சாப்பிடும் போது இந்த தவறை மட்டும் இனி செய்யாதீங்க! உங்க வயிறு வீங்கிக் கொண்டே போகும் தெரியுமா?

thoppai-eating-food
- Advertisement -

உடல் எடையை குறைப்பவர்கள் பெரும்பாலும் சாப்பாட்டு முறையை தான் முதலில் மாற்றி அமைப்பார்கள். உடல் எடையை எளிதாக கூட்டி விடலாம் ஆனால் குறைப்பது என்பது ரொம்பவே சிரமமான விஷயமாக இருக்கும். உடல் எடை கூடினால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் அனைவருக்கும் தெரியும். இதனால் உங்கள் உயரத்திற்கு ஏற்ப எடையை சரியாக பராமரித்து வருவது உங்களுடைய பொறுப்பாக இருக்கிறது.

உடல் எடையை குறைக்க செய்யும் முயற்சிகளில் குறிப்பாக சாப்பிடும் பொழுது செய்யக்கூடிய தவறுகளில் சில சமயங்களில் உடல் எடை அதிகரிக்கவும் செய்து விடுகிறது. ஒருவர் உடல் எடையை குறைப்பதற்கு முன்பு தகுந்த நிபுணர்களின் ஆலோசனை பெறுவது ரொம்பவே நல்லது. அந்த வகையில் உடல் எடை குறைக்க செய்யும் முயற்சியில் செய்யும் தவறுகள் என்னென்ன? இதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் என்னென்ன? என்பது போன்ற ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

சிலர் காலையில் எழுந்தவுடன் தேநீருடன் ஸ்நாக்ஸ் வைத்து சாப்பிடுவார்கள். இது காலம் காலமாக பொதுவாக பழக்கி விடப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது, ஆனால் உடல் எடையை குறைப்பவர்கள் இது போல தேநீருடன் சிற்றுண்டிகளையும் சேர்த்து சாப்பிடுவதால் இரும்பு உறிஞ்சுதல் பாதிக்கப்படுகிறது. அமிலத்தன்மை வயிற்று உப்புசத்தை ஏற்படுத்துகிறது. இதில் டானின் காஃபின் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளதால் உடல் எடையை கூட்டுகிறது.

இரவு அல்லது பகலில் கூட வாழைப்பழத்துடன் பாலை சேர்த்து சிலர் அருந்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். பால் மற்றும் வாழைப்பழம் இரண்டுமே அதீத சத்துக்களை கொண்டுள்ளது. இவற்றை உட்கொள்ளும் பொழுது 20லிருந்து 30 நிமிடம் இடைவெளி விட்டு உட்கொள்வது ரொம்பவே நல்லது. இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடும் பொழுது உடல் எடையை கூட்டுகிறது.

- Advertisement -

சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிட வேண்டும் என்பது ஜீரண சக்திக்காக சொல்லப்படுகின்ற ஒரு பொதுவான விஷயமாகும். ஆனால் சிலர் சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், கேக் போன்ற ஹெவியான இனிப்பு வகைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இது குடல் சுமையை அதிகரிக்க செய்து விடும். இதனால் அழுத்தம் ஏற்படும், உடல் எடையும் கூடும்.

சாப்பிட்டு சில மணி நேர இடைவெளிக்கு பிறகு இவற்றை எடுக்கலாம். உடல் எடையை குறைப்பவர்கள் சாதத்தின் அளவை குறைத்து சப்பாத்தியை எடுத்துக் கொள்வார்கள். சப்பாத்தி எடுத்துக் கொள்ளும் பொழுது சாதம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை! சிறிது சப்பாத்தி, சிறிது சாதம் என்று எடுத்தாலும் மாவு சத்து அதிகரிக்கும். இதனால் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்கும். அஜீரணக் கோளாறுகள், வயிறு வீக்கமும் உண்டாகும்.

- Advertisement -

அதிக புரதம் எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும் என்பது தவறான கருத்தாகும். ஜீரணிக்க கூடிய அளவிற்கு புரதம் இருந்தால் போதும். ஒரே நேரத்தில் அதிக அளவு புரதம், புரோட்டீன்கள் எடுத்துக் கொள்வதால் வயிற்றில் சுமை உண்டாகிறது. சமச்சீரான உணவு முறை மட்டுமே உடல் எடையை சமைச்சீராக குறைக்கும். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு அனைத்துமே தேவையான அளவிற்கு சமச்சீரான அளவில் எடுக்க வேண்டும். எதையும் முற்றிலுமாக தவிர்க்கவும், நிராகரிக்கவோ கூடாது.

இதையும் படிக்கலாமே:
தீராத மூக்கடைப்பால் அவதிப்படுகிறீர்களா? நொடியில் சுவாச பிரச்சனை தீர்ந்து சீராக மூச்சு விட வீட்டிலேயே என்ன செய்யணும்?

உடல் நல குறைகள் உள்ளவர்கள், உடல் எடையை குறைப்பதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. உணவு முறையை மாற்றி அமைப்பது மட்டும் அல்லாமல், உடற்பயிற்சியையும் மேற்கொண்டால் மட்டுமே தொப்பை கரையும், உடல் எடையும் குறையும்.

- Advertisement -