வள்ளலார் வாழ்க்கை வரலாறு | Vallalar history in Tamil

Vallalar history in Tamil
- Advertisement -

வள்ளலார் வரலாறு | Vallalar varalaru

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்கிற இந்த வரியை படித்தாலோ அல்லது கேட்டாலோ உடனே அனைவரின் நினைவிற்கும் முதலில் வருபவர் “வள்ளலார்” என்பவர் தான். ஈடு இணையற்ற தவயோகியாகவும், சிறந்த சமுதாய சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்த “வள்ளலார்’ எனப்படும் வள்ளல் பெருமான் வாழ்க்கை வரலாறு (Vallalar history in Tamil) குறித்தும் அவர் குறித்த பல்வேறு தகவல்களை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

vallalar

வள்ளலார்

இயற்பெயர்இராமலிங்கம்
பிறப்புஅக்டொபர் 5,1823
பிறந்த இடம்மருதூர், கடலூர் மாவட்டம்
வேறுபெயர்வள்ளலார், திருவருட்பிரகாசர்
பெற்றோர் பெயர்ராமையா பிள்ளை - சின்னம்மையார்
துணைவியர் பெயர்தனக்கோடி
பணிதவயோகி, ஆன்மீக சொற்ப்பொழிவாளர், சத்திய தரும சாலை நிறுவனர், சமூக சீர்திருத்தவாதி
இறப்புஜனவரி 30, 1874

வள்ளலார் பிறப்பு

வள்ளலார் எனப்படும் ராமலிங்க அடிகளார் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதூரில் ராமையா பிள்ளை – சின்னம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். ராமலிங்க அடிகளுக்கு இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளும் உண்டு. ராமலிங்க அடிகளார் பிறந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே அவரது தந்தையான ராமையா பிள்ளை அவர்கள் இயற்கை எய்தினார். இதன் காரணமாக தன் குழந்தைகளுடன் ராமலிங்க அடிகளாரின் தாயார் சின்னமையார் தன் குழந்தைகளுடன் அவர் பிறந்த ஊரான தற்போதைய திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகருக்கு இடம் பெயர்ந்தார். பொன்னேரியில் சிறிது காலம் வாழ்ந்த பிறகு ராமலிங்க அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினரும் சென்னை ஏழுகிணறு பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.

- Advertisement -

வள்ளலார் வரலாறு – Vallalar history in Tamil

Vallalar history in Tamil: ஏழுகிணறு பகுதியில் வாழ்ந்து வந்த வள்ளலார் தனது மூத்த சகோதரரான சபாபதியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். தனது தம்பி ராமலிங்கம் கல்வியில் சிறந்து விளங்க விரும்பி, அவரை கல்வி சாலைக்கு அனுப்பினார். எனினும் இந்த புவி உலக கல்வியில் நாட்டம் இல்லாமல் இருந்த ராமலிங்க அடிகளார் எப்போதும் முருக தியானத்தில் திகழலானார். கல்வி கற்காமலேயே தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்த ராமலிங்க அடிகளாரை கண்ட வியந்த அவரது ஆசிரியர், ராமலிங்கத்திற்கு கல்வி எதுவும் தேவை இல்லை என கூறிவிட்டார்.

Vallalar history in Tamil.jpg

1850ஆம் ஆண்டு ராமலிங்க அடிகளாரருக்கு அவரது மூத்த சகோதரியின்மகளான தனக்கொடி எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். எனினும் திருமணம் முடித்த அன்று இரவே திருமண வாழ்க்கையை துறந்து, துறவு வாழ்க்கை மேற்கொண்டு உலக மக்கள் மற்றும் இன்ன பிற உயிரினங்களின் துயர் போக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

- Advertisement -

1858 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து கடலூர் சென்ற இராமலிங்க அடிகளார், அங்கு 1865 ஆம் ஆண்டு “சமரச சன்மார்க்க சபை” என்கிற அமைப்பை ஏற்படுத்தினார். இதன் மூலம் மக்களுக்கு கடவுள் ஒருவரே, அவர் ஜோதி வடிவானவர், ஜீவகாருண்யம், பிற உயிர்களின் பசி போக்குதல், சாதி சமய வேறுபாடுகள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவது போன்ற கொள்கைகளை பரப்பி வந்தார்.

rice-vallalar

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள் – Vallalar arputhangal

Vallalar history in Tamil: தனது யோக, தியான சாதனைகளால் பல சித்திகள் கைவறப்பற்ற வள்ளலார் அவற்றை ஆன்மீக மற்றும் பிற மக்களின் துயர் நீக்க பயன்படுத்தி உள்ளார். ஒரு முறை தனது ஆன்மீக சிந்தனை கருத்துக்களை எழுதிக் கொண்டிருந்த பொழுது இரவு வேளை ஆகிவிட்ட படியினால் தீபத்தை வைத்துக்கொண்டு வள்ளலார் எழுதிக் கொண்டிருந்தார். அப்பொழுது தீபத்தில் எண்ணெய் குறைந்து தீபம் அணைய தொடங்கிய பொழுது வள்ளலார் அந்த தீபத்தில் எண்ணையை ஊற்றுவதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றிவிட்டார். இருந்தும் அந்த தீபம் அணையாமல் எண்ணெயை ஊற்றியது போல சுடர்விட்டு எரிந்தது. இந்த காட்சியை அங்கிருந்த மக்கள் பலரும் கண்டு வள்ளலாரின் யோக ஆற்றலை எண்ணி வியந்தனர்.

- Advertisement -

ஒருமுறை வள்ளலார் அவரின் நண்பர்களுடன் இரவு வேளையில் சென்று கொண்டிருந்த பொழுது கொள்ளையர்கள் அவர்களை மடக்கி நிறுத்தி கொள்ளையடிக்க முயன்றனர். அப்பொழுது கொள்ளையர்களில் சிலர் தங்கள் கைகளில் வைத்திருந்த ஆயுதங்களால் வள்ளலார் மற்றும் அவரை சார்ந்தவர்களை தாக்க முற்பட்ட பொழுது வள்ளலார் அக்கொள்ளையர்களைப் பார்த்து “உயர்த்திய கை உயர்த்தியப்படியே நிற்கட்டும்” எனக் கூற அந்த கொள்ளையர்களின் கை அப்படியே நின்று விட்டது. அவர்களால் அந்த கையை இறக்க முடியாமல் கதறி அழுது, வள்ளலாரின் சக்தியை உணர்ந்து தங்களின் செயலுக்கு மன்னிப்பு கேட்டனர். உடனே வள்ளலார் அவர்களும் அவர்களை மன்னித்து களவு தொழிலை விட்டொழித்து நியாயமான முறையில் உழைத்து வாழும் படி அறிவுறுத்தி அனுப்பினார்.

vallalar varalaru in Tamil

சத்திய தருமசாலை

1867 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் எனும் கிராமத்தில் வள்ளலார் அவர்கள் “சத்திய தருமசாலை” எனும் அமைப்பை ஏற்படுத்தி உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஏழை, பணக்காரன், ஆண் – பெண் என பேதங்களின்றி அனைவரின் பசியை போக்குகின்ற அன்னதான கூடமாக இந்த சத்திய தரும சாலை திகழ காரணமாக இருந்தார். பசித்தவர்களின் பசிப்பினியை போக்கும் “வள்ளல்” தன்மை கொண்டவராக ராமலிங்க அடிகளார் திகழ்ந்ததால் மக்கள் இவரை “வள்ளலார்” என அன்புடன் அழைக்கலாயினர். காலப்போக்கில் இந்த சத்திய தர்மசாலை என்பது தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்றுபவர்களால் தொடங்கப்பட்டு இன்றளவும் பசித்தவர்களின் நிற, இன, மத, மொழி வேறுபாடுகளை காணாமல் அவர்களின் பசியை போக்கும் அரும்பணியை செய்து வருகின்றனர்.

வள்ளலார் கொள்கைகள் – Vallalar kolgaigal

Vallalar history in Tamil: யோகம், தியானம் போன்றவற்றில் கரைக்கண்டு ஞான நிலை அடைந்த வள்ளலார். அவர்கள் உலக மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க தக்க பல உயரிய கொள்கைகளை உலகத்தாருக்கு வகுத்துச் சென்றார். வள்ளலார் வகுத்த இந்த ஆன்மீக கொள்கைகளை இன்றளவும் அவரது கொள்கையை பின்பற்றும் பக்தர்களால் உலகெங்கிலும் பரப்பப்பட்டு வருகின்றன. வள்ளலார் உலகத்தாருக்கு அருளிய சில உயரிய கொள்கைகளை இப்போது நாம் பார்க்கலாம்.

vallalar history in tamil

  1. பசித்த வயிறு கொண்ட ஏழைகள் மற்றும் இன்ன பிற உயிரினங்களின் பசியை போக்குவது கடவுளுக்கு செய்கின்ற மிகப்பெரிய தொண்டாகும்.
  2. இறைவன் ஜோதி வடிவானவர் எனவே ஜோதி தெய்வத்திலேயே ஒவ்வொருவரும் இறைவனை தியானித்து பூஜிக்க வேண்டும்.
  3. மனிதர்களுக்கு “ஜீவகாருண்யம்” எனப்படும் கொள்கையே இறைவனை அடைய கூடிய எளிய வழியாகும்.
  4. இறந்துவிட்ட நமது முன்னோர்களுக்கு திதி, ஸ்ரார்த்தம், தர்ப்பணம் போன்ற சடங்குகளை செய்வதால் எந்த விதமான பலன்களும் நமக்கோ, அவர்களுக்கோ ஏற்படப்போவதில்லை.
  5. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் சாதி, மத, இன, மொழி, நிற பாகுபாடுகளை பாராமல் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும்.
  6. இறைவழிபாட்டிற்குரிய கோவில்களில் அந்த இறைவனை படைப்பதாக கூறி எந்த ஒரு உயிரையும் பலியிடக் கூடாது.
  7. புலால் உண்ணல், மது அருந்துதல், சூதாடுதல், புறம் கூறுதல், பிறன் மனை நோக்குதல் போன்ற கீழான செயல்களை ஒவ்வொருவரும் விட்டொழிக்க வேண்டும்.
  8. நமது வாழ்க்கையில் நம்மை அறியாமல் புகுந்து விட்ட மூடப்பழக்க வழக்கங்களை எல்லாம் அறவே நீக்க வேண்டும்.

வள்ளலார் கூறும் உணவு முறைகள்

ஒரு மனிதன் தெய்வீக நிலையை அடைய அவன் சாத்வீகமான உணவுகளையே உண்ண வேண்டும் என்பது வள்ளலாரின் கொள்கையாகும். அதன்படி இறைநிலையை அடைய விரும்புகின்ற மனிதர்கள் புலால் உணவுகள், மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்களை அறவே நீக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும், ஆன்ம மேம்பாட்டிற்கும் என்னென்ன வகையான உணவுகளை நாம் சாப்பிட வேண்டும் எனவும் வள்ளலார் அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த உணவு வகைகள் என்னென்ன என்பதை இங்க நாம் காணலாம்

Seeraga samba rice benefits in Tamil

அரிசி வகைகளில் சீரக சம்பா அரிசியை மட்டுமே நாம் உணவிற்கு பயன்படுத்த வேண்டும். கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரை, தூதுவளை, கரிசலாங்கண்ணி கீரை, பசலை கீரை, முருங்கைக் கீரை ஆகியவற்றை பக்குவம் செய்து அதனுடன் பருப்பு, மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும் என கூறுகிறார். பருப்பு வகைகளில் துவரம் பருப்பை தவிர்த்து மற்ற வகையான பருப்புகளை குறைந்த அளவிலேயே உண்ண வேண்டும் வள்ளல் பெருமான் அறிவுறுத்துகிறார்.

காய்கறி வகைகளில் வாழைக்காய், அவரைக்காய், கத்திரிக்காய், முருங்கக்காய், பீர்க்கங்காய், புடலங்காய் பூசணிக்காய், கருணைக்கிழங்கு, கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வாழைப்பழங்களில் பேயன் மற்றும் ரஸ்தாளி பழங்களை மட்டும் சாப்பிடுவதால் மனிதர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும் என வள்ளல் பெருமான் கூறுகின்றார்.

vegetable1

அன்றாடம் சமைக்கின்ற உணவை அன்றே சாப்பிட்டு முடிக்க வேண்டும். முன் இரவில் சமைத்த உணவை மறுதினம் வைத்து சாப்பிடுவது கூடாது. குழம்பு மற்றும் பதார்த்த வகைகளில் உப்பு, மிளகாய் போன்றவற்றை மிக குறைந்த அளவிலேயே சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் மிளகாய்க்கு பதிலாக மிளகு அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது என வள்ளலார் கூறுகின்றார். உணவு பதார்த்தங்களை தாளிக்க எப்பொழுதும் பசு நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், உணவு பதார்த்தங்களில் சீரகம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், அதே நேரம் கடுகு பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது எனவும் வள்ளல் பெருமான் கூறுகின்றார்.

வள்ளலார் மந்திரம் – Vallalar manthiram Tamil

Vallalar history in Tamil: மிகச்சிறந்த யோகியாக திகழ்ந்த வள்ளலார் உலக மக்கள் நன்மையுற மிகச் சிறந்த மந்திரத்தை அருளிச் சென்றுள்ளார். இறைவன் ஜோதி வடிவானவர் மற்றும் ஜீவகாருண்யம் ஆகிய இரண்டும் தனது தலையாய கொள்கைகளாக கடைபிடித்து வந்த வள்ளல் பெருமான், அந்த இரு வார்த்தைகளை மக்களுக்கு எப்போதும் நினைவு கூற தக்க வகையில் இந்த அற்புதமான மந்திரத்தை இயற்றியுள்ளார்.

vallalar history in tamil

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

என்பதே வள்ளல் பெருமான் உலக மக்களுக்காக அளித்த மிக சிறந்த மந்திரமாகும். இந்த வள்ளல் பெருமானின் மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பவர்களுக்கு அகத்திலும், புறத்திலும் இருக்கின்ற தீவினைகள் அகலும். ஜீவகாருண்யம் பெருகும். தீராத நோய் நொடிகள் ஏதும் அண்டாது. கடன், வீண் விரயங்கள் போன்றவை ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தீய குணங்கள் நம்மை விட்டு நீங்கும். நல்லோர் நட்பு அதிகரிக்கும். தீயவர்கள் நம்மை விட்டு விலகி செல்வார்கள்.

வள்ளலார் இறப்பு

தன் வாழ்நாளில் சாதி – சமய வேறுபாடுகளற்ற சமுதாய உருவாக்க அரும்பாடுபட்டவரும், மக்களுக்கு மெய்யான இறைவழியை காட்டி அவர்களை இறைநிலையை அடைய தொடர்ந்து முயற்சித்தவருமான வள்ளல் பெருமான் எனப்படும் வள்ளலார் அவர்கள் 1874 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தைப்பூச திருநாள் அன்று வடலூரில் உள்ள சித்தி வளாகத்தில் ஒரு தனி அறைகுள்ளாக சென்று தாழிட்டுக் கொண்டார். தான் தாளிட்டுக்கொண்ட அறையை யாரும் ஒரு வருட காலத்திற்குள்ளாக திறக்க கூடாது என தன் சீடர்களுக்கு கட்டளை இட்டார்.

அதன்படியே ஒரு வருட காலம் கழித்து வள்ளலார் தாளிட்ட அறையை திறந்து பார்த்த பொழுது அங்கு வள்ளலார் இருந்ததற்கான அடையாளம் ஏதுமே இல்லை என்பதை கண்டு அவரது சீடர்கள் வியப்புற்றனர். ஈடுயிணையில்லா தவ யோகியாக திகழ்ந்த வள்ளலார் ஒளியுடல் பெற்றவர் என்றும், எனவே ஜோதி வடிவான இறைவனுடன் தன்னுடைய தேகத்தை ஒளி வடிவாகி கலந்துவிட்டார் என அவரது சீடர்கள் நம்புகின்றனர். அதன்படியே இன்றும் தைப்பூசத் திருநாள் அன்று சித்தி வளாகத்தில் வள்ளலார் ஜோதி நிலை அடைந்த அறையில் ஜோதி தரிசனம் பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.

English Overview: Here we have Vallalar biography in Tamil. We can also call it as Vallalar history in Tamil or Vallalar varalaru in Tamil. We also have Vallalar ponmoligal and Vallalar manthiram in Tamil along with Vallalar unavu murai.

- Advertisement -