பைரவருக்கு இந்த விசேஷ பரிகாரத்தை செய்வதால் இனிமேல் வராது என்று நினைத்திருந்த பணமும் உங்களை வந்தடையும்.

kala-bairavar-vilakku
- Advertisement -

கஷ்டப்படும் சூழ்நிலையில் கடன் கேட்பவர்களுக்கு, தங்களால் இயன்ற பணத்தை கடனாக கொடுக்கும் சில நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் கடன் வாங்கியவர் சிறிது நாட்களிலேயே, கடன் கொடுத்தவர் பற்றியும் வாங்கிய கடன் பற்றியும் மறந்து விடுவதை இன்றளவும் பார்க்கத்தான் செய்கிறோம். இவ்வாறு நீங்கள் கடன் கொடுத்த பணம் மீண்டும் உங்களை வந்தடைவதற்காக பைரவருக்கு செய்யுக்கூடிய பரிகாரத்தைப் பற்றி தான் அனைவரும் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kala-bairavar

கடன் கொடுப்பதனால் வரும் பிரச்சனைகளை தவிர்க்க முடிந்தவரை பணத்தினை எவருக்கும் கடனாக கொடுக்காமல் இருப்பதே நல்லது. அப்படியே கடன் கொடுப்பதாக இருந்தாலும் கடன் வாங்குபவரின் நிலைமையை நன்கு ஆராய்ந்து ஏதேனும் ஒரு பொருளை பணயமாக வைத்து கொண்டு பிறகு கடன் கொடுப்பதென்பது சிறந்த வழியாக இருக்கும். இவற்றையும் மீறி நீங்கள் கடனாக கொடுத்த பணம் மீண்டும் உங்கள் கைக்கு வரவில்லை என்றால், வேறு வழியே கிடையாது. இறைவனை நம்புவதை தவிர.

- Advertisement -

வாராதக் கடனை மீண்டும் நம்மிடம் வரச் செய்யும் ஆற்றல் படைத்தவர் பைரவர். சிவன் கோவிலில் இருக்கும் பைரவ மூர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ராகுகாலத்தில் 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள்ளாக ஒரு வெள்ளைத் துணியில் 27 மிளகுகள் வைத்து முடிந்து மண் விளக்கில் அந்த முடிச்சை திரியாக வைத்து, நல்லெண்ணை ஊற்றி, தீபமேற்றி தீபத்தினை சுற்றி குங்குமம் இட்டு கொடுத்த கடன்கள் திரும்பி வரவேண்டும் என்று பைரவரை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்துவர நீங்கள் பிறருக்கு கடனாகக் கொடுத்த பணம் பிறர் உங்களை ஏமாற்றி வாங்கிய பணம் இவற்றில் எதுவாக இருந்தாலும் அது உங்களை வந்தடையும்.

milagu-deepam

சிறிதளவு கல் உப்பு சிறிதளவு, வெந்தயம் சிறிதளவு, கருப்பு எள் இவை மூன்றையும் ஒன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டி கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கொடுத்த கடன் திரும்பி வர ஆரம்பிக்கும்.

- Advertisement -

ஒரு வெற்றிலையை எடுத்துக் கொண்டு அதன் மீது மூன்று கற்பூரம் வைத்து ஏற்றி, அந்தச் சுடரின் மீது ஒரு சில்வர் தட்டின் உட்புறத்தை கவிழ்த்து காண்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் தீபச்சுடர் அந்த தட்டின் மீது பட்டு கருப்பு நிற கரியாக மாறும். பிறகு தெற்கு நோக்கி அமர்ந்து அந்த தட்டில் படிந்துள்ள கரியை விரல்களால் தொட்டு, ஒரு பேப்பரின் மீது கடன் வாங்கியவரின் பெயரும், அவர் வாங்கிய தொகை எவ்வளவு என்பதனையும் எழுதி, நான்காக மடித்து பூஜை அறையில் உள்ள விநாயகரின் படத்திற்கு கீழே வைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கொடுத்த பணம் விரைவில் திரும்ப கிடைக்குமென்று நம்பப்படுகிறது.

kadan

பிறருக்கு கடன் கொடுத்தவர்கள் இங்கு கூறப்பட்டுள்ள வழி முறைகளில் ஏதாவது ஒரு வழிபாட்டு முறையினை பின்பற்றி வர உங்களது பணம் விரைவிலேயே உங்களை வந்தடையும்.

- Advertisement -