உடனடி பணத் தேவைக்கு இதை மட்டும் செய்யுங்கள் போதும். தேவைக்கான பணம் உங்கள் வீடு தேடி வரும்.

cash-mahalakshmi
- Advertisement -

அவசர செலவுக்கு உடனடியாக கையில் பணம் தேவை என்றால் என்ன செய்வது? நம்முடைய கையில் சேமிப்பு வைத்திருந்தால் அதிலிருந்து எடுத்து செலவு செய்வோம். தங்க நகைகள் இருந்தால் அடமானம் வைப்போம். சேமிப்பும் இல்லை, அடமானம் வைக்க நகையும் இல்லை. இந்த சூழ்நிலையில் உடனடியாக பணம் வேண்டும் என்பவர்கள் நிச்சயமாக யாரிடமாவது கடன் கேட்பார்கள். சில சமயங்களில் என்னதான் முயற்சி செய்தும் அவசர தேவைக்கு பணம் கிடைக்காமல் தவித்து வருவோம். அப்போது இந்த பிரபஞ்சத்திடம் பணவரவை எப்படி கேட்பது? நம்முடைய வீட்டிற்கு பணத்தை எப்படி வரவழைப்பது? சுலபமான ஒரு தாந்திரிக முறை உள்ளது. அது என்ன பரிகார முறை என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் உங்களை கைவிட்டாலும், உங்கள் நம்பிக்கையும், நீங்கள் நம்பும் இந்த பிரபஞ்சமும், அந்த இறைவனும் உங்களை கை விடமாட்டார்கள். பண வரவை கொடுக்கும் இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். குறிப்பாக வெள்ளிக்கிழமை மதியம் 1:20 மணியிலிருந்து 2:00 மணிக்குள் இதை நீங்கள் செய்து முடித்திருக்க வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை என்றாலே நம்முடைய வீடும், பூஜை அறையும் சுத்தபத்தமாக தான் இருக்கும். வீடு நல்ல வாசத்தோடு சாம்பிராணி தூபம் புகை நிறைந்ததாக இருக்கும். மதியம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அடுத்த படியாக உங்கள் வீட்டில் வடகிழக்கு மூலைக்கு நீங்கள் வரவேண்டும். வடகிழக்கு மூலையில் ஒரே ஒரு சாம்பிராணி தூபம் மட்டும் ஏற்றி வைத்தால் போதும்.

இந்த பரிகாரத்திற்க்கு 6, ஒரு ரூபாய் நாணயங்கள் தேவை. ஒரு மஞ்சள் துணியும் தேவை. கையில் வைத்திருக்குமாறு ஒரு ரூபாய் நாணயங்களை அந்த மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு வடகிழக்கு மூலையில் ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள். நீங்களும் வடகிழக்கு மூலையில் அமர்ந்து கொள்ளுங்கள். இப்போது மகாலட்சுமியை நினைத்து மனதார தியானம் செய்யுங்கள். உங்களுடைய பண பிரச்சனையை இந்த பிரபஞ்சத்திடம் சொல்லி, அந்த இறைவனிடம் சொல்லி, மகாலட்சுமி தாயாரிடம் மனமுருகி உங்களுடைய தேவைக்கு பணம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால், நிச்சயமாக அவசர தேவைக்கு பணம் உங்கள் கைக்கு வரும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்க்காக பயன்படுத்தும் ஒரு ரூபாய் நாணயங்களை மட்டும் கொஞ்சம் பழைய நாணயங்கள் ஆக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதாவது நிறைய பேர் கைக்குப் போய் நீண்ட நாட்களாக புழக்கத்தில் இருந்த பழைய நாணயங்கள் இருக்கும் அல்லவா. அது போன்ற நாணயங்களாக இருந்தால் பரிகாரத்திற்கு மேலும் சிறப்பாக இருக்கும்.

ஒரு வெள்ளிக் கிழமை இந்த பரிகாரத்தை செய்கிறீர்கள். நீங்கள் கட்டி வைத்திருக்கும் அந்த முடிச்சு உங்கள் வீட்டில் வடகிழக்கு மூளையிலேயே இருக்கட்டும். வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் இதே போல மகாலட்சுமியிடம் வேண்டுதலை தொடர்ந்து வைக்கும் போது, உங்களுடைய வீட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் செல்வவளம் நிறைவாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -