Horoscope : நீங்கள் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற இதை செய்யுங்கள்

court
- Advertisement -

பணம் என்ற ஒன்றை கண்டுபிடித்த பின்பு உலகில் மனிதர்கள் அனைவரும் பணத்தை அடிப்படையாக வைத்தே உறவுகளை கூட தீர்மானிக்கும் நிலைக்கு வந்து விட்டனர். தற்போது பலருக்கும் அவர்களின் மூதாதையர்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை அனுபவிப்பதற்கு அவர்களின் வாரிசுகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் நிலை சர்வ சாதாரணமாகி விட்டது. இத்தகைய நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு வெற்றி உண்டாக சித்தர்கள் கூறிய ஒரு எளிய முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

coconut 1

கடவுளின் மனித உருவமாக அவதரித்த சித்தர்கள் பலர் வாழ்ந்து தங்களின் தூல உடலை நீக்கினாலும், இன்றும் ஒளி உடலுடன் வாழும் புண்ணிய பூமி தமிழ் நாடு ஆகும். ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்ட தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களும் பயன்பெற பல மந்திர, தந்திர முறைகளை தந்துள்ளனர் சித்தர்கள். அதில் வழக்குகளில் வெற்றி பெறுவதற்காக சித்தர்கள் கூறிய ஒரு வழிமுறை குறித்து இங்கு காண்போம்.

- Advertisement -

உங்களின் பூர்வீக சொத்துகள் மற்றும் வேறு வகையான பல வழக்குகளில் உங்கள் பக்கம் நியாயம் இருந்து உங்களுக்கு சாதகமாக நீதிமன்ற தீர்ப்புகள் வர சித்தர்கள் அருளிய எளிய பரிகார முறை ஒன்று உள்ளது. மாதத்தில் வருகின்ற மகம் நட்சத்திர தினத்தன்று, தென்னை மரத்தில் வளருகின்ற புல்லுருவி செடிக்கு, பூஜை செய்து, சாப விமோச்சனம் செய்ய வேண்டும்.

பின்பு அந்த புல்லுருவியை பிடுங்கி தாயத்து போன்று செய்து, உங்கள் வலது கரத்தில் அணிந்து கொண்டு நீதிமன்ற வழக்குகள் நடைபெறும் போதும், வழக்குகளில் விசாரணை மற்றும் தீர்ப்புகள் வழங்கும் போது செல்வதால் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலைப்பாடும், தீர்ப்புகளும் வருவதற்கு இந்த தாந்திரிக பரிகார முறை வழிவகை செய்கிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Valakku vetri pera in Tamil. It is also called as Court case pariharam in Tamil or Siddhar pariharam in Tamil or Pulluruvi mooligai in Tamil or Valakugalil vetri pera pariharam in Tamil.

- Advertisement -