வாழ்வை வளமாக்கும் வாராகி வழிபாடு

varahi manthiram
- Advertisement -

இன்று அதிசக்தி வாய்ந்த வழிபாடுகளில் வாராகி அன்னை வழிபாடு உள்ளது. சப்த கன்னிகளில் ஐந்தாவது அன்னையாக திகழும் வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி மிக உகந்ததாக சொல்லப்படுகிறது அதுவும் வளர்பிறை பஞ்சமி திதியான இன்றைய நாளில் வாராகி அன்னையை நினைத்து நாம் சொல்லப்படும் இந்த மந்திரம் நம்முடைய வாழ்க்கை வளமானதாக மாற்றி விடும். அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் மந்திரம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக தெய்வ வழிபாட்டில் எல்லா விதமான வழிபாடுகளை விட மந்திர வழிபாட்டிற்கு அதிக சக்தி இருப்பதாக அறியப்படுகிறது. ஆகையால் தான் நம்முடைய வழிபாட்டு முறைகளில் அனைத்து தெய்வங்களை வணங்கும் போதும் அவர்களுக்கான மூல மந்திரங்களை சொல்லி வணங்குகிறோம். அது போல ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வாராகி அன்னை மந்திர வழிபாடு

இன்று நாள் முழுவதும் பஞ்சமி திதி இருந்தாலும் வாராகி அன்னையின் வழிபாடு இரவு நேரங்களில் செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. ஆகையால் இந்த வழிபாட்டை இரவு 7 மணிக்கு மேல் 9:30 மணிக்குள்ளாக செய்யும் பொழுது அதிக பலனை பெறலாம். அது மட்டும் இன்றி விரதம் இருந்து வழிபடுபவருக்கு வழிபடலாம் விரதம் இருக்க முடியாதவர்கள் சாதாரணமாக இந்த வழிபாடு செய்யலாம்.

மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையில் முதலில் ஒரு தீபம் ஏற்றி விடுங்கள். வாராகி அன்னை படம் வைத்திருந்தால் அவர்களுக்கு பிடித்த சிகப்பு நிற பூக்களால் மாலை தொடுத்து போடுங்கள். இந்த மாலையை உங்கள் கைகளால் கட்டி போடுவது சிறந்தது. படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக்ஸகொள்ளுங்கள். படம் இல்லாதவர்கள் வாராகி அன்னையை நினைத்து தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இன்றைய தினத்தில் வாராகி அன்னைக்கு 5 முக தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு. மற்ற நாட்களில் ஒரு தீபம் ஏற்றினாலும் பஞ்சமி திதியில் இந்த ஐந்து முக விளக்கை ஏற்றுங்கள். அன்னைக்கு நெய்வேத்தியமாக ஏதேனும் கலந்த சாதத்தை தயார் செய்து வையுங்கள். இத்துடன் வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்றவற்றையெல்லாம் வைத்து பூஜைக்கு தயார் செய்து கொள்ளுங்கள்.

இப்போது இந்த வழிபாட்டிற்குரிய தீபமாக மூன்று நெய் தீபத்தை உங்கள் பூஜை அறையில் வைத்து வடக்கு பார்த்து எரியும்படி ஏற்றி வைத்து விடுங்கள். நெய் தீபம் ஏற்ற முடியாதவர்கள் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றியும் தீபம் ஏற்றலாம். பூஜை அறையில் எத்தனை தீபங்கள் ஏற்றினாலும் இன்றைய வாராகி அன்னை வழிபாட்டிற்கு என இந்த மூன்று தீபங்களை தனியாகத் தான் ஏற்ற வேண்டும். அடுத்து தீபத்தில் முன்பாக அமர்ந்து அன்னையின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

ஓம் வராஹி நம
ஓம் நமோ வராஹி நம

என்ற அன்னையின் இந்த அதிசக்தி வாய்ந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை சொல்லி முடித்த பிறகு தீப தீப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நெய்வேத்தியத்தை உங்கள் வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகள் அதிலும் பெண் குழந்தைகள் இருந்தால் முதலில் அவர்களுக்கு கொடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்

அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் நெய்வேதியத்தை எடுத்துக் கொள்ளலாம். விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் இந்த நெய்வேத்தியத்தை உண்டு விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். வாராகி அன்னையின் நினைத்து செய்யப்படும் இந்த ஒரு வழிபாடு உங்கள் வாழ்க்கையை வளமானதாக மாற்றும் என்று சொல்லப்படுகிறது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து அன்னை வழிபடுங்கள்.

- Advertisement -