எல்லோருக்கும் பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள் 8, நீங்க தெரிஞ்சுக்க மிஸ் பண்ணிடாதிங்க.

home-tips
- Advertisement -

வீட்டில் நாம் அன்றாட வேலையை சுலபமாக்க கூடிய வகையில் சில நுணுக்கமான குறிப்புகளை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். இது சில அவசரமான சமயங்களில் நம் வேலையை சுலபமாக்க கூடும். மேலும் வீட்டு குறிப்புகள், சமையலறை குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள் என்று ஒவ்வொரு விஷயத்திலும் நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தேடி அலையத் தேவையில்லை. இந்த சிறு சிறு விஷயங்கள் மூலம் நேரத்தை அதிகமாக மிச்சப்படுத்தி கொள்ளலாம். அப்படியான எல்லோருக்கும் பயனுள்ள சில எளிய குறிப்புகள் என்னென்ன? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

ilaneer

குறிப்பு 1
திடீரென்று அதிகமாக வயிற்றில் வலி ஏற்படும் பொழுது நொடியில் வலி நீங்க இளநீர் வாங்கி வந்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து அப்படியே குடித்து விடுங்கள். உஷ்ணம் தணிந்து உஷ்ணத்தால் ஏற்படும் வயிறு வலி நீங்கிவிடும். அதிக உஷ்ணம் சில சமயங்களில் பல்வேறு நோய்களை உண்டாக்கிவிடும். எப்போதும் உடலை இயற்கையான முறையில் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குறிப்பு 2
மீந்து போகும் பழைய சாதம் நீங்கள் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை. சாதம் ஊறிய அந்த தண்ணீரில் இருக்கும் சத்துக்கள் அளவற்றவை, எனவே மீந்து போகும் சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து விடுங்கள். மறுநாள் அதனை செடிகளுக்கு ஊற்றுவது செடிகளின் செழிப்பை மென்மேலும் வலுவாக்கும். மேலும் அந்த தண்ணீரை கொண்டு தலையை அலசுங்கள், இதனால் முடிகளின் கால்களுக்கு சத்துக்கள் கிடைத்து ஆரோக்கியத்துடனும், பளபளப்பாகவும் இருக்கும்.

oorugaai-pickles

குறிப்பு 3
எலுமிச்சை ஊறுகாய் தயாரிக்கும் பொழுது அதனுடன் கொஞ்சம் சர்க்கரை, மிளகாய்த்தூள், இந்துப்பு, 2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து நன்கு குலுக்கி பின்னர் வெயிலில் உலர வைத்து சாப்பிட, சுவையும் நன்றாக இருக்கும், ஆரோக்கியமும் பலப்படும்.

- Advertisement -

குறிப்பு 4
தலையில் பேன் அதிகமாக இருந்தால் அதனை நீக்க பெரும் பாடுபட வேண்டியிருக்கும். நீங்கள் சீயக்காய் அரைக்கும் பொழுது அதனுடன் சேர்த்து கடுக்காய் மற்றும் வேப்பிலையை காய வைத்து சேர்த்து அரைத்துக் குளித்தால் எத்தகைய பேன் தொல்லையும் நீங்கிவிடும்.

omam

குறிப்பு 5
நீங்கள் உருளைக்கிழங்குச் சமைப்பதாக இருந்தால் அதனுடன் சேர்த்து கொஞ்சம் ஓமம் மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து உருளைக்கிழங்கு கறி தயாரித்தால் நாலு ஊருக்கு அதன் மணம் ஆளைத் தூக்கும், மேலும் உருளைக்கிழங்கின் மூலம் ஏற்படும் வாய்வு நீங்கி செரிமானம் அதிகரிக்கும்.

- Advertisement -

குறிப்பு 6
சுவாச பிரச்சனைகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்பவர்கள் தூதுவளை பூவை பசும் பாலில் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி பருகினால் நோயின் தீவிரம் குறையும்.

thoothuvalai

குறிப்பு 7
இட்லிக்கு அடிக்கடி மாவு அரைப்பவர்கள் உளுந்து பயன்படுத்துவதற்கு பதிலாக சோயா மொச்சையை ஊற வைத்து மாவு அரைத்து பாருங்கள், சத்தான இட்லி, தோசை கிடைக்கும்.

குறிப்பு 8
கூந்தல் பராமரிப்புக்கு இரண்டு விஷயத்தை செய்யலாம்! ஒன்று முட்டையின் வெள்ளைக்கருவை எலுமிச்சை சாற்றுடன் கலந்து தலை முடி முழுவதும் தடவி 10 நிமிடம் கழித்து சாதாரணமாக ஷாம்பு போட்டு குளித்தால் கண்ணாடி போல உங்கள் கூந்தல் ஜொலிக்கும். இரண்டாவது விஷயம் செம்பருத்தி இலைகளை மைய அரைத்து தலை முழுவதும் தடவி 10 நிமிடம் ஊறவிட்டு அலசினால் கருகருவென கேசம் மிருதுவாக அலைபாயும்.

- Advertisement -