இந்த பொருளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் போதும். உச்சி முதல் பாதம் வரை நம்மைப் பிடித்திருக்கும் தரித்திரம் தினம்தினம் நம் உடலை விட்டு வெளியே சென்று விடும்.

sleep
- Advertisement -

அன்றாடம் நம்முடைய வாழ்க்கையில் நாம் கடந்து செல்லக்கூடிய பாதையில் எத்தனையோ விதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நம்மை சுற்றி நடக்கின்ற எதிர்மறையான விஷயங்கள், அனைத்தும் நம்முடைய ஆரா வட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக மங்கச் செய்துவிடும். நம் உடலை சுற்றி கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் ஆரா வட்டம் பிரகாசமாக செயல்பட்டால் தான் நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும். அந்த ஆரா வட்டமானது மங்கத் தொடங்கி விட்டாலும் சரி, நம் உடம்பில் இயங்கிக்கொண்டிருக்கும் சக்கரங்கள் இயங்குவதில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டாலும், நம்முடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் வரத்தொடங்கும். தரித்திரம் பிடிக்கும். இதன்மூலம் நாம் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சரி, இப்படிப்பட்ட பிரச்சனைகள் நமக்கு எதனால் வருகிறது.

meditation

சிலருடைய சாபம், கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் தோஷங்கள், கெட்ட எண்ணம் கொண்டவர்களுடைய கண் பார்வை, கண் திருஷ்டி வயிற்றெரிச்சல் பொறாமை இதனுடைய தாக்கமே நம்முடைய நமக்கு வரக்கூடிய கஷ்டத்திற்கு காரணமாக இருக்கின்றது. நம்மை சுற்றி இருக்கும் ஆரா வட்டத்தை சரியாக இயங்க விடாமல் தடுக்கின்றது. உடம்பில் சீராக இயங்கிக் கொண்டிருக்கும் சக்கரங்களை பழுதடையச் செய்யும். ஏன், கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அருகில் நாம் சென்றாலும் அவர்களுடைய கெட்ட எண்ணத்தின் தாக்கம் நம் உடலுக்குள் சென்று நமக்கு தேவையற்ற பிரச்சினைகளைக் கொடுத்துவிடும்.

- Advertisement -

இத்தனை பிரச்சினைகளில் இருந்தும் நம்மை காத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டிய ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே ஒரு மனிதன் தூங்கும் போது அவனுடைய ஆரா வட்டமும், உடம்பில் இயங்கி கொண்டிருக்கக்கூடிய சக்கரமும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும்.

sleep1

தன்னை தானே புதுப்பிக்கும் வேலையில் ஆரா வட்டம் செயல்படும் போது, நம் உடம்பில் நம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் கழிவுகளை, அதாவது தரித்திரத்தை வெளியேற்றுவதற்கு எந்த ஒரு தடையும் இருக்கக் கூடாது. அதற்கு நம் தலையணைக்கு அடியில் எந்தெந்த பொருட்களை வைத்து தூங்க வேண்டும்.

- Advertisement -

சோப்புப் போட்டுக் குளித்தால் உடம்பில் இருக்கும் அழுக்கு எப்படி வெளியேற்றப்படுகிறதோ, அதேபோல்தான் இந்த பொருட்களை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் நம் உடம்பில் கண்ணுக்கு தெரியாமல் நம்மை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் எதிர்மறை ஆற்றல், தரித்திரம், கண்திருஷ்டி அனைத்தும் நம் உடலை விட்டு நீங்கி விடும். ஒரு சிறிய வெள்ளைத் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கருப்பு நிறத்தில் இருக்கும் எள்ளு 1 ஸ்பூன், வெள்ளை நிற கல் உப்பு 1 ஸ்பூன், வெந்தயம் 1 ஸ்பூன், இந்த 3 பொருட்களையும் வைத்து சிறிய முடிச்சாக கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

mudichu

மாதத்தில் இரண்டு நாட்கள் இந்த பொருளை புதியதாக மாற்றி வைத்தால் போதும். பழைய பொருட்களை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். தினம் தினம் தூங்கும் போது தலையணைக்கு அடியில் இந்த முடிச்சை வைத்துக்கொண்டால் போதும். நம்மை சுற்றி இருக்கும் ஆரா மட்டும் எப்போதும் பிரகாசமாக இயங்கும். நம் மனதிற்குள் எப்போதும் நல்ல எண்ணங்கள் எழும். நம்முடைய சக்கரங்கள் சீராக இயங்கத் தொடங்கிவிடும். பெரியதாக எந்த ஒரு பாதிப்பும் நமக்கு ஏற்படாது. பெரியதாக எந்த ஒரு பிரச்சனையிலும் நாம் சிக்கிக் கொள்ள மாட்டோம். வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்திச் செல்லலாம். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -