உப்பை இரண்டு கைகளிலும் இப்படி வைத்து, வேண்டிய வரங்களைக் கேளுங்கள். 10 நாட்களில் நீங்கள் கேட்ட வரங்கள் அப்படியே கிடைக்கும்.

salt
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் நினைக்கின்றோமோ அதெல்லாம் உடனடியாக நடந்துவிட்டால், வாழ்க்கையை வாழ்வதற்கு சுவாரசியமே இருக்காது. நாம் நினைத்ததை வாழ்க்கையில் போராடி அடைய வேண்டும். அப்போதுதான் அந்த வெற்றியின் மீதும் நமக்கு ஒரு பற்று இருக்கும். வாழ்க்கையின் மீதும் ஒரு சுவாரசியம் இருக்கும். முதலில் வாழ்க்கையில் தோல்வி வந்தால் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி அடையும் மன பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். இந்த ஒரு நல்ல செய்தியோடு இன்றைய பதிவுக்கு செல்வோம்.

salt-uppu

நினைத்ததை வெறும் பத்து நாட்களுக்குள் நிறைவேற்றிக்கொள்ள உப்பை வைத்து ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். நாம் பயன்படுத்தக்கூடிய எல்லா பொருட்களை போல இந்த உப்பு ஒரு சாதாரண பொருள் அல்ல. உப்புக்கு என்று தனி மகத்துவம் உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

- Advertisement -

எல்லோரது வீட்டு விஷயத்திலும், விருந்தில் வாழை இலையை விரித்த உடன் உப்பை தான் முதலில் வைப்பார்கள். இது சாஸ்திரம். சாஸ்திரத்தில் மறைக்கப்பட்டுள்ள உண்மை என்ன தெரியுமா. நாம் ஒருவருடைய வீட்டு விசேசத்திற்கு செல்லும் போது கட்டாயமாக அந்த வீட்டில் நடக்கக்கூடிய தடபுடலான ஆடம்பரமான ஏற்பாடுகளை பார்த்து நிச்சயமாக ‘வியப்புடன் இவ்வளவு நன்றாக விசேஷத்தை நடத்துகிறார்களே’ என்று நினைக்கத்தோன்றும்.

happy-family

அந்த கண் திருஷ்டி ஆனது அவர்களுடைய வீட்டில் நடக்கும் நல்ல விசேஷத்தை பாதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இலையில் முதலில் உப்பு வைக்கப்படுகின்றது. (விசேஷ வீட்டிற்கு வருபவர்களுடைய கெட்ட எண்ணத்தையும், நல்ல எண்ணம் ஆக மாற்றக்கூடிய சக்தி இலையில் வைக்கும் சிட்டிகை உப்புக்கு உள்ளது.) இதை தான் நம்முடைய முன்னோர்கள் சாஸ்திரம் என்று சொல்லி, உப்பில் இருக்கக்கூடிய உண்மையை மறைத்து வைத்து உள்ளார்கள். சிட்டிகை உப்புக்கே அத்தனை மகத்துவம் உண்டு என்றால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

சரி, நினைத்ததை சாதிக்க கல் உப்பை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை பார்க்கலாம். தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். காலையில் எழுந்து நீங்கள் சுத்தமாக இருந்தால் குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பல்தேய்த்து முகம் கை கால்களை அலம்பிக்கொண்டால் போதும். 2 கைகளிலும், கல் உப்பை கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். சம்மணம் போட்டு அமைதியான இடத்தில் வடக்கு திசையை பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.

salt

இரண்டு உள்ளங்கைகளிலும் உப்பை வைத்துக் கொண்டு, உங்களுக்கு என்ன வரங்கள் வேண்டுமோ, நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த வாழ்க்கையை கற்பனையாக நிஜமாக நடந்துவிட்டதாக உங்களுடைய மனதார சொல்ல வேண்டும்.

salt1

எடுத்துக்காட்டிற்கு ‘என்னிடம் நிறைய பணம் உள்ளது. கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்கின்றேன். என்னுடைய குடும்பத்தில் நான் சந்தோஷமாக வாழ்கின்றேன். என் கணவர் நான் சொன்ன பேச்சைக் கேட்டு குடும்பத்தை சரியான முறையில் வழி நடத்திச் செல்கின்றார். என் மனைவி என் சொல்படி கேட்டு நடந்து கொள்கிறாள். என்னுடைய குழந்தைகள் நன்றாக படிக்கின்றது.’ இப்படி நேர் மறையோடு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதன்படி நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக மனதார நினைத்து வாயார உச்சரித்தாலும் தவறில்லை.

salt

உள்ளங்கைகளில் உப்பை வைத்துக்கொண்டு நீங்கள் சொல்லும் இந்த வார்த்தைக்கு, அதுவும் பிரம்ம முகூர்த்தத்தில் உச்சரிக்கக் கூடிய வார்த்தைக்கு உயிர் உண்டு. உங்களுடைய இல்லறவாழ்க்கை எவ்வளவு மோசமாக இருந்தாலும், பத்து நாட்களில், நீங்கள் வேண்டிக் கொண்டபடி நல்லது மட்டுமே நடக்கும். கையில் இருக்கும் உப்பை வேண்டுதலை முடித்தவுடன் தண்ணீரில் கரைத்து விடலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -