இதை செய்தால் காலம் முழுவதும் கணவன் மனைவி பிரிந்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலையே வராது. ஆயுசுக்கும் அன்னோனியமாக குடும்பம் நடத்த அழகான பதிவு.

sukkiran
- Advertisement -

தாலி கட்டிய பின்பு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படக்கூடிய புனிதமான இந்த திருமண பந்தமானது, இருவரும் உயிரோடு இருக்கும் வரை, கடைசி வரை நீடிக்க வேண்டும். உயிரோடு இருக்கும்போது அன்னியூன்யமாக வாழ்ந்த தம்பதிகள் பிரியவே கூடாது. அது நரகத்தை விட கொடுமையான வாழ்க்கையாக மாறிவிடும். ஒருவருக்கு ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொள்பவர்கள் கூட, ஒரு காலகட்டத்தில் வெறுத்து பிரிந்து விடுகிறார்கள். உண்மையிலேயே மனசு வெறுத்து தான் பிரிகிறார்களா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. ஏதோ ஒரு ஈகோ. நீ பெரியவனா நான் பெரியவனா என்ற இடத்தில், அன்புக்கும் பாசத்திற்கும் மரியாதை கொடுக்காமல், முன் கோபத்திற்கும், கௌரவத்திற்கும் இடத்தை கொடுத்து விடுகிறார்கள். இப்படி மனஸ்தாபத்தால் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றாக சேர வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

சில பேர் சூழ்நிலை காரணமாக மனைவி இங்கும், கணவர் வெளிநாட்டிலும் பிரிந்து வாழ்வார்கள். இப்படிப்பட்ட பிரிவு கூடிய சீக்கிரத்தில் ஒன்று சேர வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆக மொத்தத்தில் எந்த காரணமும் கணவன் மனைவியை பிரிக்க கூடாது. அந்த காரணத்தை சரி செய்யக்கூடிய ஆன்மீகம் சொல்லும் எளிமையான தாந்திரீக பரிகாரம் இது.

- Advertisement -

ஆயுசுகும் கணவன் மனைவி ஒன்றாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்
சுக்கிரனின் அனுகிரகம் கிடைத்தால் கணவன் மனைவி பிரியாமல் ஒன்றாக வாழலாம். சுக்கிரனுக்கு பிடித்த நிறம் என்றால் இளஞ்சிவப்பு. அதாவது நமக்கு புரியும்படி சொல்லப்போனால் பிங்க் கலர். சுக்கிர பகவானுக்கு உரிய நிறமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த பிங்க் நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பிங்க் நிற பேப்பரில் கணவனுடைய பெயரை எழுதிவிட்டு, அடுத்த வரியில் சுக்கிர பகவான் என்று எழுதிவிட்டு, கீழே மனைவியின் பெயரை சேர்த்து எழுதி விடுங்கள். கணவன் மனைவி பெயருக்கு நடுவே சுக்கிர பகவான் இருக்க வேண்டும்.

இப்படி எழுதிய இந்த பேப்பரை அப்படியே மடித்து கட்டிலுக்கு அடியில் வைத்து விடுங்கள். மெத்தையை தூக்கிட்டு அதற்கு அடியில் வைத்து விட்டால் அது அப்படியே இருக்கும். பிங்க் நிற பெயரில் தான் எழுத வேண்டும். முடிந்தால் பிங்க் நிற பேனாவிலேயே பெயரையும் எழுதுங்கள் தவறு கிடையாது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை கணவனும் செய்யலாம். மனைவியும் செய்யலாம். இப்படி இரண்டு பேரையும் பிங்க் நிற பேப்பரில் எழுதிவிட்டு அதில் சுக்ர பகவானை அமர வைத்து விட்டால் உங்கள் இருவரையும் கடைசிவரை ஒன்றாக சேர்த்து வைக்கும் வேலையை அந்த பகவான் பார்த்துக் கொள்வான். சண்டை சச்சரவுகள் வராமல் இருக்காது. ஆனால் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து வாழ வேண்டும் என்ற சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்பட மாட்டீர்கள். இது ஒரு எளிமையான பரிகாரம் தான். ஆனால் நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் கை மேல் பலன் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் நிம்மதியே இல்லை, படுத்தால் கொஞ்ச நேரம் கூட தூங்க முடிவதில்லை. எப்போதும் ஒரே சண்டை சச்சரவாக இருக்கிறது என்று புலம்புபவர்கள் ஒரு கைப்பிடி உப்பை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.

இந்த பேப்பரை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கெல்லாம் இடமே இல்லை. இந்த பேப்பரை எழுதி கட்டிலுக்கு அடியில் வைத்து விடுங்கள். அது கிழிந்து போய் காணாமல் போகும் வரை அந்த இடத்தில் அப்படியே இருக்கட்டும். பேப்பர் கிழிந்து போய்விட்டது காணாமல் போய்விட்டது என்னும் பட்சத்தில் மட்டும் மீண்டும் புதியதாக இப்படி எழுதி வைத்துக் கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த விஷயங்களை எல்லாம் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -