வாழையடி வாழையாக வம்சம் விருத்தியாக, தொழில் விருத்தியாக, வருமானம் விருத்தியாக, ஒரே ஒரு வாழைப்பூ போதும். பல தலைமுறைக்கு நம்முடைய வம்சம் வளமாக வாழும்.

amman4
- Advertisement -

நமக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆசை என்ன. நம்முடைய வம்சம் வளமாக வாழ வேண்டும். நம் வம்சத்தில் வருபவர்கள் செல்வ செழிப்போடு இருக்க வேண்டும். வம்சம் விருத்தி ஆகிக்கொண்டே இருக்க வேண்டும். பல தலைமுறைக்கு பரம்பரை தொழில் மேலும் மேலும் வெற்றி கிடைக்க வேண்டும். அவர்களுக்கு கிடைக்க கூடிய வருமானம் குறைவில்லாமல் இருக்க வேண்டும். நம்முடைய சந்ததியினர் எல்லாம் சந்தோஷமாக வாழ வேண்டும். இப்படிப்பட்ட ஆசைகள் பெரும்பாலும் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும், ஆணுக்கும் இருக்கும். நம்முடைய சந்ததியினர் நம்முடைய வம்சம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய ஒரு சிறிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

வாழையடி வாழையாக குடும்பம் தலைதூங்க வேண்டும் என்பதற்காகத்தான் வாழை மரத்தை கல்யாண வீடுகளில் கட்டுகின்றோம். இந்த வாழை மரத்தை வைத்து தான் ஒரு பரிகாரமும் இங்கு சொல்லப்பட்டுள்ளது. வாழைமரம் என்றால் வாழை மரத்தில் பூக்கும் வாழைப்பூவை வைத்து பரிகாரம். வாழைப்பூ நாம் எல்லோருக்கும் தெரியும் அல்லவா. பத்து ரூபாய் கொடுத்தால் கூட சுலபமாக கடையில் இருந்து வாங்கி விடலாம் அல்லது தோட்டத்திலிருந்து பறித்தும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

வம்சம் விருத்தியாக வாழைப்பூ பரிகாரம்:
ஒரு வாழைப்பூ எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் பிரித்து அதன் உள்ளே இருக்கும் சின்ன சின்ன பூக்கள் நீல நீளமாக சமைப்பதற்கு பயன்படுத்துவோம் அல்லவா. அதை மட்டும் தான் பரிகாரத்திற்கு பயன்படுத்துகின்றோம். நமக்கு தேவை வாழைப்பூ, வாழை நார். அந்த காலத்தில் பூ தொடுப்பதற்கு எல்லாம் வாழை நார் தான் பயன்படுத்துவார்கள். இப்போது நூல் வந்துவிட்டது. மாலை கட்டக்கூடியவர்களிடம் சொன்னால் இந்த வாழைநார் சுலபமாக உங்களுக்கு கிடைத்துவிடும். ஆக அதையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

வாழை நாரை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு, பிறகு இந்த வாழைப்பூவை அந்த வாழைநாரினால் பூ கட்டுவது போலவே கட்ட வேண்டும். ஒவ்வொரு வாழைப்பூவாக எடுத்து வாழைநாறில் கட்டி, வாழைப்பூ மாலை தொடுத்துக் கொள்ளுங்கள். வாழைப்பூவில் எண்ணிக்கை எல்லாம் கிடையாது. ஒரு முழம் வரும் அளவிற்கு இந்த மாலையை தொடுத்தால் போதும். ஆனால் இந்த மாலையை கட்டுவதில் தான் ஒரு சூட்சமம் உள்ளது.

- Advertisement -

இந்த மாலையை கட்டக்கூடிய அந்த நபர் ஒரு கன்னி பெண்ணாக இருக்க வேண்டும். வயது வந்த பெண்கள் திருமணம் ஆகாமல் இருப்பார்கள் அல்லவா. அந்த பெண்ணை வைத்து இந்த மாலையை கட்ட சொல்லுங்கள். அது உங்கள் வீட்டில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, உங்க சொந்தக்கார பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் கையால் இந்த மாலையைக் கட்டி ஒரு பசு மாடு அல்லது கண்ணு குட்டிக்கு போடலாம். மாலை போடுபவர்கள் யார் வேண்டுமென்றாலும் போடலாம்.

வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவி, குடும்பத் தலைவன் யார் வேண்டும் என்றாலும் இந்த மாலையை எடுத்துக்கொண்டு போய் பசுமாட்டு கழுத்தில் போடலாம். அப்படி இல்லை என்றால் வீதி ஓரங்களில் சின்ன சின்ன பிள்ளையார் கோவில் இருக்கும். அரசமரத்தடியில் பிள்ளையார் இருப்பார். அந்தப் பிள்ளையாருடைய கழுத்தில் இந்த மாலையை போடலாம். அல்லது பாம்பு புற்றி வழிபாடு செய்வார்கள் அல்லவா, அந்த புற்றுக்கு மேல் இந்த மாலையை அணிவிக்கலாம். இப்படி வாழைப்பூ மாலையை கட்டி நீங்கள் என்ன வேண்டுதல் வைக்கிறீர்களோ அந்த வேண்டுதல் உடனடியாக நல்ல படியாக நடக்கும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இந்த ஒரு பொருளை கொண்டு போனால் திரும்ப வரும் போது குலதெய்வம் உங்களுடனே வீட்டுக்கு வந்து விடும்.

வம்சம் விருத்தியாக வேண்டும். குலம் செழிக்க வேண்டும். தொழில் சிறக்க வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று இப்படி வளமான வாழ்வை பெறுவதற்கு இந்த சிறிய பரிகாரம் உங்களுக்கு கை மேல் பலனை கொடுக்கும். இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் செய்வது. வியாழன் வெள்ளி புதன் போன்ற கிழமையில் செய்யுங்கள். முடிந்தவர்கள் ஒரு முறை இந்த மாலையைக் கட்டி போடுங்கள். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் மூன்று முறை, ஐந்து முறை என்று கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -