உங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நொடிப்பொழுதில் மறைந்துபோக ராமநவமி அன்று நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்

ramar
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகள் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு பலரின் வாழ்க்கை சூழலும் சிறப்புடன் அமைவதில்லை. சிறிய பிரச்சனை முதல் பெரிய பிரச்சனை பிரச்சனை வரை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டிருக்கிறது. அவ்வாறு எப்பொழுதும் துன்பத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் மனிதன் அதிலிருந்து விடுபட எத்தனை பரிகாரங்கள், எத்தனை வழிமுறைகள் எத்தனை கோவில் பூஜைகள் என செய்து கொண்டிருக்கிறார்கள். நமது வாழ்வில் விடிவு கிடைத்து விடுமா? நமக்கான நன்மை நிகழ்ந்துவிடுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரின் உள்ளத்திலும் இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கும் உங்கள் துன்பங்கள் அனைத்தும் தீர வருகின்ற ராமநவமியன்று இந்த சிறப்பு பூஜை மற்றும் மந்திரத்தை சொல்ல உங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் விரைவில் தீர்ந்து விடும். நீங்கள் எதிர்பார்த்த சந்தோஷமான வாழ்க்கை கிடைத்துவிடும். வாருங்கள் ராமநவமியன்று செய்ய வேண்டிய பூஜையும், சொல்லவேண்டிய மந்திரத்தையும் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஏப்ரல் மாதம் 10.4.2002 அன்று ராமர் பிறந்த தினமாகும். இராமபிரான் நவமி நட்சத்திரத்தில் பிறந்ததால் இன்றைய தினம் ராம நவமி என்று சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தை சிறப்பு வழிபாடுகளுடன் ராமரை நல்ல முறையில் வணங்கி வந்தால் நமது வாழ்க்கையில் எண்ணற்ற இன்பங்கள் கிடைத்துவிடும்.

- Advertisement -

ராமர் தனது வாழ்நாளில் நல்ல மகனாக, நல்ல கணவனாக, நல்ல சகோதரனாக, நல்ல அரசனாக என பல அவதாரங்களை எடுத்திருப்பார். அவை ஒவ்வொன்றிலும் தனது சிறந்த பண்பை நிலை நிறுத்தி இருப்பார். ஒவ்வொரு மனிதனும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்குபவர் ராமர்.

அதாவது நவமி மற்றும் அஷ்டமி நட்சத்திரங்கள் விஷ்ணு பகவானிடம் சென்று, மக்கள் மற்ற நட்சத்திரங்களை அனைவரும் போற்றி வணங்குகின்றனர். எங்களை மட்டும் அசுப நட்சத்திரமாக பார்க்கின்றனர் என்று முறையிட்டனர். அவர்களின் சோகத்தை தீர்க்க விஷ்ணு பகவான் உங்கள் நட்சத்திரத்தையும் மக்கள் போற்றி வணங்கும் நாள் வரும் என்று கூறி அனுப்பினார்.

- Advertisement -

எனவே தான் ராமபிரான் நவமி நட்சத்திரம் அன்று ஜனனம் செய்தார். எனவே இன்றைய தினம் சிறப்பு பூஜைகள் செய்வதன் மூலம் நமது வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமோ அவை அனைத்தையும் அடைந்துவிட முடியும். ஒரு சில வீடுகளில் ராமர் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து இருப்பார்கள். ராமர் ஜாதகத்தை கண்களால் பார்ப்பதே புண்ணியம் என்று சொல்வார்கள். அதனை பூஜை அறையில் வைத்து வணங்கி வர சிறப்பு பலன்கள் கிடைக்கின்றது.

ராமர் ஜாதகத்திற்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து, பூஜை அலங்காரம் செய்து வைக்க வேண்டும். பிறகு பூஜை அறையின் முன் அமர்ந்து ராமரை மனதார நினைத்து கொண்டு, ஸ்ரீராமஜெயம் என்று சொல்ல வேண்டும். இவ்வாறு 108 முறை சொல்ல வேண்டும். பின்னர் 108 முறை ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை எழுத வேண்டும். அன்றைய தினம் ஒரு பொழுதாவது விரதம் இருக்க வேண்டும். உங்களால் முடிந்த சிறப்பு நெய்வேத்தியம் செய்து ராமபிரானுக்கு படைக்க வேண்டும்.

- Advertisement -