நாளை மூன்றாம் பிறை தரிசனத்தை இப்படி செய்தால், வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடலாம். பணம், பெயர், புகழ், படிப்பு, இப்படி எல்லாமும் உங்களைத் தேடி வர அந்த ஈசனின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும்.

pirai
- Advertisement -

பிறை நிலவை தலையில் சூடிக்கொண்டிருக்கும் அந்த ஈசனை நினைத்து நாளைய(21-05-2023) தினம் மூன்றாம் பிறையில் நாம் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும். முன்னேற்றம் அடைய வேண்டும்.  சந்தோஷமும் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் மாதம் தோறும் வரக்கூடிய இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை நாம் தவறவிடவே கூடாது.

மூன்றாம் பிறை தரிசனத்தை செய்பவர்களுடைய வாழ்க்கை முன்னோக்கி தான் செல்லுமே தவிர, பின்னோக்கி வராது. மூன்றாம் பிறை தரிசனத்திற்கு அத்தனை மகத்துவங்கள் உண்டு என்பதை நாம் எல்லோருக்கும் தெரியும். நம்முடைய முன்னோர்களும் அதை தான் சொல்லி வைத்துள்ளார்கள். நாளைய தினம் வரக்கூடிய இந்த மூன்றாம் பிறை தரிசனத்தையும் யாரும் தவற விடாதீங்க.

- Advertisement -

மூன்றாம் பிறை தரிசன வழிபாடு:
அவ்வளவு எளிமையாக எல்லோர் கண்களுக்கும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் தெரிந்து விடாது. சில நிமிடங்கள் மட்டுமே, சில நேரங்களில் மட்டுமே பிறை தரிசனத்தை நம்மால் காண முடியும். மாலையில் 6:45 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த பிறை தரிசனத்தை காண்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தில் மேற்கு திசை நோக்கி பிறை நிலவை தரிசனம் செய்யலாம்.

உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயமாக அந்த பிறை நிலவு தரிசனம் செய்யக்கூடிய வாய்ப்பு கிட்டும். பிறை நிலவு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை மாலை 6:30 மணிக்கு மேல் இருட்டான பிறகு வெட்டவெளியில் வந்து மேற்கு பார்த்தவாறு நின்று கொண்டு இரண்டு கைகளையும் ஏந்திக்கொண்டு, அந்த ஈசனை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். சந்திர பகவானை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இருவரையும் சேர்த்து ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ!’ என்ற மந்திரத்தை சொல்லி உங்களுக்கு வேண்டிய வரங்களை கேட்டால் நீங்கள் கேட்ட வரங்களை தட்டாமல் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுத்து விடும்.

- Advertisement -

அந்த ஈசன் மனம் குளிர்ந்து உங்களுக்கு ஆசிர்வாதத்தை வழங்கி விடுவார். குறிப்பாக உங்களுடைய வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களையும் இந்த பிறை நிலவை பார்க்க சொல்லுங்கள். அவர்கள் அறிவாற்றல் நிறைந்தவர்களாக மாறுவார்கள். பொதுவாகவே மூன்றாம் பிறை தரிசனத்தை பார்த்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நம்மிடத்தில் உண்டு. அந்த எம்பெருமானின் ஆசியால் அறிவாற்றலை பெருக்கிக் கொள்ளவும் இந்த வழிபாடு நமக்கு கை கொடுக்கும்.

முடிந்தால் ஒரு சிறிய தட்டில் பச்சரிசியை பரப்பி, அதன் மேலே ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, இதை பிறை நிலவுக்கு ஆரத்தி எடுப்பது போல காண்பிக்கும் போது இன்னும் சிறப்பான பலன்களை நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: கருநாக்கு உள்ளவர்கள் சாபம் விட்டால் பலிக்குமா? பலிக்காதா? கருநாக்கு உள்ளவர்கள் யாராவது உங்களை திட்டி விட்டால், முதலில் இதை செய்து விடுங்கள். பிரச்சனை எதுவும் வராது.

குறிப்பாக இந்த வழிபாட்டை வீட்டில் இருக்கும் பெண்கள் செய்ய வேண்டும். இதை செய்து வீட்டில் ஐஸ்வரியம் பெருக வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் வீட்டில் அஷ்ட லட்சுமி கடாட்சமும் நிறைவாக தங்கும். வழிபாட்டை முடித்துவிட்டு அந்த பச்சரிசியை பசு மாட்டிற்கு கொடுக்கலாம் அல்லது பிரசாதம் செய்து வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடலாம். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பீரோவில் வைத்தால் நல்லது. இவ்வாறாக நாளைய தினம் வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசன நாளை, தவறவிடாமல் எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -