தாயத்தில் இந்த வேரை போட்டு கழுத்தில் மாட்டிக் கொண்டால் உங்களை ஜெயிக்க யாராலும் முடியாது. கெட்டது உங்கள் பக்கத்தில் வர கூட பயப்படும்.

thayathu1
- Advertisement -

வாழ்க்கையின் பாதை எவ்வளவு கரடு முரடாக இருந்தாலும் சரி, நமக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் சரி, கிடைக்கவில்லை என்றாலும் சரி, பிரச்சனை வந்தாலும் சரி, பிரச்சனை வரவில்லை என்றாலும் சரி அதை எல்லாம் யாரும் பார்க்கப் போவதில்லை. நாம் ஜெயிக்கின்றோமா இல்லையா என்பதை மட்டும் தான் இந்த உலகம் பார்க்கின்றது. ஜெயிப்பதற்கு பின்னால் நாம் படக்கூடிய கஷ்டம் யார் கண்ணுக்குமே தெரிவது. ஜெயித்தவனின் வெற்றி மட்டும் தான் இந்த உலகத்திற்கு தெரிய வரும். இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்பது எல்லாம் கூட இன்றைக்கு இல்லாமல் போய்விட்டது. இவன் வாழ்க்கையில் ஜெயிப்பவன். இவன் வாழ்க்கையில் தோற்றவன். இவன் ஏழையாக இருப்பவன். இவன் பணக்காரனாக இருப்பவன். இவைகளை மட்டும் தான் இந்த உலகம் பார்க்கிறது.

பின் தங்கிய நிலையில் இருக்கும் நாம் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வர வேண்டும் என்று நினைத்தால் கட்டினமாக உழைக்க வேண்டும். பகல் நேரத்தில் சோர்வு என்பது இருக்கக் கூடாது. பகல் தூக்கத்தை தூக்கி எறிந்து விட்டு, உங்களுடைய வேலையை சரியாக செய்து வந்தால் நிச்சயமாக உங்களுடைய முயற்சிக்கான பலன் முழுமையாக கிடைக்கும்.

- Advertisement -

பலன் என்றால் பணத்தை சேர்த்து தான் சொல்லுகின்றோம். கடினமாக உழைக்கும் போது அதற்கான கூலி நமக்கு நிச்சயம் கிடைத்துவிடும். ஆகையால் சோம்பேறித்தனத்தை தள்ளிவிட்டு, இந்த வேலையை பிறகு செய்யலாம் என்று நினைக்காமல், உடனடியாக அப்பவே செஞ்சு முடிச்சிட்டீங்கன்னா நீங்க ஜெயிச்சீங்க. எப்போது, இப்போது செய்ய வேண்டிய வேலையை பிறகு செய்யலாம் என்று தள்ளிப் போடுகிறீர்களோ அப்போதை நீங்கள் வாழ்க்கையில் தோற்று விட்டீர்கள். சரி சுறுசுறுப்பான வாழ்க்கையை பெற வாழ்க்கையில் வரக்கூடிய தடைகள் எல்லாம் தடங்கல் இல்லாமல் காணாமல் போக, தாயத்தில் எந்த வேரை போட்டுக் கொள்ளலாம். சிறிய தாந்த்ரீக பரிகாரம் உங்களுக்காக.

துளசி இலையின் மகிமையை பற்றி பெரும்பாலும் நாம் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அந்த துளசி செடியின் வேர் தான் நமக்குத் தேவை. பூமியில் இருக்கக்கூடிய துளசி செடியின் அடியில் இருக்கும் சின்ன வேரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆணிவேரை எடுக்க வேண்டாம். ஆணிவேருக்கு பக்கவாட்டில் கிளை வேர்கள் நிறைய இருக்கும் அல்லவா அதிலிருந்து ஒரு சிறிய துண்டு உடைத்து எடுத்துக் கொண்டால் கூட போதும். விரல்களாலேயே உடைத்தால் அந்த வேர் சுலபமாக கைக்கு வந்துவிடும். நகத்தால் கிள்ளி வேரை எடுக்காதீங்க.

- Advertisement -

இந்த வேரை வீட்டுக்கு கொண்டு வந்து மஞ்சள் தண்ணீரால் சுத்தமாக கழுவி, வேரை நிழலிலேயே ஈரம் போக நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள். இந்த வேரின் நேர்மறை ஆற்றல் பல மடங்கு பெருக இதோடு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து ஒரு சிறிய வெள்ளி தாயத்தில் போட்டு தாயத்தை மூடி பூஜையறையில் வைத்து குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு தாயத்தை ஒரு சிவப்பு நிற நூலில் கோர்த்து உங்களுடைய கை, கழுத்து இப்படி இந்த இரண்டு இடங்களில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் கட்டிக் கொள்ளலாம். இந்த தாயத்தை இடுப்பில் கட்ட வேண்டாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

கூடுமானவரை முடிந்தால் இந்த தாயத்தை ஒரு செயினில் கோர்த்து கூட கழுத்தில் மாட்டிக் கொள்ளலாம் தவறு கிடையாது. இந்த தாயத்து உங்களுடன் இருந்தால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாகும்.  48 நாட்கள் இந்த தாயத்தை அணிந்து பாருங்கள் வித்தியாசத்தை உணருவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -