கோடிக் கடனும் காணாமல் போக நாளை ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் வாராகி அம்மனை நினைத்து இந்த தீபத்தை வீட்டிலே ஏற்றி வழிபட்டாலே போதும்.

varahi
- Advertisement -

இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் தாய் யாரெனில் அது வாராகி அம்மன் என்றே சொல்லலாம். கேட்டவருக்கு கேட்ட வரத்தை அப்படியே அளிக்கும் அற்புத சக்தி வாய்ந்த தெய்வமும் இந்த வாராகி அம்மன் தான். சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னியாக திகழ்வதால் தான் இந்த வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி மிக உகந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த வாராகி அம்மனை நாம் வழிபடுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

அது மட்டும் இன்றி நம் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் தீய சக்திகளின் தொல்லையில் இருந்தும் நம்மை காக்கும் தாயாக இந்த வாராகி துணை நிற்பார். இத்தகைய பெருமை வாய்ந்த இந்த அன்னையை நாம் எப்படி வழிபட்டால் நம்முடைய துன்பங்களிலிருந்து எளிமையாக வெளி வரலாம் என்பன பற்றிய தகவலை தான் ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

கடன் தீர வாராகி அன்னைக்கு ஏற்ற வேண்டிய தீபம்
இந்த தீப வழிபாட்டை நாம் ஆலயம் சென்று செய்ய தான் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் இருக்கும் இடத்திலே நாம் வீட்டிலே வாராகி அம்மனை நினைத்து ஏற்றினாலே போதும். இந்த தீபத்தை நாளை மாலை 7 மணிக்கு மேல் ஏற்ற வேண்டும். பொதுவாக வாராகி அம்மன் வழிபாடு அந்தி சாய்ந்த பிறகு தான் செய்ய வேண்டும். அதற்கு தான் பலன் அதிகம்.

இதற்கு வாராகி அம்மன் சிலை படம் வைத்து வழிபடுபவர்கள் அவற்றை துடைத்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து மலர் சாற்றி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். வாராகி அம்மன் படம் இல்லாதவர்கள் அவர்களை மனதால் நினைத்துக் கொண்டு அவர்களுக்கு என தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தையே வாராகி அம்மன் ஆக மனதில் பாவித்து கொண்டும் வணங்கலாம்.

- Advertisement -

இப்போது வாராகி அம்மன் படத்திற்கு முன்பாக ஒரு மண் அகலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு நீல நிற சிறிய துண்டை எடுத்து அதில் கொஞ்சம் வெண்கடுகை சேர்த்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மூட்டையை அகலில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இந்த தீபம் எரியும் வேளையில் உங்கள் வீட்டில் நான்கு மூலையிலும் கொஞ்சம் வெண்கடுகை தூவி விடுங்கள்.

இப்படி தீபம் ஏற்றுவதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்திகள், கெட்ட அதிர்வலைகள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு பணவரவை தாராளமாக ஏற்படுத்திக் கொடுக்கும். இதன் மூலம் உங்களுடைய கடனை அடைப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு பலமடங்கு பெருகும். அது மட்டுமின்றி குடும்பத்தில் இருக்கும் மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் மனக்குழப்பம் பிரச்சனை இவற்றுக்கெல்லாம் இந்த வழிபாடு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

இதையும் படிக்காலமே: சுக்கிர திசை அடித்தது போல பணம் கட்டு கட்டாக உங்களிடம் வந்து சேர்ந்தது கொண்டே இருக்க நீங்கள் வைத்திருக்கும் பணத்தில் இதை மட்டும் தடவி வைத்து விடுங்கள்.

நம்பிக்கையுடன் இந்த தீப வழிபாட்டை செய்து வாராகி அம்மனின் பரிபூரண அருளை பெற்று குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை, துன்பங்கள் கடன் அனைத்தும் நீங்கி நல்ல செல்வ செழிப்புடன் வாழ வழித்தேடி கொள்ளலாம் என்ற கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -