இந்த ஒரு பரிகாரம் மட்டும் செய்தால் போதும் துன்பத்தில் இருக்கும் உங்கள் வாழ்க்கை இன்பமாக மாறிவிடும்

valai
- Advertisement -

அனைவருக்கும் தங்கள் வாழ்க்கை இன்பமாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் இருக்க வேண்டும் என்பது தான் அவரது ஆசையாக இருக்கும். ஆனால் எந்த அளவிற்கு இதுபோன்ற ஆசைகள் நிறைவேறுகிறது என்று பார்த்தோம் என்றால் நூற்றுக்கு 20 சதவீதம் மட்டுமே ஆசைகள் நினைவாகிறது. அதிலும் தலைமுறை தலைமுறையாக சொத்துகள் வைத்திருப்பவர்கள் அல்லது தங்கள் தந்தை சேர்த்துவைத்த பணத்தை செலவு செய்பவர்கள் இவர்களின் கனவுகள் மட்டுமே நினைவாகிறது. ஆனால் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இது போன்ற ஆசைகள் நிறைவேற வேண்டும். இதற்காக வாழைத்தண்டு தீபம் ஏற்றி பரிகாரம் செய்வதன் மூலம் வாழ்க்கையை மாற்றும் அதிசயத்தை உங்களால் உணரமுடியும். வாருங்கள் இந்த தீபம் ஏற்றும் சரியான முறையைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவோம்.

cash

ஒரு சிலர் தங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து கிடைக்கும் வேலைகள் அனைத்தையும் செய்து கொண்டிருப்பார்கள். தனக்குக் கிடைக்கும் வேலையில் முழு மனதுடன் உண்மையாக உழைத்து அதனை செய்து முடிப்பார்கள். குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் உழைப்பை மட்டுமே மூச்சாகக் கொண்டு இருப்பார்கள். என்றாவது ஒருநாள் தனது குடும்பத்தையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே இவர்களின் ஒரே சிந்தனையாக இருக்கும்.

- Advertisement -

நம்மை சுற்றி எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் நிலவிக் கொண்டிருந்தால் அவை நம்முடைய முயற்சிகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி விடுகின்றன. எனவே இவ்வாறான எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடவும், நமக்கு உண்டாகிற தடைகளை தகர்த்து எறியவும் இந்த வாழைத்தண்டு தீபத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏற்றி வழிபட வேண்டும்.

valai

அதற்காக முதலில் உள்ளங்கை அளவு நீளமுள்ள வாழைத்தண்டை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கொண்டு, அதனுடன் சிறிதளவு குங்குமம் சேர்த்து கரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கொஞ்சம் வாசனை மலர்களும், ஒரு பெரிய அளவிலான பஞ்சுத் திரியும், தீபம் ஏற்றுவதற்கு நெய்யும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் பூஜை அறையின் முன் அமர்ந்து கொண்டு, பஞ்சு திரியை நெய்யில் முழுவதுமாக நனைத்துக்கொண்டு, வாழைத் தண்டின் மீது நேராக போட்டுவிட வேண்டும். பிறகு திரியை ஏற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு மலராக கையில் எடுத்துக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அதாவது “ஓம் தும் துர்கா தேவியே நமக” என்று சொல்லி ஒவ்வொரு மலராக எடுத்து குங்கும தண்ணீரில் போட்டுக் கொண்டே வர வேண்டும்.

panjakavya-vilakku0

இவ்வாறு திரி முழுவதுமாக எரியும் வரை அர்ச்சனை செய்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு திரி முழுவதுமாக எரிந்து முடிந்த பின்னர் இந்த வாழை தண்டை குங்கும தண்ணீரில் வைத்து, இவற்றை ஓடும் நீர் அல்லது வீட்டின் முச்சந்தியில் கொட்டி விட்டு வர வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நல்ல மாற்றங்கள் உண்டாகும். தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் நீங்கள் செய்யும் காரியம் அனைத்திலும் வெற்றிகள் மட்டுமே கிடைக்கும்.

- Advertisement -