தீராத உடல் வலி மற்றும் திடீர் துன்பத்தால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு

thunbam neenga
- Advertisement -

நன்றாக இருக்கும் ஒரு நபருக்கு திடீரென்று பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருந்தாலும், உடலில் திடீரென்று நோய்களோ வலிகளோ ஏற்பட்டாலும் அதிலிருந்து வெளியில் வருவதற்கு சில நாட்கள் அவர்களுக்கு எடுக்கும். மேலும் அவர்களால் அதிலிருந்து வெளியில் வர முடியாமலும் கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றினால் அவர்களின் கஷ்டங்கள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நன்றாக வேலை செய்து கொண்டு இருப்பவர் திடீரென்று கால் வலி, கை வலி, உடல் அசதி என்று எந்த வேலையும் செய்ய முடியாமல் கஷ்டப்படுவார்கள். இதற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். அதேபோல் நன்றாக இருக்கும் நபருக்கு திடீரென்று ஏதாவது ஒரு ரூபத்தில் துன்பங்கள் வந்து அந்த துன்பத்தில் இருந்து வெளிவர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். எதுவாக இருந்தாலும் அதை சரி செய்வதற்கு நாம் இறைவனையே நம்ப வேண்டும். அப்படி இறைவனை நம்பி நாம் வழிபட்டால் இறைவனின் அருளால் நமக்கு ஏற்படக்கூடிய துன்பங்கள் நீங்கும்.

- Advertisement -

அந்த வகையில் இப்படிப்பட்ட உடல் வலியால் பாதிக்கப்பட்டவர்கள் பைரவரை வணங்க வேண்டும். அதுவும் சதய நட்சத்திரம் வரும் நாளில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வீற்றிருக்கும் பைரவருக்கு இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அரளிப்பூ மாலை சாற்றி வழிபட வேண்டும். இவ்வாறு மாதம் மாதம் வரும் சதய நட்சத்திர நாளில் பைரவருக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் நம் உடலில் இருக்கக்கூடிய உபாதைகள் நீங்கும்.

திடீரென்று ஏற்படக்கூடிய கஷ்டத்தை நீக்குவதற்கு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் மூலவருக்கு முன்பாக 9 அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் திடீரென்று ஏற்பட்ட துன்பத்தில் இருந்து இறைவன் நம்மை காப்பாற்றுவார்.

- Advertisement -

ஆலயத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பவர்கள் வீட்டில் நாம் விளக்கேற்றும் பொழுது அந்த விளக்குகளுடன் புதிதாக ஒரே ஒரு அகல் விளக்கை வாங்கி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டாலும் நமக்கு ஏற்பட்ட துன்பத்தில் இருந்து நம்மால் விரைவில் வெளியில் வர முடியும்.

நம் வாழ்க்கையில் இப்படி திடீர் திடீரென்று ஏற்படக்கூடிய துன்பங்கள் அது உடல் ரீதியாக இருந்தாலும் சரி மன ரீதியாக இருந்தாலும் சரி அதை சரி செய்வதற்கு இறைவன் ஒருவரே நமக்கு துணை நிற்பார் என்பதை முழுமனதோடு நம்பி அவரை வழிபட்டு வருவதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களில் இருந்து நம்மால் விரைவிலேயே வெளிவர முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றல்களை விலக்கும் பாதாம் பருப்பு.

இந்த எளிமையான வழிபாட்டு முறையை நாமும் பயன்படுத்தி நம் வாழ்வில் நமக்கு ஏற்பட்ட துன்பத்தில் இருந்து வெளிவந்து இன்பமான சூழ்நிலையில் வாழலாம்.

- Advertisement -