நீண்ட நாட்களாக உங்கள் அழகை குறைக்கும் தழும்பை கூட மேஜிக் போட்ட மாதிரி மறைய வைக்கலாம். இந்த சீக்ரெட் ஐடியாவை தெரிஞ்சுகிட்டா.

- Advertisement -

இந்த தழும்பு பிரச்சனை ஆண்களை விட பெண்களையே அதிக அளவில் பாதிக்கிறது. பெண்களுக்கு முகப்பரு வந்து மறைந்து விட்டாலும் கூட அந்த இடத்தில் தழும்பு மறையாமல் அப்படியே இருக்கும். அந்த தழும்பு அப்படியே தங்கி அவர்களின் அழகையே கெடுத்து விடும். அது மட்டும் இன்றி அவர்கள் சமைக்கும் வேளையில் கூட சிறு சிறு காயங்களோ, தீப்புண்களோ பட்டு அந்த தழும்பும் கூட கைகளில் ஆங்காங்கே இருந்து விடும். பெரும்பாலும் இது மறைவதே இல்லை. அப்படியே நாள் போகப் போக இது ஒரு அடையாளம் போலவே ஆகிவிடும். இதை சரி செய்ய நாம் பெரிய அளவில் மெனக்கெட வேண்டாம். நம் வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் சில பொருள்களை வைத்தே சரி செய்து விடலாம். இதற்காக வெளியில் கெமிக்கல் கலந்த எந்த ஆயின்மெண்ட்யும் பயன்படுத்தி சருமத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். இப்போது இந்த தழும்பை எப்படி மறைய வைப்பது என்று பார்ப்போம்.

இந்த பேஸ்ட் செய்வதற்கு தேவையான பொருட்கள்: கசகசா -20 கிராம், வேப்பிலை கொழுந்து – 5 கிராம், கஸ்தூரி மஞ்சள் – 5 கிராம். இதில் கசகசாவை மட்டும் ஒரு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் முன்பே தண்ணீரில் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் அரைக்கும் போது நன்றாக அரைபடும். ஊற வைத்த கசகசாவை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வேப்பிலை கொழுந்து, கஸ்தூரி மஞ்சள் இரண்டும் சேர்த்து நல்ல ஒரு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் சருமத்தில் தழும்பு உள்ள இடத்தை நன்றாக துடைத்து கொள்ளுங்கள். பிறகு இந்த பேஸ்ட்டை ஒரு ஆயின்மென்ட் போல் அதன் மேல் தடவி விடுங்கள். இது அப்படியே குறைந்தது பதினைந்து நிமிடமாவது இருக்கட்டும். அதன் பிறகு அதை ஒரு காட்டன் துணி வைத்து துடைத்து விடுங்கள்.

இதில் இன்னொரு முறையும் உள்ளது அதையும் தெரிந்து கொள்வோம். அதற்கு தேவையானவை: பச்சைக் கற்பூரம் -4,(நன்றாக பவுடர் செய்து எடுத்து கொள்ளுங்கள்), விளக்கெண்ணெய் -1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் – 1 ஸ்பூன். பச்சைக்கற்பூரத்தை பவுடராக்கிய பிறகு, அதில் மஞ்சளை சேர்த்து விளக்கெண்ணெய் ஊற்றி குழைத்து இந்த தழும்பு உள்ள இடங்களில் தொடர்ந்து போட்டு வந்தால் தழும்பு இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிடும்.

- Advertisement -

இதில் இன்னொரு எளிமையான முறையும் இருக்கிறது ஆலுவேரா ஜெல் இருந்தால் அதை தினமும் இந்த தழும்பு உள்ள இடத்தில் தடவி வரலாம். நாளடைவில் இந்த தழும்பு மறையும். ஆனால் மற்ற முறைகளை விட இந்த முறையில் மறைய கொஞ்சம் நாட்கள் அதிகம் ஆகும்.

இதையும் படிக்கலாமே: கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு முடி வளர வேண்டுமா? கருவேப்பிலை ஹேர் பேக்கை இப்படி போடுங்க.

இவைகளை தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் உங்கள் உடலில் காயம் பட்ட தழும்பு, முகப்பரு வடு, தீக்காயம், தழும்பு ஏன் பெண்களின் பிரசவத்திற்கு பிறகு வயிற்று பகுதியில் இருக்கும் பிரசவ தழும்பு கூட இந்த முறைகளை பயன்படுத்தி வரும் போது மறைந்து விடும்.

- Advertisement -