கடன் தீர தாந்திரீக பரிகாரம்

murugan kalkandu
- Advertisement -

கடன் சுமையை பற்றி நாம் எவ்வளவோ கேள்விப்பட்டிருப்போம். நாமும் அனுபவபட்டுக் கொண்டு இருப்போம். இன்று எந்த ஒரு மனிதனும் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஏதோ ஒரு வகையில் எல்லோருமே கடனாளிகளாக தான் இருக்கிறார்கள். அது பணமாக வாங்கி இருந்தாலும் சரி, வீடு வாசல் பொருள் என எதை வாங்கி இருந்தாலும் கடன் தானே.

ஒரு சில நேரங்களில் வாங்கிய கடனை திரும்ப அடைக்கவே முடியாது. நாம் வீட்டில் மற்ற செலவுகள், பொருட்கள் வாங்க எல்லாம் பணத்தை தயார் செய்து விடுவோம். ஆனால் அந்த கடனை அடைக்க மட்டும் நம்மால் பணத்தை தயார் பண்ணவே முடியாது. அப்படியான கடனை கூட அடைக்க கூடிய எளிய தாந்த்ரீக பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

கடன் தீர செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டியது

பொதுவாகவே கடன் தொடர்பான அனைத்திற்கும் தீர்வு கிடைக்க வேண்டுமெனில் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையில் செய்யும் பரிகாரம் நல்ல பலனை தரும். அந்த வகையில் இந்த பரிகாரத்தையும் நாம் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் தான் செய்ய வேண்டும். இதை காலை 6 லிருந்து 7 மணி வரையிலும், மதியம் 1லிருந்து 2 மணி வரையும், இரவு 8 லிருந்து 9 வரையிலான இந்த நேரத்தை நீங்கள் கடன் அடைப்பதற்கான நேரமாக பயன்படுத்துங்கள் விரைவில் கடன் அடையும்.

இப்போது பரிகாரத்தை பார்க்கலாம். இதற்கு வெள்ளை நிற தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை நிற மையினால் எழுதக் கூடிய பேனாவை எடுத்து நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்கள் எவ்வளவு வாங்கினீர்கள் அதில் எவ்வளவு பணத்தை இப்போது திருப்பித் தரப் போகிறீர்கள் என்பதை எல்லாம் தெளிவாக எழுதுங்கள். நீங்கள் லட்ச ரூபாய் கடனாக வைத்திருந்தாலும் இந்த கடிதத்தில் பத்து ரூபாய்யை அந்த கடனின் ஒரு பங்காக திருப்பி தரப் போகிறேன் என்று எழுதி அந்த பத்து ரூபாயை இந்த பேப்பரில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை பூஜை அறையில் முருகப்பெருமானை நினைத்து அவரின் திருவுருவ படத்திற்கு முன்பாக வைத்து ஏற்றுங்கள். இந்த தீபம் ஏற்ற அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும், ஆறு கற்கண்டும் தூள் செய்து அந்த பவுடரையும் எண்ணெயில் போட்டு பிறகு விளக்கு ஏற்றுங்கள். நீங்கள் எழுதி வைத்திருக்கும் காகிதத்தை இந்த தீபத்தின் முன் வைத்து இந்த கடன் விரைவில் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இப்படி வேண்டிய பிறகு இந்த பேப்பரையும், பணத்தையும் ஒன்றாக மடித்து பூஜையறையில் வைத்து விடுங்கள். ஒரு வேளை முடிந்தால் பரிகாரம் செய்யும் அன்றே இந்த பணத்தை திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். இல்லை எனில் அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் இந்த பணத்தை நீங்கள் கொடுக்கப் போகும் பணத்துடன் சேர்த்து கொடுங்கள். வங்கி கடனாக இருப்பின் இந்த நேரத்தில் ஒரு முறையாவது வங்கியில் பணத்தை செலுத்த பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் மகாலட்சுமி தீபம் ஏற்றுவது எப்படி

இந்த பரிகாரமானது உங்களுடைய எப்பேர்பட்ட கடனையும் விரைவில் அடைக்க கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -