நம்மில் பலரும் நம்முடைய முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அப்படி முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. இயற்கையான முறையில் நம்மால் பளிச்சென்ற முகத்தை பெற முடியும். அதே சமயம் கடைகளில் விற்கக்கூடிய கிரீம்களை பயன்படுத்தியும் பளிச்சென்ற முகத்தை பெற முடியும். கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இயற்கையான அழகு குறிப்புகள் நம்முடைய முகத்தில் இயற்கையான பொலிவு ஏற்பட்டு விடும். அந்த வகையில் முகத்தை பளிச்சென்று மாற்றுவதற்கும் முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற ரோமங்களை நீக்குவதற்குரிய ஒரு பேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி ஏற்படுவதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை முக்கியமான காரணமாக திகழ்கிறது. மேலும் நாம் உண்ணக்கூடிய உணவுகளின் மூலமும் இந்த முடி வளர்ச்சி என்பது அதிகரிக்கும். இதை நீக்குவதற்கு பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. இயற்கையிலேயே நம்மால் சில பொருட்களை பயன்படுத்தி இந்த முடியை முற்றிலும் நீக்க முடியும். அப்படி நீக்குவதோடு மட்டுமல்லாமல் நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய கருமையையும் விரட்டி அடிக்க முடியும். இரண்டு கல்லில் ஒரு மாங்காய் என்ற கணக்கில் இந்த ஒரு ஃபேஸ் பேக் நமக்கு பயன்படும்.
இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் அரை கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை, ஒரு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய் போட்டு நன்றாக கலக்கி விடுங்கள். இது கொதிக்க ஆரம்பித்ததும் குறைந்த தீயில் வைத்து இரண்டு நிமிடம் கொதிக்க விட வேண்டும். கொதித்த இந்த தண்ணீரை வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது மற்றும் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு, ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன் இரண்டையும் கலந்து இதை ஒரு பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்வதற்கு நாம் ஏற்கனவே வடிகட்டி வைத்திருந்த அந்த மஞ்சள் தண்ணீர் இருக்கும் அல்லவா? அதை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது. முகத்தில் கீழிருந்து மேல்புறமாக இந்த ஃபேஸ் பேக்கை தடவ வேண்டும். இது நன்றாக காய்ந்த பிறகு தண்ணீர் ஊற்றி கழுவாமல் கையை வைத்து மசாஜ் செய்வது போல் தேய்த்து சருமத்தின் இருக்கக்கூடிய இந்த ஃபேஸ் பேக்கை நாம் உதிர்த்து விட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகள் நீங்கும், சருமத்தின் இருக்கக்கூடிய இறந்த செல்களும் நீங்கும், கருமைகளும் கருத்திட்டுகளும் விலகி ஓடும், பளிச்சென்று சருமத்தை பெற முடியும். நாம் தயார் செய்த அந்த தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு நமக்கு தேவைப்படும் பொழுதெல்லாம் நாம் அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதிகப்படியான முடிகள் இருப்பவர்கள் வாரத்துக்கு மூன்று முறை இதை பயன்படுத்த வேண்டும். பிறகு படிப்படியாக குறைத்துக் கொண்டு வாரத்திற்கு ஒரு முறையோ 10 நாட்களுக்கு ஒரு முறையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:மென்மையான பளபளப்பான முகத்தைப் பெற
பக்கவிளைவுகள் எதுவும் இல்லாமல் சருமத்தில் இருக்கக்கூடிய முடியை முற்றிலும் நீக்குவதோடு சருமத்தை இயற்கையிலேயே பொலிவானதாக மாற்றுவதற்கு இந்த ஒரு ஃபேஸ் பேக் நமக்கு பயன்படும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலனை பெறுவீர்கள்.