இன்றைய ராசிபலன் – 22 செப்டம்பர் 2023

daily-rasi-palan22
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இன்றுன்று உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். நீண்ட நாள் பிரிந்த நட்பு, நீண்ட நாள் பிரிந்த உறவுகள், ஒன்று சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக நீண்ட நாள் பிரிவுக்கு பின் கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குறுக்கு வழியில் யோசனை தோன்றும். நேர் வழியில் சென்றால் சாதிக்க ரொம்பவும் நேரமாகிறது. குறுக்கு வழியில் சென்றால் சீக்கிரம் பணம் சம்பாதிக்கலாம் என்று அடுத்தவர்கள் சொல்லி உங்களை குழப்பலாம். ஆனால், அப்படி எதுவும் முட்டாள்தனமாக செய்து விடாதீர்கள். நேர்மையாக சம்பாதிக்கும் பணமே நிலைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் வரலாம். சோர்ந்து போய் உட்கார்ந்து விடக்கூடாது. விடாமல் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். கமிஷன் தொழிலில் நல்ல லாபம் இருக்கும். கட்டுமான தொழிலில் விற்பனையாளர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மூன்றாவது மனிதர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி இருக்கும். செய்யக்கூடிய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. அரைகுறை மனதோடு எந்த வேலையும் செய்யாதிங்க. முடியவில்லை என்றால் ஒரு நாளைக்கு லீவு போட்டுட்டு ஓய்வு எடுப்பது நன்மை தரும். சொந்த தொழிலில் நல்ல லாபம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களாக பேசாத உறவுகளோடு பேசலாம். பிரிந்திருக்கும் உறவுகளை புரிந்து கொள்ளக்கூடிய நேரம் காலம் வரும். உங்களுடைய மனது பக்குவப்படும். மற்றபடி வேலை செய்யும் இடம், அலுவலகத்தில் எப்போதும் போல சுமூகமான நிலை காணப்படும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக சிரித்த முகத்துடன் வலம் வருவீர்கள். யார் திட்டினாலும் அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. போனது போகட்டும் என்று உங்கள் வாழ்க்கை பாதையை தெளிவாக கடந்து செல்வீர்கள். இருந்தாலும் எல்லா விஷயத்திலும் அலட்சியம் இருக்கக் கூடாது. மேலதிகாரிகளை மதித்து தான் ஆக வேண்டும். சொந்த தொழிலில் சிக்கல்கள் வரும்போது விளையாட்டுத்தனமாக இருக்கக் கூடாது ஜாக்கிரதை.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று துயரங்கள் இல்லை. உங்களை சுற்றி இருப்பவர்களே பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள். தலைவலி என்றால் தைலம் வாங்கி கொடுக்க நாலு பேர், பசிக்குது என்றால் சாப்பாடு வாங்கி கொடுக்க நாலு பேர் என்று உங்கள் மீது அக்கறை காட்ட சில உறவுகளும் சில நண்பர்களும் இருப்பார்கள். மனது நிம்மதி பெறும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று எல்லாம் தலைகீழாக நடக்கப்போகிறது. பிரச்சனை என்று சொல்லி கவலைப்பட்டால், அந்த பிரச்சனையின் மூலம் பாதிப்பு இருக்காது. சின்ன விஷயம் தானே என்று கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் அது பெரிய அளவில் பாதிப்பை கொடுத்து விடும். உடல்நல பிரச்சனையில் இருந்து, பண பிரச்சனை வர எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வழிவழியான பிரச்சனை தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதாவது பங்காளிகள் சண்டை சொத்து பிரச்சனை போன்ற விவகாரங்கள் விஸ்வரூபம் எடுக்கும். இதனால் சொந்த பந்தத்திற்குள் பிரச்சனை வரும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். எந்த வேலையிலும் ஈடுபாடு இருக்காது. வேலை செய்யும் இடத்தில் தூக்கம் தூக்கமாக வரும். சொந்தத் தொழிலில் கல்லாப்பெட்டியில் அமர முடியாமல் கஷ்டப்படுவீர்கள். கண் திருஷ்டி தான். வீட்டில் பெரியவர்களை திருஷ்டி சுத்தி போட சொல்லுங்கள். சரியாகிவிடும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நல்ல ஐடியாக்கள் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்ல நிறைய பேர் உதவுவார்கள். சந்தோஷம் நிறைந்த இந்த நன்னாளில் குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனம் ஈடுபடும். நேர்வழியோடு செல்லுங்கள். குறுக்கு வழியில் பயணம் செய்வது எப்போதும் ஆபத்துதான்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க அடுத்தவர்கள் உதவியாக இருப்பார்கள். ஆனால் அதையே சாக்காக வைத்துக் கொண்டு சுமையை அடுத்தவர்கள் தலை மேல் சுமத்தக்கூடாது. உங்களுடைய பொறுப்பு என்ன என்று உனர்ந்த செயல்பட வேண்டும். இல்லை என்றால் வீண்பேச்சுக்கும், பழிப்பேச்சிக்கும் ஆளாகிர்கள். உங்கள் கடமைகளை தவறாமல் செய்ய அயராது உழைக்க வேண்டும்.

- Advertisement -