இன்று மாலை வளர்பிறை அஷ்டமி திதி பைரவர் வழிபாடு

bairavar2
- Advertisement -

காலத்தால் வரக்கூடிய கஷ்டங்களை எல்லாம், கஷ்டம் இல்லாமல் நாம் கடந்து போக வேண்டும் என்றால், செய்ய வேண்டிய வழிபாடு கால பைரவர் வழிபாடு. இந்த காலபைரவரை வழிபாடு செய்ய உகந்த திதி அஷ்டமி திதி. தேய்பிறை அஷ்டமி திதி, என்றால் நம்முடைய கஷ்ட்ங்கள் கடன் சுமை எல்லாம் கரைந்து போக வேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும்.

வளர்பிறை அஷ்டமி திதி என்றால் நம்முடைய குடும்பம் செல்வ வளத்தில் மேலோங்க வேண்டும், நிறைய நிறைய பணம் சேர வேண்டும் என்ற பிரார்த்தனையை செய்ய வேண்டும். அந்த வகையில் இன்று வளர்பிறை அஷ்டமி திதியானது வந்திருக்கின்றது. இந்த நாளில் நமக்கு இருக்கக்கூடிய செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ள, பொருளாதாரத்தில் உயர செய்ய வேண்டிய எளிமையான ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வளர்பிறை அஷ்டமி வழிபாடு

இன்று மாலை பழமையான சிவன் கோவில்களில் எல்லாம் நிச்சயம் இந்த அஷ்டமி பூஜை சிறப்பாக நடைபெறும். அதிலும் இந்த அஷ்டமி திதி ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால் இரட்டிப்பு பலன். சாதாரணமாகவே ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகுகால நேரம். இந்த நேரம் பைரவருக்கு ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்தது, கூடவே அஷ்டமி திதியும் சேர்ந்து வந்திருக்கிறது. சொல்லவா வேணும்.

கட்டாயம் பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். உங்கள் கைகளால் பைரவருக்கு அரளிப்பூ வாங்கிக் கொண்டு போவது ரொம்ப ரொம்ப சிறப்பு. கூடவே புனுசு ஒரு சின்ன டப்பா வாங்கிக்கோங்க. புனுகு என்பது கொஞ்சம் நல்ல புனுகாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இப்போது கலப்படமான புனுகு தான் சந்தைகளில் அதிகமாக கிடைக்கின்றது.

- Advertisement -

கொஞ்சம் காசு அதிகம் கொடுத்து நம்பிக்கையான கடையில் இந்த பொருளை வாங்கி பைரவருக்கு, இன்று நீங்கள் சாத்த வேண்டும். அர்ச்சகரியிடம் இதை கொடுத்தால் அந்த புனுகிலிருந்து கொஞ்சமாக எடுத்து பைரவர் மேலே பூசி விடுவார்கள். பைரவருக்கு விமர்சையாக நடக்கும் அஷ்டமி பூஜை முடிந்தவுடன், பைரவர் பாதத்தில் வைத்த புனைகை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த புனுகை வீட்டிற்கு கொண்டு வந்து, அதிலிருந்து கொஞ்சமாக புனுகு எடுத்து உங்கள் வீட்டு பணம் வைக்கும், நகை வைக்கும் பெட்டியில் கொஞ்சமாக தடவி விடுங்கள். இந்த புனுகுக்கு சாதாரணமாகவே நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தி அதிகம் இருக்கிறது. அதுவும் காலபைரவர் பாதத்தில் வைத்த புனுகுக்கு இரண்டு மடங்கு சக்தி நிச்சயம் அதிகம் இருக்கும். இந்த வாசம் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை விரட்டி அடிக்கும்.

- Advertisement -

பணத்தை தங்க விடாமல் இருக்கும் தரித்திரத்தை விரட்டி அடிக்கும். இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டு பொருளாதாரத்தை அப்படியே மேலே உயர்த்தி விடும். அதுவும் இந்த வளர்பிறைஅஷ்டமி திதியில் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் செல்வதர்கலாகும் யோகம் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

உங்களுடைய சொத்து பத்திரம் நகைகள் இவைகளை அடமானத்தில் வைத்திருந்தால், அதை மீட்பதற்கு உண்டான வழி உங்களுக்கு தெரியாது அல்லவா. இந்த பைரவர் பாதத்தில் வைத்த புனுகை லேசாக தொட்டு அந்த சொத்து அடமான பத்திரம், நகைய அடமானம் வைத்த சீட்டு, ஏதாவது இருந்தால் அதன் மேல் கொஞ்சம் பூசி விட்டு கால பைரவா சீக்கிரம் இந்த சொத்தை மீட்டு தரக்கூடிய வழியை காட்டு என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

கூடிய சீக்கிரமாக நல்ல வழி கிடைக்கும். மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாடு அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -