உங்க வீட்டில் இதெல்லாம் இருந்தால் கூட நிம்மதி குறையும் தெரியுமா? துன்பம் தீர இவற்றை உடனே அப்புறப்படுத்துங்கள்!

vilakku-erumbu-ant
- Advertisement -

எந்த ஒரு உயிரையும் கொல்வதற்கு இன்னொருவருக்கு அனுமதி இல்லை என்பது சாஸ்திர உண்மையாகும். படைத்தவன் எவனோ அவனுக்கு அதை அழிக்கவும் தெரியும். அதற்குள் ஒரு உயிரை கொல்லும் செயலை, நாம் செய்யும் பொழுது நமக்கு தோஷம் உண்டாகிறது. இந்த நியதி சிறு எறும்பில் இருந்து ஆரம்பித்து, மனித உயிர் வரை அத்தனைக்கும் பொருந்தும் என்பது தான் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயமாகும். அந்த வகையில் நம் வீட்டில் எந்த விஷயங்கள் நிம்மதி குறைவை ஏற்படுத்துகிறது? துன்பம் தீர நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ant-erumbu

வீட்டில் எறும்பு தொல்லை இருக்கிறது என்று எறும்பு சாக்பீஸை போட்டு விடுகிறீர்கள். நாம் செய்யும் இந்த சிறிய சாதாரண செயல் நமக்கு நியாயமானதாக இருந்தாலும், அதை சாப்பிட வரும் எறும்புகளுக்கு நீங்கள் துரோகம் செய்வதாக தான் அர்த்தமாகிறது. இது போல் நம் வீட்டில் சிறு சிறு பூச்சிகள், எறும்புகள், கரப்பான்கள் என்று ஏதோ ஒரு விதத்தில் நம்மால் பாதிக்கப்படுகின்றன.

- Advertisement -

பூச்சி, புழுக்கள் மட்டுமல்லாமல் பல்லி, எலி போன்ற சிறு உயிரினங்களும் நம்மால் பாதிக்கப்படும் பொழுது இயல்பாக நமக்கு தோஷம் உண்டாகிறது. இந்த தோஷம் சில சமயங்களில் குடும்பத்தில் இருக்கும் நிம்மதியை கெடுத்து விடுகிறது. அமைதியாக போய்க் கொண்டிருக்கும் இல்லத்தில் திடீரென பிரச்சனைகளை துவங்குவதில் இது போன்ற அறியாது நாம் செய்யும் செயல்களால் கூட உண்டாகிறது.

lizard

சிலர் வீட்டில் பல்லிகள் வந்தால் அதனை விரட்டி அடிப்பார்களே தவிர, அதனை கொல்ல மாட்டார்கள் ஆனால் ஒரு சிலரோ ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கவும் தயங்க மாட்டார்கள். இப்படி இருவேறு கருத்து உள்ளவர்களுக்கு மத்தியில் எது சரி? எது தவறு? என்று விவாதிப்பதை விட நம்மால் ஒரு உயிர் பலியாகிறது என்பது இங்கு தெளிவாக புலப்படுகிறது எனவே இறந்து போன பல்லி, கரப்பான் பூச்சிகள், எறும்புகள், எலிகள் என்று எதுவாக இருந்தாலும் அது நாட்பட்டதாக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு தோஷத்தால் துன்பங்கள் உண்டாகும்.

- Advertisement -

தெரிந்தும், தெரியாமலும் எவ்வளவோ உயிரை நாம் இது போல் அழித்திருப்போம்! தெரியாமல் நாம் செய்வதற்கான வாய்ப்புகளும் ஒரு வீட்டில் அதிகம் இருக்கும். இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருந்தாலே போதும். அடிக்கடி சிலந்தி ஒட்டடைகளை நீக்கி சுவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற பொருட்களை சேர்த்து பூச்சிகள் வாழ நாமே வழி வகை செய்து விடக்கூடாது. எந்த அளவிற்கு மூலை முடுக்குகளில் கூட நீங்கள் சுத்தமாக பராமரித்து வருகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும் அதிகமாக காணப்படும்.

silanthivalai

இது போல இறந்த உயிரினங்கள், பூச்சிகள் போன்றவை நாட்ப்பட்டதாக அதாவது வாரக்கணக்கில், மாதக்கணக்கில் உங்கள் வீட்டில் இருந்தால் அப்போது அங்கு எதிர்மறை ஆற்றல்கள் பெருகுகின்றன. இதனால் உங்களுக்கு வரக் கூடிய நன்மைகள் தடைபடுகின்றன. எனவே துன்பங்களும் அதிகரிக்க செய்கின்றன. வீட்டில் அவ்வப்போது இது போல தேவையற்ற உயிரினங்கள் செத்துக் கிடந்தால் அதனை அகற்றி விடுங்கள். எப்பொழுதும் தீப, தூப வாசமானது வீடு முழுக்க பரவ விடுங்கள். இது போல் செய்து வரும் பொழுது எத்தகைய தீராத துன்பமும் எளிதில் தீரும் என்பது ஆன்மிக நம்பிக்கை ஆகும்.

- Advertisement -