வீட்டில் துளசி செடி எந்த திசையில் மட்டும் இருக்கவே கூடாது. தீராத பண கஷ்டம் வர இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

karunthulasi
- Advertisement -

துளசிச்செடி வழிபாடு மிக மிக அற்புதமான வழிபாடு. துளசி தாயை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் நிச்சயமாக வீட்டில் செல்வ கடாட்சத்திற்க்கு எந்த குறைவும் இருக்காது. வீட்டில் இருப்பவர்கள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வார்கள். இது நிதர்சனமான உண்மை. ஆனால், ஒரு சில பேர் வீட்டில் துளசி செடி வைத்து வழிபாடு செய்தும் வீட்டில் இருக்கும் கஷ்டங்களுக்கு விமோசனம் கிடைக்காமல் இருப்பதற்கு என்ன காரணம். துளசிச்செடியை வீட்டில் வைத்திருக்கும் திசையில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம். அதில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்தால் நிச்சயமாக துளசி வழிபாட்டில் நல்ல பலன் உண்டு.

வீட்டில் எந்த திசையில் துளசி செடியை வைத்து வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். எந்த திசையில் துளசி செடி இருந்தால் வீட்டில் கஷ்டம் வரும் என்பதை பற்றிய சில ஆன்மீக ரீதியான குறிப்புகள் உங்களுக்காக.

- Advertisement -

வீட்டின் வடகிழக்கு பகுதி அல்லது தென்மேற்கு பகுதியில் துளசி செடியை வைத்து தினம் தோறும் தீபமேற்றி வழிபாடு செய்தால், சிறப்பான பலனை கொடுக்கும். ஒரு வீட்டில் வடமேற்கு மூலையிலும், தென்கிழக்கு மூலையிலும் துளசிச் செடியை வைத்து வழிபாடு செய்வது என்பது அவ்வளவு சிறப்பான பலனைக் கொடுக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டில் துளசி செடி வைத்து வழிபாடு செய்தும் பிரச்சனை உள்ளது என்றால் துளசி செடியை எந்த திசையில் வைத்து இருக்கிறீர்கள் என்று பாருங்கள். அதில் இந்த மாற்றத்தை கொண்டு வந்து பூஜை செய்து வரும் போது, நிச்சயமாக நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.

தினந்தோறும் அதிகாலை வேளையில் எழுந்து துளசிச் செடிக்கு மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, செடிக்கு முன்பாக மாக்கோலமிட்டு ஒரு மண் அகல் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி தீபம் ஏற்றி, முடிந்தால் துளசிச் செடியை மூன்று முறை வலம் வந்து, 21 கற்கண்டு நிவேதனமாக வைத்து ‘ஓம் துளசி அன்னையே போற்றி போற்றி!’ என்ற மந்திரத்தை உச்சரித்து குடும்ப கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டால் எப்பேர்பட்ட கஷ்டமும் ஒரு சில நாட்களில் ஒரு முடிவுக்கு வந்து விடும்.

- Advertisement -

ஒரு சில நாட்களில் இந்த வழிபாட்டை செய்து விட்டு பலனை எதிர்பார்க்க கூடாது. தொடர்ந்து துளசி தாயை மனதார வீட்டில் வழிபாடு செய்து வந்தால் நிச்சயமாக உங்கள் வீடு சுபிட்சம் அடையும். குறிப்பாக வீட்டுப் பெண்கள் இந்த பூஜையை செய்ய வேண்டும்.

உங்களுக்கு ஏதாவது வேண்டுதல் நடக்க வேண்டுமென்றால் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, துளசி தாயே மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன வரம் வேண்டுமோ, ஒரே ஒரு வரத்தை மட்டும் துளசி தாயிடம் கேளுங்கள்.

கையில் 5 ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டே இந்த பிரார்த்தனையை செய்துவிட்டு, பிரார்த்தனை செய்து முடித்தவுடன் அந்த 5 ரூபாய் நாணயத்தை துளசிச் செடியின் மண்ணில் புதைத்து வைத்தால் வேண்டுதல் கூடிய சீக்கிரத்தில் பலிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -