கஷ்டங்கள் தீர பிரதோஷ மந்திரம்

sivan manthiram
- Advertisement -

பிரதோஷ வழிபாடு சிவனுக்கே உரிய விசேஷமான வழிபாடு. இந்த பிரதோஷ மானது திரியோதசி திதியில் வரும். இது சிவபெருமானுக்கே உகந்த திதியாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் சிவபெருமானை நினைத்து வழிபடுபவர் வாழ்க்கையில் கேட்டது கிடைக்கும். அத்தகைய பிரதோஷ நாளில் நம்முடைய துன்பங்கள் தீர எப்படி வீட்டிலிருந்தே வழிபட வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிரச்சனைகள் தீர பிரதோஷ வழிபாடு

இந்த முறையில் பிரதோஷ வழிபாடு செய்ய நினைப்பவர்கள் முடிந்த வரையில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் சிறந்த பலனை பெறலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் எளிமையான உணவு உட்கொண்டு விரதம் இருங்கள். அசைவத்தை கட்டாயமாக தவிர்த்து விட வேண்டும்.

- Advertisement -

நாளைய தினம் செவ்வாய்க் கிழமையில் வளர்பிறை பிரதோஷம் வந்திருக்கிறது. ஒவ்வொரு நாளில் வரக்கூடிய பிரதோஷத்திற்கும் தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமையில் வந்திருக்கக் கூடிய இந்த பிரதோஷம் நமக்கு பல நல்ல பலன்களையும் நம்முடைய குடும்பப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

இந்த பிரதோஷ நாளில் நீங்கள் காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து முடித்து முதலில் பூஜை அறையில் ஒரு தீபம் என்று வைத்து விடுங்கள். அதன் பிறகு அன்றைய நாள் முழுவதும் சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு அவருடைய நாமத்தை ஜெபித்து கொண்டே இருங்கள். மாலை பிரதோஷ வேளையில் ஆலயம் சென்று வழிபாடு செய்பவர்கள் ஆலயம் செல்லுங்கள்.

- Advertisement -

ஆலயம் செல்லாமல் இந்த வழிபாட்டை வீட்டில் செய்யலாம். அதற்கு வீட்டில் பூஜை அறையில் முதலில் தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் சிவலிங்கம், சாலிகிராம கல் அல்லது சிவபெருமானுக்கு உகந்த பொருட்கள் ஏதேனும் நீங்கள் பூஜைக்காக வைத்திருந்தால் அவற்றிற்கு தேனால் அபிஷேகம் செய்வது சிறந்த பலனை தரும்.

ஏதும் இல்லாதவர்கள் தீபம் மட்டும் ஏற்றி விடுங்கள். இந்த தீபம் கிழக்கு பார்த்து எரிய வேண்டும். நீங்கள் வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். சிவபெருமானுக்கு ஏதேனும் எளிய நெய்வேத்தியத்தை செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கீழ் வரும் இந்த சிவ மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

சிவாய நம ஓம் நமசிவாய
சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
ஹர ஹர ஹர ஹர நமசிவாய – சிவாய நம
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய நமசிவாய – சிவாய நம
ஓம் சிவாய சங்கரா

என்ற இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை ஒரு முறை நீங்கள் வாய் விட்டு சத்தமாக படிக்க வேண்டும். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

இந்த பூஜையில் அமர்வது முதல் முடிவு செய்யும் வரை உங்கள் மனதில் உள்ள இந்த தீராத பிரச்சனையை சிவபெருமான் இடத்தில் ஒப்படைத்து விடுங்கள். அவர் அதற்கான வழியை உங்களுக்கு காட்டுவார். இதே மந்திர வழிபாட்டை ஆலயத்திலும் செய்யலாம் தவறில்லை.

இதையும் படிக்கலாமே: செவ்வாய் தோஷம் நிவர்த்தியாக சங்கு பூஜை

எளிமையான இந்த பிரதோஷ வழிபாடு நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடிய அற்புதமான வழிபாடாக சொல்லப்படுகிறது. இந்த வழிபாடு நம்முடைய குடும்ப கஷ்டங்கள் கடன் தொல்லை, பண பிரச்சனை என அனைத்தையும் தீர்க்கும். நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை நாளை செய்து சிவபெருமானின் பரிபூரண அருளை முழுமையாக பெறுங்கள்.

- Advertisement -