வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை உங்கள் கையால் கட்டிப்போட்டாலே போதும். பண வரவு பல மடங்கு உயரும்.

varahi-cash
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் நமக்கு இருக்கக்கூடிய பண கஷ்டத்தில் என்ன செய்தால் அதிக பணத்தை சம்பாதிக்கலாம் என்ற சிந்தனை நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. எவ்வளவு தான் வாழ்க்கையில் பணக்கஷ்டம் வந்தாலும், கொஞ்சம் சிரமப்பட்டு நேர்வழியில் சென்று பணத்தை சம்பாதிக்க வேண்டும். குறுக்கு வழியில் சென்றால் சீக்கிரம் பணம் சம்பாதித்து விடலாம் என்று எப்போதுமே தவறான பாதைக்கு செல்லாதீங்க. அது உங்களுக்கு இன்றைக்கு நிறைய லாபத்தை வருமானத்தை கொட்டிக் கொடுத்தாலும், நாளை பெரிய சிக்கலில் கொண்டு போய் நிறுத்தி விடும். கஷ்டம் வரக்கூடிய நேரத்தில் எவன் ஒருவன் நேர்மையாக கஷ்ட காலத்தை கடந்து செல்கின்றானோ, அவனுக்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை இருக்கிறது என்று அர்த்தம்.

உங்களுடைய வாழ்வில் பணக்கஷ்டம் அதிகமாக இருக்கிறதா. தொழிலில் லாபம் வரவில்லையா. புதிய தொழில் தொடங்குவதில் தடைகள் இருக்கிறதா. வருமானம் வருவதில் பிரச்சனையா. இப்படி பணம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையோடு பின் சொல்லக்கூடிய இந்த இரண்டு பரிகாரங்களை செய்து பாருங்கள். உங்களுடைய பண கஷ்டம் நிச்சயம் தீரும். நிறைய கடன் தொல்லை உள்ளவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் ஏலக்காய் துளசி. அவ்வளவு தான். இரண்டுமே லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருட்கள். மாதம் தோறும் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தில், மகாலட்சுமிக்கு உங்களுடைய கையால் இந்த ஏலக்காய் மாலையை கட்டி போட வேண்டும்.

ஏலக்காய்களை எடுத்து மஞ்சள் நிற நூலில் கோர்த்து, மாலையாக கட்டிக் கொள்ளுங்கள். எத்தனை ஏலக்காய் என்பது உங்கள் சௌகரியத்தை பொறுத்துதான். 11, 21 ஏலக்காய் அப்படி இல்லை என்றால் 27 ஏலக்காய் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஏலக்காய் மாலையை உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி படத்திற்கு போட்டுவிட்டு துளசி இலைகளால் மகாலட்சுமி பாதங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். (வழக்கம்போல பூஜை அறையில் விளக்கு ஊதுவத்தி இவைகளை ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.) உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமியின் நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கட்டிய ஏலக்காய் மாலையை எடுத்து, வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிடலாம். உங்கள் வீட்டில் அக்கம் பக்கங்களில் குழந்தைகள் இருந்தால் இந்த ஏலக்காய்களை சாப்பிட கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் இந்த ஏலக்காய்களை எடுத்து ஏதாவது இனிப்பு சுவை நிறைந்த பாயாசம், கேசரியில் போட்டும் சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். மகாலட்சுமிக்கு மாலை கட்டி போட்ட அந்த ஏலக்காயை வீணாக்காதீர்கள். வெறும் பாலில் இந்த ஏலக்காய்களை போட்டும் குடிக்கலாம். மாதம் தோறும் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தில் இந்த பரிகாரம் செய்ய வேண்டும். நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல நிறைவான லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

இரண்டாவது பரிகாரம். வாரம் தோறும் வரக்கூடிய  சனிக்கிழமை வாராகி அம்மனுக்கு உங்கள் கைகளால் ஏலக்காய் மாலை கோர்த்து போட்டு வர வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் வாராகி அம்மனின் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு இந்த ஏலக்காய் மாலையை கட்டி உங்கள் கையால் கொடுக்கலாம். வராகி அம்மனை மனதார நினைத்து இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி, வாரம் தோறும் பிரார்த்தனை செய்து வந்தால் உங்களுடைய தொழில் முடக்கம் கடன் பிரச்சனை பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை எல்லாமே ஒரு சில வாரங்களில் சரியாகிவிடும். (வீட்டில் வாராஹி அம்மன் திருவுருவப்படம் சிலை வைத்து வழிபாடு செய்பவர்கள், வீட்டிலேயே ஏலக்காய் மாலையை கட்டி போட்டாலும் தவறு கிடையாது.)

நம்பிக்கையோடு மகாலட்சுமி, வாராகித் தாயின் பாதங்களை பற்றிக் கொள்ளுங்கள். மேல் சொன்ன இரண்டு பரிகாரங்களுமே மிக மிக சுலபமான பரிகாரங்கள் தான். உங்களால் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்ய முடிந்தாலும் செய்யலாம். முடிந்தவர்கள் இரண்டு பரிகாரத்தை செய்தும் பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -