தினமும் காலையில் இந்த 2 வார்த்தையை சொல்லி விட்டு தொழில் செய்ய செல்லுங்கள். நீங்கள் செய்யும் தொழிலில் கைநிறைய லாபத்தை பார்க்கலாம்.

cash-deepam-vilakku
- Advertisement -

நிறைய பேருக்கு சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை கனவு இருக்கும். ஆனால் நிறைய முதலீடு செய்து நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டு எவ்வளவு தான் உழைப்பை போட்டாலும் சொந்த தொழிலில் முன்னேற்றம் என்பது இருக்காது. சில பேருக்கு ஜாதக ரீதியாக பிரச்சனை இருக்கும். சில பேருக்கு என்ன பிரச்சனை என்றே தெரியாது. ஆனால் செய்யக்கூடிய தொழிலில் நிறைய நஷ்டம் வந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சனை இருந்தாலும் சரி. தினம்தோறும் இந்த ஒரு வழிபாட்டை மட்டும் செய்து வாருங்கள். நிச்சயமாக செய்யும் தொழிலில் பெரிய லாபத்தை பெறலாம். தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் அடையலாம்.

தினமும் காலை எழுந்து பூஜை அறைக்கு சென்று தீபமேற்றி வைத்து விடுங்கள். உங்களுடைய இஷ்ட தெய்வம் எந்த தெய்வத்தை வேண்டிக் கொண்டாலும் சரி தான். இந்த குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரு சிறிய தட்டில் வெற்றிலை 5, முழு கொட்டைப்பாக்கு 4, இந்த இரண்டு பொருட்களை வைத்து ‘குருவடி சரணம்! திருவடி சரணம்!’ என்ற வார்த்தைகளை சொல்லி முழுமனதோடு இறைவழிபாடு செய்து விட்டு, அதன் பின்பு தொழிலுக்கு செல்லும் போது உங்களுக்கு நன்மையே நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத லாபத்தை பெறலாம்.

- Advertisement -

தினம்தோறும் இந்த வழிபாட்டை செய்யலாம் தவறு கிடையாது. முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு நாள், வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் இந்த பரிகாரத்தை செய்தாலும் நல்ல பலனை கொடுக்கும். அப்படி இல்லை என்றால் முக்கியமான தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக வெளியே செல்கிறீர்கள். முதன்முறையாக முதலீட்டை போடப் போகிறீர்கள். அல்லது காண்ட்ராக்ட் கையெழுத்திட போகிறீர்கள் எனும் பட்சத்தில் அன்றைய தினம் இந்த வழிபாட்டை முழுமனதோடு செய்துவிட்டு, சொந்த தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது அதில் நீங்கள் நம்ப முடியாத வெற்றியை காண்பது உறுதி.

அடுத்ததாக இன்னொரு பணிகாரம். கருநீல துணி, சிவப்பு நிறத் துணி இந்த இரண்டு நிறத்திலும் காட்டன் துணிகளை வாங்கி கொள்ளுங்கள். சதுர வடிவில் கைக்குட்டை அளவு சிறிய துணி இருந்தால்கூட போதும். இரண்டு வண்ண துணிகளையும் ஒரு துணியின் மேல் இன்னொரு துணியை வைத்து விட்டு, அதில் ஒரு கைப்பிடி அளவு கொள்ளு தானியத்தை வைத்து சுருட்டி முடிச்சு போட்டு உங்களுடைய தலையை ஏழு முறை சுற்றி ஓடும் ஆற்றில் விட்டு விட வேண்டும். மூன்று வார சனிக்கிழமை இந்த பரிகாரத்தை அதாவது கொள்ளு பரிகாரத்தை செய்து வந்தால் செய்யும் தொழிலில் இருக்கக்கூடிய தடை நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடுத்தபடியாக இன்னொரு பரிகாரம். புளிய மரத்தின் வேர் கிடைத்தால் அந்த வேரை நன்றாக காய வைத்து பொடி செய்து நெற்றியில் இட்டுக்கொள்ளும் திருநீற்றில் கலந்து தினமும் புளிய மர வேர் பொடி கலந்த விபூதியை நெற்றியில் இட்டு வந்தால் தொழில் தடை விலகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சனிபகவானால் தொழில் தடை இருந்தால் இந்த பரிகாரம் கைமேல் பலனை கொடுக்கும்.

மேல் சொன்ன பரிகாரங்களை எல்லாம் செய்தாலும் உங்களுடைய முயற்சி என்பது கட்டாயம் இருக்க வேண்டும். எதையுமே செய்யாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே சொந்தத் தொழிலில் லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. ஒரு முறை தோற்றாலும் துவண்டு போய் அமரக்கூடாது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும் போது நிச்சயமாக வெற்றி ஒரு நாள் உங்கள் பக்கம் வரும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -