தீராத பிரச்சனைகள் தீர எளிய வழிபாடு

bhairavar durgai
- Advertisement -

ஒவ்வொரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். ஒரு சிலருக்கு கடன் பிரச்சினை, சிலருக்கு குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை, கணவன் மனைவிக்கு ஒற்றுமை இல்லாமல் இருப்பது, வியாபாரத்தில் நஷ்டம், உடன் இருப்பவர்களால் துரோகம், கொடுத்த பணம் திரும்ப வராதாது என இப்படி அடுக்கிக் கொண்டே செல்லும் அளவிற்கு பிரச்சனைகள் உள்ளது.

இதைத் தவிர்த்து வீட்டில் ஏற்பட கூடிய கண் திருஷ்டி தீய சக்திகளின் தாக்கம், பய உணர்வு இதையெல்லாம் கூட ஒரு வகையில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கும். இது போல நாம் தினம் தினம் சந்திக்கக் கூடிய பல பிரச்சனைகளிலிருந்து எளிதாக வெளிவர சில எளிமையான பரிகாரங்களை ஆன்மிகம் நமக்கு சொல்லித் தந்திருக்கிறது. அதைப்பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தீராத பிரச்சனைகள் தீர பரிகாரம்

முதலில் பிறருடைய தீய பார்வையாலும் கண்திருஷ்டியாலும் வரக் கூடிய பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். இதற்கு ஒரு சோம்பில் சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொண்டு கொள்ளுங்கள்.அதன் மேல் உங்கள் வலது கையை வைத்து ஓம் சுதர்சனாய நமக என்ற மந்திரத்தை மூன்று முறை சொன்ன பிறகு அந்த தண்ணீரில் கொஞ்சம் பன்னீர் கலந்து வீடு முழுவதும் தெளித்து விடுங்கள்.

இதே போல சுத்தமான தண்ணீரில் கோமியம், மஞ்சள், சிவன் கோவிலில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த விபூதி போன்றவற்றை தண்ணீரில் கலந்து தெளிப்பது நல்ல பலனை தரும். இவற்றுடன் வீட்டில் நிலை வாசலில் மாவிலை தோரணத்தை கட்டி அதை வாரம் ஒரு முறை மாற்றி வருவதும், வாசலில் தண்ணீர் வைத்து இரண்டு தர்ப்பையை அதில் போட்டு வருவதும் மிக மிக நல்ல பலனை கொடுக்கும். இதன் கண் திருஷ்டி தீய சக்திகள் நம்மை நெருங்காது என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்த பிரச்சனை காரியத்தடை. நாம் என்ன நினைத்தாலும் நடக்காமல் தடங்கலாகி கொண்டே இருக்கும். அதை சரி செய்ய வீட்டில் இருந்து கிளம்பும் முன்பாகம் கொஞ்சம் பச்சரிசியில் மஞ்சளை பன்னீர் விட்டு கலந்து அச்சதை தயார் செய்து அதை ஒரு பேப்பரில் மடித்து ஓம் பைரவாய நமக என்ற மந்திரத்தை பதினாறு முறை சொல்லி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் வெளியில் சென்று வே லை முடித்து வீடு திரும்பும் போது செடியில் போட்டலாம் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விட்டு வரலாம். இதன் மூலம் நீங்கள் நினைத்த காரியம், செல்லும் வேலை அனைத்தும் சுமுகமாக முடியும்.

இத்துடன் ஒரு சிலருக்கு எப்பொழுதும் பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும் எதற்கெடுத்தாலும் பயம் இருக்கும். அதற்கான எளிய வழிபாட்டையும் பார்க்கலாம். இதற்கு வெள்ளி, செவ்வாய்யில் ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் மாலை கட்டி போட்டு வந்தால் இது போன்ற பய உணர்வுகள் நீங்கி தைரியம் வரும். உங்களுடைய நேரம் சரியில்லாத காரணத்தினால் ஏற்படக்கூடிய இன்னல்களையும் இந்த வழிபாடு சரி செய்து கொடுக்கும்.

- Advertisement -

ஒரு சிலர் எப்பொழுதும் வாழ்க்கையில் அவமானங்களை சந்தித்துக் கொண்டு இருப்பார்கள். பிறரால் எப்போதும் வேதனைப்படுத்தப்பட்டு கொண்டே இருப்பார்கள். மனதளவில் இது போல வேதனை அடைபவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் போதும் உங்களுடைய நியாயமான மனவேதனைக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர தாந்திரீக பரிகாரம்

நம்முடைய ஒவ்வொரு வேதனைக்கும் இறைவனை சரணடைவது எப்போதும் நல்ல ஒரு வழியாகும். அந்த இறைவனை சரணடையும் போது இது போல வேண்டி சரணடைந்தால் நிச்சயம் நம்முடைய பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதியாக வாழ அவர்கள் வழி செய்வார்கள். இந்த பதிவில் உள்ள ஆன்மீகத் தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் பின்

- Advertisement -