தினம் தினம் உங்கள் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் ஊற்றெடுத்து பெருகிக்கொண்டே செல்லும். இந்த திலகத்தை நெற்றியில் இட்டு வந்தால்.

thilagam
- Advertisement -

நாம் தொட்டதெல்லாம் வெற்றியடைய வேண்டும். நம்முடைய வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் பெருகிக்கொண்டே செல்ல வேண்டும். வருமானம் பல மடங்கு உயர வேண்டும். கடன் என்ற வார்த்தைக்கு வீட்டில் இடம் இருக்கக் கூடாது. சந்தோஷமும், சகல சௌபாக்கியமும் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், இந்த ஒரு சின்ன பரிகாரம் போதும். தினம் தினம் இந்த பரிகாரத்தை செய்து வருபவர்களுக்கு அந்த அம்பாளின் அருள் ஆசி நிறைவாக கிடைக்கும். மகாலட்சுமி மனநிறைவோடு உங்களையும், உங்கள் வீட்டையும் வந்து சேர்ந்து விடுவாள்.

துளசி செடி. இந்த செடிக்கு ஈடு இணை இந்த உலகத்தில் வேறு எதுவுமே கிடையாது. துளசிச் செடியில் எல்லாவிதமான புன்னிய தீர்த்தங்களும் ஐக்கியமாகி இருப்பதாக நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் சிறிய தொட்டியில் துளசி செடியை வைத்து வளர்க்கலாம். துளசிச்செடி இருக்கும் ஒவ்வொரு வீடும் கோவில் தான். தினம் தினம் காலை எழுந்தவுடன் அந்த துளசி செடிக்கு ஒரு சொம்பு தண்ணீர் விடுங்கள். அந்த சொம்பு தண்ணீரோடு ஒரு ஸ்பூன் அளவு பாலை கலந்து விடும் போது நமக்கு லட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்கும்.

- Advertisement -

தண்ணீர் ஊற்றிவிட்டு துளசி தாயை மனமார பிரார்த்தனை செய்து கொண்டு, அந்த துளசி செடியை நட்டு வைத்துள்ள மண்ணை சிறிதளவு எடுத்து உங்களுடைய நெற்றியில் வைத்துக் கொண்டு, தினசரி வேலையை தொடங்குங்கள். லேசாக கண்ணுக்குத் தெரியாத அளவு அந்த மண்ணை நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும். அப்படி இல்லை என்றால் லேசாக உச்சம் தலையில் எடுத்து அந்த திலகத்தை இட்டுக் கொண்டு, உங்களுடைய நாளை தொடங்கும் போது அந்த நாள் மிக மிக சிறப்பான நாளாக அமையும். தினம் தினம் இந்த ஒரு பரிகாரம் உங்களுக்கு வெற்றியை மட்டுமே கொண்டு வந்து சேர்க்கும். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லோருமே இந்த வழிபாட்டை செய்யலாம்.

அடுத்ததாக கடன் பிரச்சினை தீர பின் சொல்லக்கூடிய இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இதற்கு சிவன் கோவிலில் இருக்கக்கூடிய வில்வ மரம் நமக்கு தேவை. உங்கள் வீட்டின் அருகில் எந்த சிவன் கோவிலில் வில்வமரம் இருந்தாலும் அந்த இடத்தை நீங்கள் பரிகாரம் செய்வதற்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

மரத்திற்கு கொஞ்சமாக தண்ணீர் விடுங்கள். பிறகு மரத்திற்கு அருகில் இரண்டு சிறிய மண் அகல்விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு, சிறிது நேரம் வில்வ மரத்திற்கு முன்பாக அமர்ந்து மனதார மகாலட்சுமி தாயாரை நினைத்து கடன் தீர வேண்டும் என்ற பிரார்த்தனையை அந்த வில்வமரத்திடம் வையுங்கள். இந்த பரிகாரத்தை செய்து முடித்த ஒரு சில நாட்களில், நம்பவே மாட்டீங்க அதிசயம் நடந்தது போல ஒரு சில நாட்களில் உங்களுடைய பண பிரச்சனை அனைத்துமே தீர்ந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: இனி மீண்டும் சேரவே முடியாது என்று நினைத்த தம்பதியினர் கூட, இந்த பொருளை சேர்த்து வைத்தால் மீண்டும் சேர்ந்து விடுவார்கள்.

எல்லா கோவில்களிலும் தல விருட்சமான வில்வ மரத்தை தொடுவதற்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள். ஆனால் உங்களுக்கு அனுமதி கிடைத்தால், நீங்கள் வில்வ மரத்தை தொடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால், அந்த வில்வமரத்தை உங்களுடைய வலது கையால் ஒரு முறை தொட்டு பண பிரச்சனை தீர வேண்டும் என்ற கோரிக்கையை அந்த வில்வ மரத்திடம் வையுங்கள். இந்த பரிகாரம் வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஹோரை வரும்போது தான் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை காலை 6:00 மணியில் இருந்து 7:00 சுக்கிர ஹோரை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று வாரம் தொடர்ந்து நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு ஒரு சில நாட்களில் நிறைய நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -