வாஸ்துபடி இந்த மூன்று செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் பணம் வாய்ப்பு என எதையும் நீங்கள் தேடி போக வேண்டாம். அவைகள் தானாகவே உங்களைத் தேடி வரும்.

vasthu tips
- Advertisement -

வாஸ்து என்பது வீட்டை கட்டுவதற்காக மட்டும் உருவானது அல்ல. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளிலும் இந்த வாஸ்து சாஸ்திரங்கள் நிறைந்திருக்கிறது. அதே போல நாம் வீட்டில் வளர்க்கும் மரம், செடி, கொடிகள் போன்றவற்றிலும் கூட இந்த வாஸ்து பலன் உள்ளது. அவற்றில் சில செடிகளை வளர்க்கும் பொழுது நம்முடைய அதிர்ஷ்டம், பணம், வாய்ப்பு எல்லாம் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பண வரவிற்கு வீட்டில் வளர்க்க வேண்டிய செடி:
பொதுவாகபண வரவிற்காக எல்லோரும் வளர்ப்பது மணி பிளான்ட் செடியை தான். இந்த செடி பணத்தை ஈர்த்துக் கொடுக்கும் என்பது முற்றிலும் உண்மையான ஒரு கருத்து தான். ஒரு வீட்டில் மணி பிளான்ட் எந்த அளவிற்கு செழித்து வளர்கிறதோ, அந்தளவிற்கு வீட்டில் பண பற்றாக்குறை இருக்காது என்று வாஸ்து சொல்கிறத. மணி பிளான்ட் செடி யை வடக்கு திசையில் வைத்து வளர்க்கும் போது அதன் பலன் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.

- Advertisement -

இந்த மணி பிளான்ட் செடியானது பண வரவிற்கு மட்டும் அல்ல நம்முடைய தொழில் வளர்ச்சிக்கும் இந்த மணி பிளான் செடியின் மூலம் தீர்வு காணலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது சிலருக்கு பணவரவு எல்லாம் இருக்கும் ஆனால் தொழிலோ வேலையோ அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் அப்படியே தேங்கிக் கொண்டிருக்கும் அதுபோன்ற சூழ்நிலைகளை மாற்றி அவர்கள் அடுத்த நிலைக்குச் செல்ல இதை மணி பிளான் செடியை ஒரு நீல நிற கண்ணாடி பாட்டிலில் போட்டு வடக்கு திசையில் வைத்து வளர்க்கும் போது அவர்களுக்கான இந்த தடைகள் நீங்கும் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்து பணவரவிற்காக வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை போக்கவும் வளர்க்க வேண்டிய செடி கற்றாழை. இந்த கற்றாழையை பொறுத்த வரையில் எந்த திசையில் வேண்டுமானாலும் வளர்க்கலாம். இந்தச் செடிக்கு அதிக பராமரிப்பு கூட தேவையில்லை. இந்த செடி வளர வளர நம் வீட்டில் இருக்கும் தேவையற்ற நெகட்டிவ் எண்ணங்களை எல்லாம் நீக்கி வீட்டில் உள்ளவர்கள் நல்ல மனநிலையில் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவும்.

- Advertisement -

அடுத்து முக்கியமான செடி தான் இந்த ஜேட் செடி. இதற்கு அதிர்ஷ்ட செடி என்றும் மணி பிளான்ட் என்றும் கூட ஒரு பெயர் உண்டு. இந்தச் செடியை வீட்டில் நாம் வளர்க்கும் போது அதிர்ஷ்டங்கள் எல்லாம் நம்மை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி பணவரவு தடை இல்லாமல் தாராளமாக இருக்கும் என்றும் அதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.

இந்த செடியை வளர்க்கும் போது சில நேரங்களில் அது வாடி விடும். அதற்காக நீங்கள் வருத்தப்பட தேவையில்லை. ஒரு முறை அந்தச் செடி வாடி விட்டால் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து நெகட்டிவிட்டியும் நீங்கி விட்டது என்று அர்த்தம். உடனே வேறு செடியை மாற்றி வாங்கி வந்து வளர்க்க தொடங்கி விடுங்கள். உங்களின் வருமான நிலையம் இஷ்டமும் பன்மடங்கு பெருக்கும்.

- Advertisement -

இது மட்டும் இன்றி வீட்டில் துளசி, வெற்றிலை, மல்லி, மாதுளை போன்ற மகாலட்சுமி கடாட்சம் பொருந்திய செடிகளை எல்லாம் வளர்ப்பதன் மூலமும் நம்முடைய அதிர்ஷ்டத்தை பெருக்கிக் கொள்ளலாம். வீட்டில் மரம் வளர்க்க வாய்ப்பு உள்ளவர்கள் கட்டாயமாக ஒரு எலுமிச்சை கன்றையும் வளர்க்கலாம் இதுவும் உங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

இதையும் படிக்கலாமே: கற்றாழையை வீட்டில் இப்படி வைத்தால், பீரோவில் கட்டு கட்டாக பணம் சேரும். மகாலட்சுமியின் பரிபூரணமான ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு கிடைத்து விடும்.

இந்த பதிவில் வீட்டில் வளர்க்கப்படும் அதிர்ஷ்ட செடிகள் பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள. இந்த செடிகள் வளர்ப்பு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் வாங்கி வளர்த்து உங்களின் வாழ்க்கையில் மேலும் மேலும் செல்வங்களை பெருக்கிக் கொள்ளலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -