உங்களது வாக்கு, பலிக்க வேண்டுமா? உங்கள் வார்த்தைக்கு மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால், இந்த தீர்த்தத்தை 3 நாள் குடித்தாலே போதும்.

theertham
- Advertisement -

வாக்கு என்று சொன்னதும், அருள்வாக்கு சொல்லுவது, குறி சொல்வது, என்று தவறாக நினைத்து விடாதீர்கள். நாம் எண்ணும் எண்ணங்கள், வார்த்தையாக வெளிவரும்போது, அந்த வார்த்தைகளுக்கு உயிர் கிடைக்க வேண்டும். ‘வாய் உள்ளவர்கள், எப்படி வேண்டுமென்றாலும் பிழைத்துக் கொள்வார்கள் என்று சொல்வார்களே’ அதற்காகத்தான்! நம்முடைய மனதில் தோன்றக்கூடிய நல்ல எண்ணங்கள் வெளிப்படும்போது, நாம் சொல்கின்ற நல்ல விஷயங்கள், நினைக்கின்ற நல்ல காரியங்கள், இவை அனைத்தும், சரியான முறையில் வெளிப்பட்டு, பலிக்க வேண்டும் என்றால், நம் நாக்கை, நாமே வசியப்படுத்தி வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

speaking

வசியப்படுத்தி கொள்வது என்றதும் உடனே, அதையும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நம் நாவில் இருந்து வெளிவரக்கூடிய நல்ல வார்த்தைகள் அனைத்தும், பலிப்பதற்கு, நம் வீட்டிலேயே, நம் கையாலேயே தீர்த்தத்தை தயார்செய்து, நம் நாக்கை பக்குவப்படுத்த போகின்றோம். அந்த தீர்த்தத்தை எப்படி தயாரிப்பது, என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இதற்கு தேவையானது இரண்டே பொருட்கள் தான். ஒன்று தர்பைபுல், இரண்டாவது அருகம்புல். ஒரு டம்ளர் தண்ணீர் தேவை. உங்கள் வீட்டு பூஜை அறையில், குலதெய்வத்தை நன்றாக வேண்டிக்கொண்டு, சிறிதளவு தர்ப்பைப் புல்லை துண்டு துண்டுகளாக வெட்டி, சிறிதளவு அறுகம்புல்லைறும் சிறு துண்டுகளாக கிள்ளி, ஒரு டம்ளர் அளவு சுத்தமான தண்ணீர் எடுத்து, அதில் போட்டு ஊறவைத்து விடுங்கள். அந்த டம்ப்ளரை ஒரு மூடி போட்டு மூடி விடுங்கள். காலையில் இந்த தண்ணீரை தயார் செய்து வைத்துவிட்டு, மாலை அந்த தண்ணீரை நன்றாக வடிகட்டி குடித்து விடுங்கள்.

tharpai-1

இதேபோல், மூன்று நாட்கள் தொடர்ந்து, இந்த முறையைப் பின்பற்றினாலே போதும். நீங்கள் பேசும் விதத்தில் நீங்களே வித்தியாசத்தை உணரலாம். பயம் அற்ற, துடிப்பான, தெளிவான பேச்சு உங்கள் நாவில் இருந்து வெளிப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுடைய வாக்கு திறமை அதிகரிக்கும். உங்களுடைய சொல்லிற்கு சமூகத்தில் மரியாதை கிடைக்கும். நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளுக்கு உயிர் கிடைக்கும். அதாவது, இதுநாள் வரை உங்களுடைய பேச்சுக்கு செவிசாய்க்காதவர்கள் கூட, இனி நீங்கள் சொல்வதை, காது கொடுத்து கேட்டு, அதன்படி செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பத்து பேரை வைத்து வேலை வாங்கும் முதலாளிகள், வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், பாடகர்கள், இப்படியாக ஆளுமை தன்மை கொண்டவர்கள், வாக்கு சாதுர்யத்தால் சிறப்பாக விளங்குபவர்கள், இந்த குறிப்பை, அந்தக் காலங்களிலேயே பின்பற்றி வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Arugampul juice benfits Tamil

இதற்காக இந்த தண்ணீரை குடித்துவிட்டு அடுத்தவர்கள் ‘நாசமாகப் போக’ வேண்டும் என்றெல்லாம் சொன்னால் கட்டாயம் அது பலிக்காது. நல்லதையே எண்ணுங்கள், நல்லதையே செய்யுங்கள், நல்லதே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த குறிப்பை பின்பற்றி உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை சோதித்துப் பாருங்கள்.

- Advertisement -

speaking1

இதோடு மட்டுமல்லாமல், சில குழந்தைகள் பேசுவதற்கு கொஞ்சம் தடுமாறுவார்கள். அவர்களுக்கும் இந்தத் தீர்த்தத்தை சிறிதளவு கொடுப்பதில் தவறில்லை. ரொம்பவும் சிறிய குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். பள்ளி செல்லும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.

speaking3

இந்த தண்ணீரை மூன்று நாள் பருகிய பின்பு, உங்களுடைய வாக்குவன்மை அதிகரித்தால், உங்களுடைய பேச்சுக்கு ஒரு மரியாதை கிடைத்தால், 3 மாதத்திற்கு ஒரு முறை கூட, இப்படி மேற்குறிப்பிட்ட தண்ணீரை தயார் செய்து குடிப்பதில் தவறொன்றுமில்லை. தங்களுடைய வார்த்தைக்கு மரியாதை இல்லையே என்று புலம்புபவர்கள், இந்த உலகத்தில் எத்தனையோ பேர் உள்ளார்கள்! அவர்களுக்கு இந்த குறிப்பு உபயோகமானதாக இருக்கட்டுமே.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டின் மேல் மற்றவர்களின் பொறாமை கண்கள் படாமலிருக்க இதை தலைவாசலில் மாதம் 1 முறை கட்டி வையுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -