வீட்டில் வற்றாத செல்வ வளம் ஊற்றெடுத்து பல மடங்காக பெருக, விளக்கு ஏற்றும் போது இந்த 1 வார்த்தையை மனதார சொல்லுங்கள். பெண்கள் இதை செய்தால் வீட்டில் பணக்கஷ்டம் என்பதே வராது.

mahalakshmi-vilakku
- Advertisement -

ஒரு வீட்டில் பண கஷ்டம் வருவதற்கும், செல்வ செழிப்பு பெருகுவதற்கும் காரணமாக இருப்பது அந்த வீட்டு பெண்கள்தான். வீட்டுப் பெண்கள் தான் மகாலட்சுமியின் ஸ்வரூபம் என்று சொல்லுவார்கள். அவர்கள் குடும்பத்தை திறமையாக நடத்திச் சென்றாலே வீட்டில் கஷ்டம் இருக்காது. வறுமை இருக்காது. சந்தோஷம் பல மடங்காக பெருகும். இது நிதர்சனமான உண்மை. பலபேர் குடும்பங்களில் இதை நாம் பார்த்தும் இருக்கின்றோம். ஒவ்வொரு வீட்டில் இருக்கக்கூடிய பெண்களும் தினமும் தங்களுடைய வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது அவர்கள் இந்த இரண்டெழுத்து மந்திரத்தை மட்டும் மனதார நினைத்துக் கொண்டு விளக்கு ஏற்றினால் போதும். அவங்க வீட்டில் லட்சுமி கடாட்சம் தாண்டவமாட தொடங்கிவிடும். பணக்கஷ்டம் என்பதே இருக்காது. கடன் சுமை படிப்படியாக குறையும். அந்த மந்திரம் என்ன. பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செல்வ கடாட்சம் பெருக பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்:
காலை நேரமோ அல்லது மாலை நேரமோ வீட்டில் விளக்கு ஏற்றும் போது பெண்கள் ‘ஸ்ரீம்’ என்ற மந்திரத்தை சொல்லிவிட்டு அதன் பிறகு விளக்கு ஏற்ற வேண்டும். இது மகாலட்சுமியின் பீஜ மந்திரமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த பீஜ மந்திரம் செல்வ வளத்தை ஈர்க்கக் கூடியது. அது மட்டுமல்லாமல் உங்களுடைய குடும்பத்திற்கு பெயர் புகழ் அந்தஸ்து இவைகளை தேடி தரக்கூடிய சக்தியும் இதற்கு உண்டு. தினமும் விளக்கு ஏற்றும் போது மேல் சொன்ன மந்திரத்தை உச்சரித்துப் பாருங்கள் ஒரு சில நாட்களில் உங்களுடைய குடும்பத்தில் நிகழும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

- Advertisement -

சரி, ஒரு சில வீடுகளில் கஷ்டம் என்பது ரொம்ப ரொம்ப அதிகமாக இருக்கும். அதாவது கணவருக்கு வேலை இருக்காது. கணவர், சம்பாதிப்பதை விட்டுவிட்டு தவறான பாதையில் குறுக்கு வழியில் செல்வார். பிள்ளைகள் படித்துவிட்டு வேலை இல்லாமல் சும்மாவே இருப்பார்கள். வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் சாப்பாடு சமைத்து போடுவதற்கு அரிசி பருப்பு வாங்குவதற்கு கூட சிரமம் இருக்கும். வீட்டு வாடகை கொடுக்க முடியாது.

இப்படி எல்லாம் ரொம்பவும் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் 90 நாட்கள் தொடர்ந்து உங்களுடைய வீட்டில் இந்த விளக்கை ஏற்றுங்கள். உங்களுடைய பணக்கஷ்டம் எல்லாம் அந்த 90 நாட்களுக்குள் சரியாக கூடிய அதிசயத்தை காண்பீர்கள். ஆனால், நம்பிக்கையோடு விளக்கு ஏற்ற வேண்டும்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் வறுமையை விரைவாக விரட்டி அடிக்க, உங்கள் வீட்டு தென்மேற்கு மூலையில் ஒரு சின்ன பலகையின் மேல் மண் அகல் விளக்கு வைத்து விடுங்கள். அதில் நல்லெண்ணெயோ அல்லது பசு நெய் ஊற்றி பஞ்ச திரி போட்டு விளக்கு ஏற்றி வையுங்கள். அந்த விளக்கத்திற்கு முன்பாக சிறிது நேரம் அமர்ந்து ‘ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற இந்த ஒரு மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து இந்த விளக்கு உங்களுடைய வீட்டில் தொண்ணூறு நாட்கள் ஏற்றப்பட வேண்டும். (இந்த வழிபாட்டு முறையை வளர்பிறை வெள்ளிக்கிழமையில் தொடங்குவது ரொம்ப ரொம்ப சிறப்பு.)

காலை அல்லது மாலை எந்த நேரத்தில் முடியுமோ அந்த நேரத்தில் இந்த விளக்கை வீட்டில் ஏற்றலாம். வீட்டுப் பெண்களால் மாதவிடாய் நாட்களில் இறை வழிபாடு செய்ய முடியாது. விளக்கு ஏற்ற முடியாது. உங்களுடைய வீட்டில் வேறு ஏதாவது பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை விட்டு இந்த விளக்கை ஏற்ற சொல்லலாம். வேறு யாருமே இதை செய்ய மாட்டார்கள் என்றால் மாதவிடாய் நாட்களை தவிர்த்து விட்டு, தொண்ணூறு நாட்கள் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

இந்த மந்திரமும் இந்த விளக்கு ஒளியும் உங்களுடைய குடும்பத்தை பிரகாசமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -