துன்பங்கள் தீர பௌர்ணமி பரிகாரம்

coins pray
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் அனுபவிக்கும், அனுபவித்த துன்பங்களை கேட்டால் அத்தனை துயரம் மிக்கதாக இருக்கும். இதில் வசதி படைத்தவர், வசதி இல்லாதவர் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் நிச்சயம் மனிதனாக பிறந்தவர் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் துயரங்களை அனுபவித்து இருப்பார்கள். ஏன் நாமும் கூட இதில் ஒருவர் தானே.

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் ஒரு சிலர் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்து கொண்டே இருப்பார்கள். அதற்கு முடிவு என்பதே கிடையாது என்பது போல இருக்கும் அவர்களுடைய நிலைமை. இதற்கு அவர்களுடைய முன் ஜென்ம பாவங்களும் கர்ம வினைகளும் காரணம் என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

அது தொடர்ந்து கொண்டே இருந்தால் எப்போது தான் வாழ்வது என்ற கேள்வி எழுகிறது அல்லவா, அதற்கான ஒரு எளிய பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

துன்பங்கள் துயரங்கள் தீர பௌர்ணமி பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்ய துவங்கும் நாள் பௌர்ணமியாகத் தான் இருக்க வேண்டும். இதை தவிர மற்ற நாட்களில் இந்த பரிகாரத்தை துவங்க கூடாது. இந்த பரிகாரத்திற்கு நீங்கள் பெரிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பௌர்ணமி நாளன்று இரவு படுக்கும் முன்பு உங்கள் தலையணை அடியில் இந்த ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். மறுநாள் காலையில் உங்கள் வீட்டில் உள்ள வேறு ஒருவரிடம் சொல்லி அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு இடத்தில் பத்திரமாக வைத்து விடுங்கள். இதே போல தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும்.

48 நாட்கள் சேர்ந்த பிறகு 49 வது நாள் இந்த நாணயத்தை கொண்டு யாரேனும் ஒருவருக்கு உணவு தானம் செய்ய வேண்டும். அதிகபட்சமாக எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் தானம் செய்யலாம். நீங்கள் தானத்திற்கு ஆகும் செலவுடன் இந்த 48 ரூபாய் சேர்த்துக் கொள்ளுங்கள். வெறும் 48 ரூபாய்க்கு மட்டும் தான் வாங்க வேண்டும் என்பது கிடையாது அது உங்கள் வசதியினை பொறுத்து.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக மாசி மகம் குங்கும பூ பரிகாரம்

இந்த பரிகாரத்தை வாழ்க்கையில் ஒரே ஒருமுறை செய்து விட்டால் போதும். இது வரை நீங்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் துயரங்கள் மனவேதனை அனைத்தும் தீர்ந்து நிம்மதியாக வாழக்கூடிய யோகத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அற்புதமான இந்த தாந்திரீக பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -