிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த விநாயகர் வழிபாட்டிற்கு புதன்கிழமை மிகவும் உகந்த நாளாக சொல்லப்படுகிறது. பெண் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது போன்ற பழமொழிகள் இந்த புதன்கிழமைக்கு உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கிழமையில் இவரை தொடர்ந்து வழிபடுவதன் மூலம் நம்முடைய பிரச்சனைகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளலாம். அதைப் பற்றி தொடர்ந்து பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வழிபாடு செய்ய புதன்கிழமையில் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு விநாயகர் ஆலயத்திற்கு செல்லுங்கள். அங்கு விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். அப்படி மாலையாக போட முடியவில்லை என்றாலும் சிறிதளவு அருகம்புல்லையாவது கையில் கொண்டு செல்லுங்கள். அடுத்து விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இவையெல்லாம் செய்து முடித்த பிறகு விநாயகருக்கு வெல்லக்கட்டியை வாங்கி வைத்து வணங்க வேண்டும்.

- Advertisement -

இந்த வெல்லக்கட்டியை நீங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து அதை சமையலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது அந்த வெல்லக்கட்டியை அப்படியே கோவிலுக்கும் கொடுத்து விடலாம். இப்படி ஏழு வாரங்கள் தொடர்ந்து அருகம்புல் மாலை சாற்றி நெய் விளக்கு தீபம் ஏற்றிய பிறகு வெல்லக்கட்டியை வைத்து வணங்கும் போது உங்களுடைய அனைத்து பிரச்சனைகளும் தீர்வதோடு தொழிலில் ஏற்பட்டிருக்கும் முடக்கங்கள் நீங்கும்.

இத்துடன் நீங்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் தொடர்ந்து தடை ஏற்பட்டு கொண்டே இருப்பதாக உணர்ந்தால் இதே போல் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பிறகு விநாயருக்கு குங்கும அர்ச்சனை செய்தால் பிரச்சனைகள் தீரும். இந்த குங்கும அர்ச்சனையை நீங்கள் எத்தனை வாரங்கள் வேண்டுமானாலும் தொடர்ந்து செய்யலாம். உங்களுடைய பிரச்சனைகள் காரிய தடைகள் எல்லாம் நீங்கி வாழ்க்கையில் வெற்றியை அடைவீர்கள்.

இதையும் படிக்கலாமே: ஒரே ஒரு கருப்பு நூல் இருந்தால் போதும். வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த அனைத்து கஷ்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

புதன்கிழமையில் விநாயகரை இப்படி எளிய முறையில் வழிபட்டு இந்த பரிகாரத்தையும் செய்யும் போது உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகள் முதல் தொழிலில் இருக்கும் தடைகள் வரை அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் மென்மேலும் உயர்வீர்கள் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -