வீட்டில் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்தால் வறுமை தாண்டவமாடும் தெரியுமா? தவறியும் இதை செய்யாதீர்கள், சாப்பாடு விஷயத்தில் கவனமா இருக்கலாமே!

kuberan-food
- Advertisement -

வீட்டில் நாம் உணவு சமைக்கும் விஷயத்தில் ஆரம்பித்து, அதை பரிமாறும் விதத்தில் இருந்து, சாப்பிடும் வரை அனைத்திற்கும் ஒரு முறை உண்டு. சமைக்கும் பொழுது இன்முகத்துடன் சமைத்தால் தான் அந்த சமையல் ருசி அதிகரிக்கும். அது போல உணவு சாப்பிடும் பொழுதும் பேசாமல், இடை இடையே தண்ணீர் அருந்தாமல், அப்படியே விழுங்காமல் மெல்ல மென்று பொறுமையாக சாப்பிட்டால் வாழ்க்கையின் ஆயுளை நீட்டிக்கலாம் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். அந்த வகையில் நாம் உணவு சாப்பிடும் பொழுது செய்யக்கூடாத தவறுகள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒரு சில சாஸ்திர, சம்பிரதாயங்களை கடைப்பிடித்து நாம் வாழ்க்கை முறையை கையாளுவதன் மூலம் நமக்கு மகிழ்ச்சியும், மன நிம்மதியும் இயல்பாகவே கிடைக்கிறது. அவற்றை மீறும் பொழுது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. அப்படியான ஒரு விஷயம் தான் இதுவும். எவ்வளவு அவசரமான சூழ்நிலையிலும் பொறுமை நிச்சயம் தேவை. அதிலும் சாப்பிடும் பொழுது கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

- Advertisement -

சாப்பிடுபவர்கள் மட்டுமல்லாமல், அந்த உணவைப் பரிமாறுபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். உணவு பரிமாறுபவர்கள் முதலில் சாத பருக்கைகளை கீழே சிந்தக் கூடாது. சாதம் கீழே சிந்தினால் வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடும் என்கிறது சாஸ்திரங்கள். பொறுமையாக கரண்டியால் எடுத்து பரிமாற வேண்டும். இதனால் தான் சாப்பாடு பரிமாறும் பொழுது, சேலையை எடுத்து சொருகி கவனமாக பரிமாற வேண்டும் என்று பெண்களை கூறுவார்கள்.

உண்ணும் உணவில் அன்னபூரணி இருக்கின்றாள் எனவே தெரியாமல் கூட அன்னத்தைக் கீழே சிந்தக்கூடாது. அன்னத்தை கீழே சிந்தினால் தோஷம் ஏற்படும், இதனால் வறுமை தாண்டவம் ஆட ஆரம்பிக்கும். மற்றவர்களிடன் கையேந்தும் நிலை ஏற்படும் என்பதால் தான் உணவு விஷயத்தில் நிறையவே கவனம் செலுத்த வேண்டும். அன்னத்தை மட்டுமல்லாமல் சாப்பாடு பரிமாறும் பொழுது உப்பு, தயிர், ஊறுகாய் போன்றவற்றையும் கீழே தெரியாமல் கூட சிந்த விடக் கூடாது.

- Advertisement -

உப்பு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. தயிர் கோமாதா கொடுக்கும் ஒரு அற்புதமான அமிர்தமாகும். அது போல குபேரனுக்கு உகந்தத ஊறுகாயை கீழே கொட்டினால் பணக் கஷ்டம் வரும். இப்படியான பொருட்களை கீழே சிந்தி விடாமல், சிதறி விடாமல் பக்குவமாக பரிமாறப்பட வேண்டும். பரிமாறுபவர் மட்டுமல்ல, அதை சாப்பிடுபவர்களும் தட்டில் வைத்து ஒழுங்காக சாப்பிட வேண்டும். தட்டை சுற்றி இவற்றை சிந்துவது என்பது கூடாது. சிலருடைய தட்டை சுற்றி பார்த்தால் சாத பருக்கைகளும், மற்ற சில உணவுப் பொருட்களும் சிந்திக் கிடக்கும். இது போல சிந்திக் கொண்டே சாப்பிடுபவர்களுக்கு கையில் நிச்சயம் பணம் என்பது தங்கவே செய்யாது.

எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அது வந்த வழியே ஓடிக் கொண்டே இருக்கும். எனவே சிந்தாமல், சிதறாமல் சாப்பிட்டுப் பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையிலும் பணமானது சிந்தாமல், சிதறாமல் வந்து கொண்டே இருக்கும் என்கிறது ஆன்மீகம். அரிசி, உப்பு, ஊறுகாய், தயிர் மட்டுமல்லாமல் பொதுவாகவே எந்த ஒரு உணவுப் பொருட்களையும் கீழே சிந்தக் கூடாது. குறிப்பாக தண்ணீரை அருந்தும் பொழுது கீழே சிந்திக் கொண்டே குடிக்கக் கூடாது. தண்ணீர் கீழே சிந்தினால் கடன் பிரச்சனை ஏற்படும். சாப்பிடும் பொழுது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவதும் இதற்காகத் தான். நிதானமாக சாப்பிட்டு, முழு ஈடுப்பாட்டுடன் சாப்பிட்டு பாருங்கள், அதன் பிறகு உங்களுக்கு தோல்வியே வராது.

- Advertisement -