உடனடியாக உங்களுடைய வேண்டுதல் நிறைவேற ஒரே 1 வெற்றிலை போதும். தெய்வத்தின் ஆசீர்வாதத்தை நேரடியாக பெற இதை செய்யுங்கள்.

pray
- Advertisement -

ஆத்மார்த்தமாக உண்மையான அன்போடு நாம் எந்த கடவுளை நினைத்து வேண்டினாலும், அந்த கடவுள் மனமிரங்கி உடனடியாக நம்முடைய வேண்டுதலுக்கு செவி சாய்ப்பான். அதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. அரைகுறை மனதோடு நம்பிக்கையே இல்லாமல் வைக்கக்கூடிய வேண்டுதல் தான் பலிக்காமல் போகுமே தவிர, நம்பிக்கையோடு மன உறுதியுடன் நாம் வைக்கும் வேண்டுதலை அந்த இறைவன் நிச்சயம் நிறைவேற்றியே தீருவான் என்ற நம்பிக்கையை மனதில் வைத்துக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனை ஒருபோதும் நிறைவேறாமல் இருக்காது. நம்பிக்கை என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்துக்கொண்டு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிடுங்கள். குலதெய்வத்தை முதலில் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். வேண்டுதல் நிறைவேற நாம் பிரார்த்தனை செய்யும்போது நம் கையில் கட்டாயம் இந்த இரண்டு பொருட்கள் இருக்க வேண்டும். ஒரு எலுமிச்சம்பழம், ஒரு வெற்றிலை. வெற்றியைத் தரும் வெற்றிலையோடு, தேவ கனி என்று சொல்லப்படும் இந்த எலுமிச்சம்பழம் சேரும் போது உங்களுடைய வேண்டுதலை நேராக அந்த இறைவன் செவிகளில் கேட்கும்.

- Advertisement -

இடது உள்ளங்கைக்கு நடுவே வெற்றிலையை வைத்து, அதன் மேலே ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து, வெற்றிலையை எலுமிச்சம் பழத்துடன் மடித்து எலுமிச்சம் பழத்துக்கு மேலே வலது உள்ளங்கையை வைத்து மூடி கொள்ளுங்கள். அதாவது உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளும் நடுவே வெற்றிலையும், எலுமிச்சம்பழமும் இருக்கின்றது.

பூஜை அறையில் தீபத்திற்கு முன்பாக நீங்கள் அமர்ந்து உங்களுடைய உள்ளங்கைகளில் இப்படி எலுமிச்சம் பழத்தையும் வெற்றிலையும் தயார் செய்து வைத்துக் கொண்டு, மனதார இறைவனிடம் உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். ஏதாவது ஒரு கோரிக்கையாக இருக்கட்டும். அந்த கோரிக்கை நிச்சயமாக நிறைவேறிய ஆகவேண்டும் என்ற நம்பிக்கையோடு இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

- Advertisement -

பிரார்த்தனை செய்யக் கூடிய நேரம் என்பது அவரவருடைய விருப்பம் தான். பத்தில் இருந்து பதினைந்து நிமிடங்கள் வரை இந்தப் பிரார்த்தனையை தியான நிலையில் மேற்கொள்ளலாம். உள்ளங்கைகளில் கவனம் தேவை. வெற்றிலையும் எலுமிச்சம்பழமும் அப்படியே இருக்கட்டும். வேண்டுதலை முடித்துவிட்டு இந்த இரண்டு பொருட்களையும் அப்படியே பூஜை அறையில் ஒரு தட்டின் மேல் வைத்து விடுங்கள்.

அதன்பின்பு பிரார்த்தனையை நிறைவேறுவதறுவதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். நீங்கள் வைத்த வேண்டுதல் நம்பிக்கையோடு நியாயமான கோரிக்கையாக இருந்தால், அந்த வேண்டுதல் அடுத்த நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் நிறைவேறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. பூஜை அறையில் வைத்திருக்கக்கூடிய வெற்றிலை வாடிய பின்பு கால் படாத இடத்தில் எடுத்து போட்டுவிடுங்கள்.

நாற்பத்தி எட்டு நாட்கள் அந்த எலுமிச்சம்பழம் உங்கள் வீட்டில் பூஜை அறையிலேயே இருக்கட்டும். நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறி விட்டால் இந்த எலுமிச்சம்பழத்தை ஓடும் தண்ணீரில் கால் படாத இடத்தில் போட்டுவிடலாம்.

விதியின் பயனால் ஒருவேளை உங்களுடைய வேண்டுதல் நிறைவேற வில்லை என்றாலும் நாற்பத்தி எட்டு நாட்கள் கழித்து இந்த எலுமிச்சம்பழத்தை உங்கள் வீட்டில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு மீண்டும் புதியதாக வெற்றிலை எலுமிச்சம் பழத்தை வாங்கி உங்களுடைய வேண்டுதல் நிறைவேற இறைவனிடம் இப்படி பிரார்த்தனை வைக்க வேண்டும்.

- Advertisement -