தொழிலில் வருமானம் குவிய தண்ணீர் பரிகாரம்

cash1
- Advertisement -

நீங்கள் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் சரி, அதில் பல மடங்கு லாபம் பெருக வேண்டும் என்றால், இந்த எளிமையான சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள். தினம் தினம் உங்களுக்கு வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும். நஷ்டத்தில் போகும் தொழில் கூட ஒரு சில நாட்களில் நல்ல லாபத்தை கொடுக்கும்.

சின்னதா பெட்டி கடை, டெய்லர் கடை, காய்கறி கடை, வைத்திருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கொஞ்சம் பெரிய அளவில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் அல்லது வேறு ஏதாவது பெரிய ஷாப் வைத்திருப்பவர்களும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -

வியாபாரத்தில் வெற்றி பெற பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள் ஒரு செம்பு டம்ளர், குடிக்கின்ற நல்ல தண்ணீர், சர்க்கரை அவ்வளவு தான். முதல் நாள் இரவு தூங்க செல்வதற்கு முன்பாகவே, ஒரு செம்பு டம்ளரில் தண்ணீரை ஊற்றி அதில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு கலந்து மூடி பூஜை அறையில் வைத்து விடவும்.

நாளைக்கான என்னுடைய நாள் லாபகரமாக செல்ல வேண்டும் என்று நினைத்து இதை செய்யவும். வெள்ளை சர்க்கரையும் இதற்கு பயன்படுத்தலாம். நாட்டு சர்க்கரையும் பயன்படுத்தலாம். இரவு முழுவதும் இந்த டம்ளர் தண்ணீர் பூஜை அறையில் மூடி இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, உங்களுடைய தினசரி வேலையை முடித்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து பூஜை அறைக்கு சென்று நீங்கள் எப்படி தினமும் சாமி கும்பிடுவிங்களோ அப்படி கும்பிட்டு விட்டு இந்த தண்ணீரை எடுத்து ஒரு வாய் குடித்து விட்டு, இன்றைய பொழுது நல்லபடியாக செல்ல வேண்டும். இன்றைக்கான வியாபாரம் அமோகமாக நடக்க வேண்டும். நிறைய லாபம் வர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும்.

இந்த சர்க்கரை தண்ணீரை, இனிப்பான தண்ணீரை சிறிதளவு பருகி விட்டு செல்லும்போது உங்களுடைய அந்த நாள் இனிய நாளாகவே அமையும். வருமானமும் பெருகும் என்று சொல்லப்பட்டுள்ளது. தினமும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் எனபவர்கள் செய்யலாம். தினமும் இப்படி சர்க்கரை தண்ணீர் குடிக்க முடியாது என்பவர்கள் வாரம் ஒரு முறை வியாழக்கிழமை மட்டும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

புதன்கிழமை இரவே டம்ளரில் தண்ணீரை தயார் செய்து வைத்து விடவும். வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து கிளம்பும்போது இந்த தண்ணீரை குடிக்கவும். இந்த பரிகாரத்தை நீங்கள் ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கு செல்லும் போதும் செய்யலாம். உதாரணத்திற்கு இன்டர்வியூக்கு போறீங்க, நல்ல வேலை கிடைக்கணும். வரன் பார்க்க போறீங்க.

இதையும் படிக்கலாமே: தினமும் பணமழையில் நனைய மகாலட்சுமி தாயாரின் ஒரு வரி மந்திரம்.

மனசுக்கு பிடிச்ச பொண்ணு கிடைக்கணும். பையன் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்யும் போது நிச்சயம் ஒரு நல்ல பலன் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -