வியாழக்கிழமை இந்த மூன்று பொருள்களை ஒன்றாக சேர்த்து கையில் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொன்னால், வீட்டில் பணமழை பொழிவதை யாராலும் தடுக்க முடியாது.

kuberar money manthiram
- Advertisement -

வீட்டில் செல்வம் கடாட்சம் பெருகவும் பணம் நிரந்தரமாக தங்கவும் பல தாந்திரீக வழிமுறைகளையும் கேள்வி பட்டிருப்போம். அதில் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். இதற்குக் காரணம் பணம் தொடர்பான அத்தனை பரிகாரங்களையும் ஒவ்வொரு தெய்வத்திற்கென தனியாக செய்வோம். ஆனால் இந்த ஒரு பரிகாரத்தில் நாம் மகாலட்சுமி தாயார், குபேரர், சுக்கிரர், கேது பகவான் என அனைவரையும் ஒரு சேர நினைத்துசெய்வதால் பணத்தடைகள் நீங்க நல்லதொரு பரிகாரமாக இதை சொல்லப்படுகிறது. இப்போது இந்த பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த தகவலை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் இருக்கும் பணத்தடைகள் நீங்கி பணம் நிரந்தரமாக தங்க
இந்த பரிகாரத்தை செய்ய நாம் ஒரு பவுடரை தயார் செய்ய வேண்டும் இந்த பவுடர் கடைகளில் கிடைக்காது நாமே வீட்டில் தயார் செய்ய வேண்டும். அதற்கு 50 கிராம் ஜாதிக்காய், 50 கிராம் சுருள்பட்டை, 50 கிராம் ஏலக்காய் எது மூன்றையும் வாங்கி நம் வீட்டில் மிக்ஸியில் போட்டு அரைத்து பவுடராக்கி தனியாக ஒரு பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல் இந்த பவுடருடன் சேர்க்க ஜாஸ்மின் ஆயில் இதை கடையில் வாங்கிக் கொள்ள வேண்டும். முன்பு சேர்த்திருக்கும் ஜாதிக்காய், சுருள்பட்டை ஏலக்காய் இவையெல்லாம் மகாலட்சுமி தாயார் சுக்கிரன் அருள் பெற்ற பொருட்கள். அதே போல் இந்த ஜாஸ்மின் ஆயில் என்பது கேது பகவானை குறிக்கும். அத்துடன் இந்த பரிகாரத்தை நாம் வியாழக்கிழமைகள் செய்யும் போது குரு பகவான் அனுகிரகம் கிடைக்கும். இவற்றை எல்லாம் விட வியாழக்கிழமை மாலையில் குபேரருக்கு உகந்த நேரத்தில் செய்வதால் குபேர சம்பத்தும் ஏற்படும்.

இந்த பரிகாரத்திற்கு அடுத்து நமக்கு தேவைப்படுவது மஞ்சள் திரி. ஒரு வெள்ளை நிற திரியை மஞ்சளில் நனைத்துநிழலில் ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது இரண்டு திரிஒன்றாக போட்டு தீபம் ஏற்ற வேண்டும். எனவே இரண்டு இரண்டு திரிகளை எடுத்து காய வைத்து ஒன்றாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் முதலில் உங்கள் வீட்டு வாசலுக்கு வெளியில் சென்று இந்த பொடியை உங்கள் கையில் வைத்துக் கொண்டு இத்துடன் கொஞ்சம் ஜாஸ்மின் ஆயிலும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இந்த மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

- Advertisement -

கிரகலட்சுமி தனம் தானியம் சௌபாக்கியம் தேகி தேகி நமக.
இந்த மந்திரத்தை 27 முறை மனதார சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறை சொல்லும் போதும் உங்களுக்கு இருக்கும் பணத்தடைகள் நீங்கி பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதிற்குள் மானசீகமாக வேண்டிக் கொண்டு மந்திரத்தை சொல்லி முடித்த பிறகு உங்கள் கையில் இருக்கும் இந்த பவுடரை வானத்தை நோக்கி ஊதி விடுங்கள். அதன் பிறகு கை கால்களை தண்ணீர் கொண்டு சுத்தமாக கழுவி விட வேண்டும்.

இதன் பிறகு வீட்டிற்குள் சென்று நீங்கள் தயார் செய்து வைத்து மஞ்சள் திரியை அகல் விளக்கில் போட்டு தீபம் ஏற்றி நாம் மேல் சொன்ன அனைத்து தெய்வங்களையும் நினைத்துக் கொண்டு மனதார வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் அனைத்து பணத்தையும் நீங்கி பணம் வரும் திசை தெரியாது உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். இது வரை வராத பணம் எல்லாம் தேடி வரும் பணம் வருவதற்கான வாய்ப்புகளும் பெருகும்.

இதையும் படிக்கலாமே: வியாழக்கிழமை இந்த தண்ணீரில் முகம் கழுவினால், அடகு வைத்த நகையை சீக்கிரம் மீட்டு எடுக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நகையை மீட்க முடியாமல் தடுக்கும் தரித்திரத்தை விளக்க எளிய பரிகாரம்.

இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் இதை செய்து பணத்தடைகள் நீங்கி தாராளமாக பணவரவு பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -