எதிர்மறை ஆற்றல்களை விலக்கும் பாதாம் பருப்பு.

negative energy
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கை சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் அவரை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்க வேண்டும். நேர்மறை ஆற்றல்கள் அல்லாமல் எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் அவர்களுக்கு எதிர்மறையான செயல்களே நடைபெறும். அப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்களை நேர்மறை மாற்றலாக ஆற்ற உதவக்கூடிய ஒரு அற்புதமான பாதம் பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம்மை சுற்றி இருக்கும் ஆற்றல்களுக்கு ஒரு வித சக்தி இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஏன் நம் மனதிற்குள் நல்ல விஷயங்களை நினைக்கும் பொழுது நமக்கு நன்மைகள் நடைபெறும் என்றும் தீய விஷயங்களை நினைக்கும் போது தீமையை நடைபெறும் என்றும் பலரும் கூறி கேட்டிருப்போம். சிலர் அனுபவரீதியாகவும் உணர்ந்து இருப்பார்கள்.

- Advertisement -

நம் எண்ணத்திற்கு எந்த அளவுக்கு சக்தி இருக்கிறதோ அதே அளவிற்கு தான் நம்மை சுற்றி இருக்கும் ஆற்றல்களுக்கும் சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட சக்திகள் நேர்மறை சக்திகளாக இருந்தால் அனைத்தும் நன்மையாகவே வந்தடையும். நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் நம் எண்ணத்தாலோ அல்லது பிறரின் தீய எண்ணத்தாலோ உருவாகக் கூடியதாக இருக்கலாம். சிலருக்கு கண் திருஷ்டி ஆளும் ஏற்படலாம். எதனால் எதிர்மறை சக்திகள் ஏற்படுகிறது என்பதை விட அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமாக கருதப்படுகிறது.

இந்த பரிகாரத்தை நாம் சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு கருப்பு நிற துணி வேண்டும். அதோடு 9 பாதாம் பருப்பு வேண்டும். ஒரே அளவில் முழுமையாக இருக்கக்கூடிய பாதாம் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அடி அகலமும் நீளமும் இருக்கக்கூடிய ஒரு கருப்பு நிற துணியை எடுத்து அதில் இந்த பாதாம் பருப்புகளை வைத்து கருப்பு நிற நூலால் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளும், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளும், இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளும் செய்யலாம்.

- Advertisement -

இவ்வாறு கருப்பு துணியில் கட்டிய இந்த பாதாம் பருப்பை தென்மேற்கு வைத்து விட வேண்டும். இது யார் கண்ணிற்கும் தெரியக்கூடாது. அலமாரி போன்று ஏதாவது இருக்கும் பட்சத்தில் அதன் மேல் தூக்கி போட்டு விட வேண்டும். இதை மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும். நடுவில் வேற எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பழைய பாதாமை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வாழ்வில் விஸ்வரூப வெற்றி பெற பரிகாரம்

இவ்வாறு நாம் பாதாம் பருப்பை கருப்பு துணியில் கட்டி வைப்பதன் மூலம் அது நம் வீட்டிலும் நம்மிடமும் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் அனைத்தையும் ஈர்த்து நேர்மறை சக்திகளாக மாற்றிவிடும். அதனால் நமக்கு நன்மையே நடைபெறும்.

- Advertisement -