துரத்தும் துரதிருஷ்டத்தை விரட்டி அடிக்க அதிர்ஷ்டம் தேடி வர வீட்டில் இந்த ஒரு பழத்தை இப்படி செஞ்சு தூக்கி போட்டுருங்க!

amavasai-lemon
- Advertisement -

இன்பம், துன்பம் கலந்தது தான் வாழ்க்கை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரே மாதிரியான நிலை இருப்பது என்பது சாத்தியமற்றது. அதுபோல எல்லோருக்குமே அதிர்ஷ்டம் என்கிற ஒன்று இருக்கும். தொடர்ந்து துரதிர்ஷ்டம் துரத்திக் கொண்டே இருந்தால், உங்களை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் தலைவிரித்தாடுகிறது என்று தான் அர்த்தம். இதனை சரி கட்டுவது எப்படி? துரதிர்ஷ்டம் நீங்க, அதிர்ஷ்டம் வர நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல்களின் மூலம் அறிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த பிரபஞ்சத்தில் தெய்வீக ஆற்றல் அதிகமாக இருக்கும் நாள் பௌர்ணமி ஆகும். அதே போல கெட்ட சக்திகளுக்கு அதிகம் சக்தி இருப்பது அமாவாசை நாளாகும். இந்த ரெண்டு நாட்களிலுமே இது போல செய்து வரும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய துரதிர்ஷ்டங்கள் அனைத்தும் நம்மை விட்டு ஓடிவிடும் என்பது சாஸ்திர நியதி!

- Advertisement -

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் வீட்டில் எலுமிச்சை பழத்தை வைத்து இதை செய்ய வேண்டும். எலுமிச்சை தேவ கனி என்று அழைக்கப்படுகிறது. எலுமிச்சை எதிர்மறை ஆற்றல்களை கிரகித்துக் கொள்ளக்கூடிய அற்புதமான தன்மையை கொண்டு விளங்குகின்றது. இதனால் தான் என்னவோ, அதனை தீய சக்திகளுக்கும் கூட பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த எலுமிச்சை கனியை நல்ல கனியாக பார்த்து தேர்ந்தெடுத்து நான்கு எடுத்துக் கொள்ளுங்கள். அமாவாசை அல்லது பௌர்ணமி தினத்தில் இதை செய்யுங்கள். நான்கு எலுமிச்சை பழங்களையும் சிறிய கிண்ணத்தில் வையுங்கள். நான்கு கிண்ணங்களில் நான்கு பழங்களையும் வைத்த பின்பு, கைநிறைய கல் உப்பை எடுத்து கிண்ணத்தில் போட்டு எலுமிச்சையை மூடி வையுங்கள்.

- Advertisement -

இந்த கிண்ணத்தை அப்படியே கொண்டு போய் வீட்டில் நான்கு மூலைகளிலும் வைக்கலாம். மூலைக்கு ஒன்றாக வைத்துவிட்டு அதை ஏழு நாட்கள் வரை யாரும் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும் பொழுது ஏழு நாட்களில் வீட்டில் இருக்கக்கூடிய துர் தேவதைகள், தீய சக்திகள், கண் திருஷ்டிகள், கெட்ட அதிர்வலைகள் என்று அனைத்தையுமே அந்த எலுமிச்சை பழம் ஆனது கிரகித்து தன்னுள் வைத்துக் கொள்ளும்.

ஏழு நாட்களுக்கு பிறகு இந்த கிண்ணங்களை எடுத்து அதில் இருக்கும் உப்பை தொடாமல் ஒரு பாலிதின் கவரில் அனைத்தையும் அப்படியே போட்டுக் கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு முடிச்சாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். கிண்ணங்களை கழுவ போட்டுவிட்டு, இந்த கவரை கொண்டு போய் யாருடைய கண்களிலும் படாதவாறு எங்காவது தூக்கி வீசி விடுங்கள் அவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே:
இதை செய்தால் காலம் முழுவதும் கணவன் மனைவி பிரிந்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலையே வராது. ஆயுசுக்கும் அன்னோனியமாக குடும்பம் நடத்த அழகான பதிவு.

இப்படி ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் மட்டும் செய்து வந்தால் உங்களை பிடித்துக் கொண்டிருக்க கூடிய துரதிர்ஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு ஓடி, உங்களுக்கு வர வேண்டிய அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். இதனால் எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் மாயமாய் மறைந்து மனதிற்குள் ஒரு புது நம்பிக்கையும், தெம்பும் வரக்கூடும். நீங்கள் இதனை செய்யும் பொழுது உங்களுடைய குலதெய்வத்தை மனதார நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய அத்தனை பிரச்சினைகளையும் நீக்க கோரி வேண்டுதல் வையுங்கள். பிறகு இது போல செய்யும் பொழுது ஏராளமான நன்மைகள் நடக்கும்.

- Advertisement -