நீங்கள் செய்யும் வியாபாரத்தில் லட்ச லட்சமாக லாபத்தை பார்க்க ஆசையா இருக்கா. அப்ப ஒரே ஒரு கொட்டை பாக்கை திங்கட்கிழமை உங்கள் கடைக்குள் இப்படி வையுங்க போதும்.

pakku
- Advertisement -

பெரிய அளவில் வியாபாரம் செய்யும் தொழில் அதிபர்களாக இருந்தாலும் சரி, சின்ன சின்ன கடை வைத்து அன்றாடம் வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்கும் சின்ன வியாபாரிகளாக இருந்தாலும் சரி, இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்தால் போதும். நீங்கள் இப்போது பார்க்கும் லாபத்தை விட, பல மடங்கு பெரிய லாபத்தை உங்கள் தொழிலில் பார்க்கலாம். சொந்த தொழில் எதற்காக செய்கின்றோம். படிப்படியாக லாபம் அதிகரித்து, படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தானே. நீங்கள் விரும்பி செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் பல மடங்கு லாபத்தை பெற இதோ ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரம்.

வியாபாரம் சிறக்க திங்கட்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு முழு கொட்டை பாக்கு தேவை. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு செம்பு காயின் தேவை. இதுவும் நாட்டு மருந்து கடைகளில் பரிகாரத்திற்கு என்று கேட்டால் கொடுப்பார்கள். அதையும் வாங்கிக் கொள்ளுங்கள். திங்கட்கிழமை காலையிலேயே எழுத்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு அரச மரத்தடி விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள். ஒரு அரச மர இலையை அந்த மரத்திலிருந்து பரித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த இலையை பிள்ளையாரின் பாதங்களில் வையுங்கள். அந்த இலைக்கு மேல் நீங்கள் எடுத்துச் சென்ற கொட்டைப்பாக்கையும், செம்பு காசையும் வைத்து, விடுங்கள். அரச மரத்துப் பிள்ளையாருக்கு பக்கத்தில் நாம் போகலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அந்த பிள்ளையாருக்கு ஒரு செம்பருத்தி பூவை வைத்துவிட்டு, மூன்று தோப்புக்கரணம் போட்டு, பிள்ளையார் கொட்டு வைத்து, அரச மரத்தை மூன்று முறை சுற்றி வாருங்கள். மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள். வியாபாரத்தில் மேலும் மேலும் உயர வேண்டும் என்று. கனவுகள் பெரியதாக இருந்தால் தான் லட்சியத்தில் ஜெயிக்க முடியும் என்பது நம்முடைய முன்னோர்களின் வாக்கு.

ஆகவே எவ்வளவு கேட்க முடியுமோ கேளுங்க. வேண்டுதல் தானே எந்த வரையறையும் கிடையாது. பேராசை பெரு நஷ்டம் என்று சொல்லுவார்கள். ஆனால் வேண்டுதலில் கொஞ்சம் உயர்ந்த சிந்தனை இருப்பது தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதலை எல்லாம் அந்த விநாயகர் காதல் சொல்லிவிட்டு, விநாயகர் பாதங்களில் வைத்த அரச இலை, கொட்டை பாக்கு, செம்பு காசு மூன்று பொருட்களையும், நீங்கள் தொழில் செய்யும் கடைக்கு எடுத்து வாங்க. வியாபாரம் செய்யும் கடையில் பூஜைக்கு என்று தனியாக ஒரு இடம் இருக்கும் அல்லவா. அந்த இடத்தில் ஒரு தட்டின் மேல், இந்த அரச இலைக்கு மேலே கொட்டைப்பாக்கு, செம்பு காசையும் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வியாழக்கிழமை இந்த மூன்று பொருள்களை ஒன்றாக சேர்த்து கையில் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொன்னால், வீட்டில் பணமழை பொழிவதை யாராலும் தடுக்க முடியாது.

தினமும் விளக்கேற்றும் போது இதற்கு ஒரு ஊதுவத்தி காண்பியுங்கள் போதும். கிடைக்காத காண்ட்ராக்ட் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும். வராத வருமானம் எல்லாம் வரும். விற்காத பொருட்கள் எல்லாம் விற்கும். பண வசியம் ஜன வசியம் ஏற்படும். பெரிய அளவில் உங்களுடைய பிசினஸ் டெவலப் ஆக தொடங்கிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -