சிவபெருமானின் அருள் ஆசியை வீட்டிலிருந்தே பெற வழிபாடு

sivan
- Advertisement -

பொதுவாகவே சிவபெருமான் வழிபாடு என்றால் எல்லோரும் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய லிங்க வடிவிலான உருவத்தை தான் வழிபாடு செய்வார்கள். பெரும்பாலும் வீட்டில் லிங்கம் வைத்து வழிபாடு செய்யும் அளவுக்கு இன்றைய சூழ்நிலையில், யாருக்கும் காலம் நேரம் இல்லை. அதில் ஒன்றும் தவறு கிடையாது.

உங்களுடைய வீட்டில் சிவலிங்கம் இருந்தாலும் சரி, சிவலிங்கம் இல்லை என்றாலும் சரி, அந்த சிவபெருமானின் அருள் ஆசி உங்கள் குடும்பத்திற்கு முழுமையாக கிடைக்க, அந்த சிவபெருமான் உங்களுடைய வீட்டில் நிரந்தரமாக தங்க, செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பற்றி தான் இன்று தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

சிவபெருமானின் அருள் ஆசையை பெற வழிபாடு

குடும்பத்தில் ஏதோ ஒரு தீராத பிரச்சனை இருக்கு. அந்த துன்பத்திற்கு தீர்வு தர எவ்வளவோ பரிகாரங்களை செய்து விட்டோம். ஆனால் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. அதிலிருந்து விடுபட சிவபெருமான் தான் உரிய வழியை காட்ட வேண்டும் என்று, நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்ய தொடங்குங்கள்.

உங்களுடைய வீட்டில் சிவலிங்கம் இல்லை என்றாலும் பரவாயில்லை. சிவனின் அம்சமான ருத்ராட்சம் ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். ஐந்து முக ருத்ராட்சமாக இருந்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. இந்த பரிகாரத்திற்கு ஒரு முக ருத்ராட்சத்தை மட்டும் பயன்படுத்த வேண்டாம். மற்றபடி மூன்று முக ருத்ராட்சம், ஏழு முக ருத்ராட்சம் எது இருந்தாலும் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டுக் கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் ருத்ராட்சத்தை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். அந்த நல்லெண்ணெயில் இந்த ருத்ராட்சத்தை போடவும். பிறகு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சிவபெருமான மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

நல்லெண்ணையில் அந்த ருத்ராட்சம் நன்றாக ஊறி, அந்த எண்ணெயில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் முழுவதும் சிவபெருமான் நிறைந்திருப்பார். அந்த தீப ஒளி முழுவதும் சிவபெருமான் நிறைந்திருப்பார். இந்த பிரகாசம் உங்கள் வீடு முழுவதும் பரவி அந்த சிவபெருமானின் ஸ்பரிசம் உங்கள் வீடு முழுவதும் நிறைவாக இருக்கும்.

- Advertisement -

திங்கட்கிழமை ஒரு மணி நேரம் இந்த விளக்கை உங்கள் வீட்டில் ஏற்றினால் போதும். எம்பெருமானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறலாம். காலை அல்லது மாலை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த தீபத்தை நீங்கள் ஏற்றலாம். சிவலிங்கம் வைத்திருப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். சிவலிங்கம் இல்லை என்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இந்த ருத்ராட்சத்தின் ரூபத்தில் சிவபெருமான் உங்கள் வீட்டிற்கு நிச்சயம் வருவார். வாழ்க்கையில் தீர்க்கவே முடியாத கஷ்டங்கள் ஏதாவது உங்களுக்கு இருந்தால் அந்த கஷ்டம் தீர இந்த விளக்கை ஏற்றுங்கள் நிச்சயம் அந்த பிரச்சனைக்கு உண்டான தீர்வினை அந்த சிவபெருமான் உங்களுக்கு காட்டி தருவார். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஒரே ருத்ராட்சத்தை வாரம் தோறும்  விளக்கு போட பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர அமாவாசை பரிகாரம்

விளக்கு முழுமையாக எரிந்து முடிந்தவுடன், அந்த ருத்ராட்சத்தை எடுத்து நல்ல தண்ணீரில் கழுவி வைத்து விடுங்கள். பிறகு அடுத்த வாரம் விளக்கு ஏற்ற அதே ருத்ராட்சத்தை பயன்படுத்திக் கொள்வீர்கள். இன்று விளக்கு ஏற்றி விட்டீர்கள் என்றால், அடுத்த வாரம் அந்த விளக்கை சுத்தமாக ஒரு துணி போட்டு துடைத்து எடுத்து விட்டு, புதுசாக நல்லெண்ணெய் ஊற்றி, புதுசாக திரி போட்டு இந்த ருத்ராட்சத்தை போட்டு மறுநாள் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சிவபெருமானின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் சிவ பக்தவர்கள் இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் தரலாம்.

- Advertisement -