இந்த ஒரு பொருளை உங்கள் வீட்டில் வாங்கி வைத்தால் போதும். ரொம்ப நாளா பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை உடனடியாக நிறைவேறிவிடும்.

theer
- Advertisement -

ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும். நிறைய பேருக்கு சொந்தமாக இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சில பேருக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை கூட இருக்கும். சில பேருக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எந்த வண்டி வாங்கணும்  என்ற ஆசை இருந்தாலும் சரி, பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை செய்து பாருங்கள். நீங்கள் நினைத்தபடி ஒரு வாகனத்தை வாங்கி, அதில் பத்திரமாக சவாரியும் செய்யலாம். இதற்கு கூட படிகாரம் ஆன்மீகத்தில் உண்டா. நிச்சயம் உண்டு. வாங்க நேரத்தை கடத்தாமல் பதிவிற்குள் செல்வோம்.

மலைமீது உள்ள கோவிலுக்கு சென்று அங்கு உள்ள இறைவனை வழிபாடு செய்து விட்டு, அந்த கோவிலில் நடக்கும் தேரோட்டத்தை காண வேண்டும். முடிந்தால் தேரோட்டத்தில் கயிறை பிடித்து தேர் இழுக்க வேண்டும். இப்படி தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் போது, மனதார வண்டி வாங்க வேண்டும் என்ற வேண்டுதலை வையுங்கள். பழனி மலையில், மாலை நேரத்தில் தேரோட்டம் நடைபெறும். அந்த தேரோட்டத்தில் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை கலந்து கொள்வது மிகவும் சிறப்பான ஒரு விஷயம்.

- Advertisement -

இது தவிர ஒரு அழகான தேர் உருவம் கொண்ட சிறிய பொம்மையை உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வரவேற்பு அறையில் இந்த தேரை நீங்கள் வைத்து விடலாம். அடிக்கடி அந்த தேரை பார்க்கும்போதெல்லாம் நீங்களும் ஒரு வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை உங்களுடைய உள் உணர்வில் எழும். அந்த ஆசையே சீக்கிரம் வண்டியை வாங்க தூண்டிவிடும். நீங்களும் சீக்கிரமாக வண்டியை வாங்கி விடுவீர்கள். உங்களுக்கான வாகன யோகத்தை இந்த தேர் பொம்மையே கொண்டு வந்து சேர்த்து விடும். நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய ஆசை சீக்கிரம் நிறைவேறும்.

நல்ல வேலை கிடைத்து நிறைய சம்பாதித்தால் தான், நாம் நினைத்த பொருளை வாங்க முடியும் அல்லவா. நல்ல வேலை கிடைக்கவும் தொழிலில் சிறக்க கோதுமை மாவில் தீபம் போட வேண்டும். கோதுமை மாவில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்து விளக்கு போல தயார் செய்து கொள்ளுங்கள். வாரம் தோறும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த தீபத்தை கிழக்கு பார்த்தவாறு ஏற்றி வைத்து சூரிய பகவானை வேண்டிக் கொண்டால், நல்ல வேலை கிடைக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

இஸ்திரி போடக்கூடிய தொழில் செய்வார்கள் அல்லவா. அந்த தொழிலாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். உதவி என்றால் அவர்களுக்கு கறி துண்டு வாங்கிக் கொடுப்பது, கனமான இஸ்திரி பெட்டி வாங்கி கொடுப்பது, போன்ற தானங்களை செய்யும்போது உங்களுடைய தொழிலில் லாபம் அதிகரிக்கும். நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் தொழில் அதிக லாபத்தை கொடுக்கும்.

வேலை கிடைக்கும் வரை தினமும் காலையில் எழுந்து உங்களுடைய வீட்டு மொட்டை மாடியில் வெளிப்பக்கத்தில் சூரியன் உதயம் ஆகும் சமயத்தில் சூரிய நமஸ்காரம் செய்வதை விடவே விடாதீங்க. நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களை செய்து வந்தால் நல்ல சம்பளத்தோடு நல்ல வேலை கிடைப்பது உறுதி. மேல் சொன்ன பரிகாரங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -